புருவ முடிகளைத் திருத்தும் பெண்களுக்கு அதிர்ச்சித் தகவல் !

Anonymous
இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.
புருவ முடிகளைத் திருத்தும் பெண்களுக்கு அதிர்ச்சித் தகவல் !
எனக்குத் தெரிந்து ஸ்டிக்கர் பொட்டால் வரும் கேடுகள் பற்றி என்ன தான் பெண்களிடம் எடுத்துச் சொன்னாலும் குங்குமம் அழிந்து விடுகிறது,

என்றுகூறி ஸ்டிக்கர் பொட்டை விட மறுக்கிறார்கள்.பெண்ணைப் பேதை எனச் சொன்னதற்காக, தன்னுயிரை தானே அழிக்கும் அளவு இவ்வளவு பேதமையாகவா இருப்பது.  
புருவ முடிகளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்) (THREADING) என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி விளக்க இருக்கிறேன்.

புருவ முடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் போது புருவமுடிகள் தொட்டாலே கையோடு வந்து விடும்.

உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன.  

இந்த புருவ முடிகளைத் திருத்துகின்ற போது (த்ரெட்டிங்) (THREADING), கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் (பொட்டுவர்மம் (அல்) சுடரொளியின் காலம்), 

மின்வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சி வர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம்,
ஆண் குழந்தை பிறப்பதற்கான முக்கிய அறிகுறிகள் !
கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.

இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின் றது. விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர்.

இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன. பல ஆங்கில மருத்துவத்துக்கு பிராணன் எங்கே நிலை கொண்டிருக்கிறது.

அதை சிதைத்தால் என்ன விளை வுகள் நேரும் என்பது தெரியாது. இதனால் பல ஆங்கில மருத்துவர்கள் கத்திகளை வைக்கக் கூடாத இடத்தில் வைத்து பலரை பரலோகம் அனுப்பி விடுகிறார்கள்.
வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது. மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன, 
 
எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும்.

மேலும் எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
புருவ முடிகளைத் திருத்தும் பெண்களுக்கு அதிர்ச்சித் தகவல் !
இறைவன் உறையும் இடம் இதுவே, இதை உணர்ந்து நம் நாட்டுக் கலாச்சாரத்தி ற்கு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான விளக் கெண்ணையை கண் புருவங்களில் தீட்டுவ தானாலும்,
கொசுக்கள் மனித இரத்தத்தை விரும்புவது ஏன்? தெரியுமா?
கண்ணில் இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து, நீட்டித்து, நல்ல பிராணனும், நீண்ட ஆயுள்,

நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால் இதே போல நற்குழந்தைகளையும் பெற்று நல் ஆரோக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள் .
Tags: