கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ள !

Fakrudeen Ali Ahamed
கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்.
கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ள !
மாதவிலக்கு நிற்பது

கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பது தான். 

என்றாலும், சில பெண்க ளுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரை கூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு.

சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும்.

குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணி யாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மன நிலை களில் இருத்தல்,
குறிப்பிட்ட காலத்தில் ஹார் மோன்கள் கரு முட்டை களை வெளியிடாத நிலை ஆகிய காரணங் களாலும் மாத விலக்கு நின்றிருக்கும்.

நோய் என எடுத்துக் கொண்டால், நாள்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச் சத்துக் குறைபாடுகள், 

உடல்பருமன், அனோ ரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்ற வற்றால் மாதவிலக்கு தள்ளிப் போகலாம்.

ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.

களைப்பு

பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல் சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வு போன்றவை உண்டாகும்.

சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்து விடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வாரத்திலும், சிலருக்கு மிக விரை வாகவும் தெரியும்.

மசக்கை
கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ள !
இதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறை யாகத் கருத்தரி க்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும்.

அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்க ளுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு.

பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம்.

மாதவிலக்கு நிற்பதோடு, மேற் கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப் பதை பெரும்பாலும் உறுதி செய்து கொள்ளலாம்.

சில கர்ப்பிணி களுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும்.

எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்;

வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும்.

மீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாத விலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்க ளுக்குப் பின்னரோ தோன்றும்.

அதுசரி இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?

கரு முட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும்.

இதன் காரண மாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப் பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன.
இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட் டாமல் தவிர்க்க வேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும் போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப் படுவதும், மண்ணையும்,

அடுப்புக் கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்க மாகக் கொள்வதும் நடக்கிறது.

இதற்கு காரணம் என்ன?

இந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டி யுள்ளது.

இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப்பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர்த் தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாத போதிலும் கர்ப்பிணி களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்ற ங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம்.

இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும்.

வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச் சினைகள் குறைந்து மறைந்து விடும்.

மார்பகப் பகுதி மாற்றங்கள்

முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும் போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டா கின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதா கின்றன.

மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ் களுடன் பருத்துக் காணப் படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.

கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டி ருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற் றங்கள் தோன்றும்.

எனவே, மார்பக மாற்றங் களையும் கருத்தரிப் புக்கு அடையா ளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய் விடுகிறது.
 
மனநிலை மற்றும் எடையில் மாற்றம்
சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப் படுகிறார்கள்.

சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். 

கர்ப்பிணி களுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லா விட்டால் குறையக் கூடும்.

வயிறு பெரிதாகுதல்

கருக் குழந்தை உருண்டு திரண்டு வளரும் போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பி க்கிறது. 

இந்த நிலையில் குழந்தை யின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும்.

குறிப்பாக 18 முதல் 20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும் வரை நீடிக்கும்.

கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு. இந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறி களாகவும் இருக்கலாம். 

அதனால், கருதரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.
அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதை விட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோத னைகளை மேற் கொள்வது தான் சிறந்தது.

பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத் தன்மை ஆகியவற்றைக் கொண்டு 
 
மருத்துவரால் முதல் முன்று மாதங் களில் கருத்தரி த்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும்,

சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்ற வற்றின் முலமே கர்ப்பம் தரித்திரு ப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.

அந்த பரிசோதனை முறைகள் :

1. சிறுநீர்ப் பரிசோதனை

இந்த பரிசோதனையின் போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்து விட முடியும். இந்த பரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும்.

காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட பகுதியில் விடவேண்டும்.

கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு பதியவில்லை என்பதற் கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

2. ஹார்மோன் பரிசோதனை
இது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித் திருந்தால், ஹிமன் கோரி யானிக் கொனடோட் ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம்.
 
காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை செய்ய வேண்டும். 
 
அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம்.

இந்த பரிசோத னையின் போது சிறுநீர் கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கி ன்றன. 

இதைத் தவிர்ப்ப தற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடை முறைக்கு வந்துள்ளன.

3. அல்ட்ரா சவுண்டு பரிசோதனை

மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்தி லேயே ஒரு பெண் கருவுற்றி ருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறி விடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தை.
Tags: