ஆண்களுக்கு மார்பில் அதிக முடி? அதிர்ஷ்டமா?

Fakrudeen Ali Ahamed
ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்க ளுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம் இருக்கும் என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிவித் துள்ளது. 

ஆண்களுக்கு மார்பில் அதிக முடி? அதிர்ஷ்டமா?
பெண்களின் உடல் அமைப்பை பார்த்து சாமுத்திரிகா லட்சணம் தெரிந்து கொண் டவர்கள் ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளு ங்களேன்.

செல்வம் பெருகும்

ஆண்களின் தலை யானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் அதிக செல்வம் இருக்குமாம். தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திர மாம். தலையின் பின் பகுதி புடைத்தி ருப்பின் அறிவாளி யாக இருப்பாராம். 

அதே போல் அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந் திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். 

நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.

உலகை ஆளும் ஆண்
ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக் கண் போல் இருந்தால் உலகை ஆள்வான்.கோழி முட்டைக் கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும். 

உலகை ஆளும் ஆண்

அதே போல் உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடைய வர்கள் பணம், பதவி, புகழ் உடைய வர்களாக இருப்பர். 
நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்தி ருப்பின் தரித்திரமாம். அழகான, சிறிய வாய் உடைய வர்கள் புத்தி, சக்தி, கருணை உடைய வர்களாக, அறிஞர்களாக, பெரும் பதவியில் இருப்ப வர்களாக இருப்பர். 

அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும். உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்தி ருக்குமாம்.

தோள்கள் இரண்டும் உயர்ந்தி ருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்தி ருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.

நாக்கில் மச்சம்

நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர் களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். 

நாக்கு சிவந்தி ருப்பின் அதிர்ஷட மாம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.

காது மேல் செவி அகல மானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியி ருப்பின் அதிர்ஷட மாம். மேல் செவி உள்ளே மடங்கி யிருப்பின் கபட தாரி.

அரசாளும் ஆண்

நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டி ருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. 
 
கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திர மாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தி யாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.

மணிக் கட்டில் சதையி லிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக் கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.
பாலுணர்வு அதிகம் உண்டு

கை விரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களு க்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுளாம். 

பாலுணர்வு அதிகம் உண்டு
உள்ளங்கை சிவந்தி ருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டை யாக இருப்பின் அரசனாவான்.

அதேபோல் ஆணின் மார்பு விசால மாகவும், சதைப் பிடிப்போடும் எடுப்பாகவும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். 

கோணலாக வும், ஒன்றோ டொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங் களில் உரோமம் இல்லா திருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் பாலுணர்வு அதிகம் இருக்குமாம்.

புகழ் கிடைக்கும்
கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலு க்கு மேலே உயர மாகவும், முழங்காலு க்குக் கீழே குட்டை யாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.

கால் விரல்கள் ஒன்றோ டொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். 

பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல் மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித் தனியே விலகி யிருந்தாலும் வறுமை வாட்டும்.
Tags: