குங்குமப் பூ பற்றி தெரிந்து கொள்ள !

Fakrudeen Ali Ahamed
குங்குமப் பூவின் மகிமையை பெண்களைக் கேட்டால் சொல் வார்கள். நம் நாட்டிலும், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளிலும் குங்குமப் பூ பயிரிடப் பட்டு வருகிறது.
காஷ்மீரில் பயிராகும் குங்குமப் பூ, மென்மை யிலும், சிவப்பிலும், மணத் திலும் மிகச் சிறந்ததாக உள்ளது.
ஈரானில் விளையும் குங்குமப் பூ தேனைப் போல மணக்கும். ஸ்பெயின் நாட்டுக் குங்குமப் பூவும் நல்ல மணம் வாய்ந்தது.

கிரேக்க நாட்டினரும், ரோமாபுரி மக்களும் பல நூற்றாண் டுகளாகப் பயன் படுத்தி வரும் குங்குமப் பூ,

இந்தியா வுக்குக் கடல் வணிகர்கள் மூலம் பரவியி ருக்க வேண்டும் என்று `ராஜதரங்கிணி’ என்ற நூல் கூறுகிறது.

காஷ்மீரைத் தவிர உத்தரப்பிர தேசத்தைச் சேர்ந்த குமாபுமிலும், உத்தர காண்டிலும் இது பயிராகிறது.

கி.மு. 750-ம் ஆண்டுக்கு முன்பே நம் நாட்டுக்குக் குங்குமப் பூ வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்பது பழம் நூல்கள் மூலம் தெரிய வருகிறது.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து சிறிது தொலைவில் உள்ள, பண்டைய காலத்தில் `பத்மபூர்’ என்றும்

தற்போது `பாம்பர்’ என்றும் அழைக்க ப்படும் கிராமத்தில் விளையும் குங்குமப் பூ மிகவும் பிரசித்தி பெற்றது.

சுமார் ஐயாயிரம், ஆறாயிரம் அடி உயரத்தில் இருக்கும் மலைப் பிரதேச ங்களில்,

குளிரும் வெயிலும் ஒருங்கே கூடிய பள்ளத்தா க்குகளில் குங்குமப் பூ அமோகமாய் தள தள வென்று விளைகிறது.

இதைத் தவிர மூவாயிரம், நான்காயிரம் அடி உயர்ந்த பிரதேசங் களில் 40-ல் இருந்து 60 அங்குல மழையும்,

குளிர் காலத்தில் பனியும் பெய்யும் இடங்களில் எல்லாம் குங்குமப் பூ பயிராகிறது.

குங்குமப் பூ செடி உயரமாக வளர் வதில்லை. ஆனால் ஐந்தாறு ஆண்டுகள் வரை குங்குமப் பூ இதில் மலர்கிறது.

வெங்காய வடிவத்தில் உள்ள குங்குமப் பூ கிழங்கை பூமியில் நட்டு இதைப் பயிராக்கு கிறார்கள். இந்தக் கிழங்கை மக்கள் உண்ணவும் செய்கிறார்கள்.
காஷ்மீரில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதக் கடைசி யில் குங்குமப் பூக்களைச் சேகரிக்கும் வேலை தொடங் குகிறது.

கைகளாலே பறித்து வெயிலில் மூன்று, நான்கு நாட்கள் உலர வைக்கி றார் கள்.

நன்றாக உலர்ந்த பிறகு மலரில் இருந்து இதழ் நரம்புகளைப் பிரித் தெடுக்கி றார்கள்.

நரம்பின் மேல்பாகம் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது உயர் தரமான குங்குமப் பூவாகக் கருதப்ப டுகிறது.
Tags: