ரசத்தை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மை !

Fakrudeen Ali Ahamed
சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட் களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக் கீரை, கறிவேப்பிலை, கொத்து மல்லி, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும்.

இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்த மாகச் சேர்வது ரசத்தில் தான். 
 
புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்து மல்லி ரசம் என்று பல விதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் 
 
இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்று விடும். நோய்களைக் குண மாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். 
 
வைட்டமின் குறை பாடுகளையும் தாது உப்புக் குறை பாடுகளையும் இது போக்கி விடுகிறது. அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்து ள்ளனர். 
 
இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டா லும் பசியின்மை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய் விடும்.

சித்த வைத்தியப்படி உணவே மருந்தாக வும், மருந்தே உண வாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்த வரை 100 சதவிகிதம் பொருந்தும்.

ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, ஆஸ்துமா முதலிய வற்றைக் குணப்படுத்து கிறது. 
 
 ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தை யும் குணப் படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது.
மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. கொத்து மல்லிக் கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறு கிறது.

உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக் கிறது. புது மணத் தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கை க்கு கொத்து மல்லியும், கொத்து மல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டு கின்றன.

வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல் படவும், செரிமானக் கோளாறு களைத் தடுக்கவும், 
 
நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப் படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.

கறிவேப் பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறிவேப்பிலை யால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.

ரசத்தில் சேரும் வெள்ளைப் பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறு நீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலிய வற்றைக் கட்டுப்படுத்து கிறது.

ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத் தன்மை முதலிய வற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப் படுத்துகிறது.
தசை வலியும், மூட்டு வலியும் குண மாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது. ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலிய வற்றைத் தடுக்கிறது.
 
வயிறு சம்பந்த மான கோளாறு களை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.

மழைக் காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன் கூட்டியே நோய் களைத் தடுத்து விடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம்.

வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலிய வற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் மருந்தாகக் குணப் படுத்தும். 
 
எனவே, ரசத்தைக் கூடிய வரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Tags: