தாய்ப்பால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு - தெரிந்து கொள்ளவும் !

Fakrudeen Ali Ahamed
ஒரு வயதிற்குட் பட்ட குழந்தை களுக்கு, என்ன மாதிரியான உணவு களை கொடுக்க வேண்டும் என்பது பற்றி கூறும் பார்த்தசாரதி: தாய்ப்பால்
என்பது வரம். எல்லா விதமான தாதுப் பொருட்களும், வைட்ட மின்களும் கலந்து, இதமான சுவையில், மிதமான சூட்டில், கலப்படமே இல்லாத ஒரே பால், தாய்ப்பால் மட்டும் தான். 

குழந்தை பிறந்ததும் சிலர் சர்க்கரை தண்ணீர் கொடுப்பர்; அது மிகவும் தவறு. ஏனெனில், தாய்ப்பாலை விட தித்திப்பாக இருக்கும் அந்த தண்ணீரை சுவைத்து விட்டால், பின், குழந்தைக்கு தாய்ப்பால் சுவைக்காது. 

எனவே, குழந்தை அழுதால், அம்மா தாய்ப்பால் கொடுக்கும் வரை, அதற்கு வேறு எதுவும் கொடுக்கக் கூடாது.

பொதுவாக, சுகப் பிரசவமாக இருந்தால், குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 

சிசேரியன் என்றால், இரண்டு முதல் நான்கு மணி நேரம் கழித்து, தாய்ப்பால் கொடுத்து விட வேண்டும். எக்காரணம் கொண் டும், குழந்தைக்கு படுத்துக் கொண்டே தாய்ப்பால் கொடுக்கக் கூடாது; 

நடு சாமமாக இருந்தாலும், அமர்ந்து தான் கொடுக்க வேண்டும். காரணம், குழந்தையின் தொண்டை க்கும், காதுக்கும் இடையில், "யூஸ்டேஷன் டியூப்' என்ற ஒன்று உள்ளது. 
படுத்துக் கொண்டே கொடுக்கும் போது, அதில் பால் சென்று அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதனால், குழந்தையால் மேற் கொண்டு பால் குடிக்க முடியாது;

திடீர் திடீரென அழ ஆரம்பிக்கும். குழந்தைக்கு பசி என்றால், தொட்டிலில் இருந்தே அழும். இல்லை யென்றால், உதடுகள் துடிக்க ஆரம்பிக்கும். அருகில் உள்ள துணியை எடுத்து, சப்ப ஆரம்பிக்கும். 

இது தான், குழந்தைக்கு பசிக்கிறது என்பதற் கான அறிகுறி. மணியைப் பார்த்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம். 
குழந்தைக்குப் பசி வந்த பின், அது அனுபவித்துக் குடிக்கும் பாலே, உடலில் உணர்வு ரீதியாக கலக்கும்; பூரண சத்தும் கிடைக்கும்.

குழந்தைக்குப் பசிக்கும் நேரம், பிறந்த ஒரு மாதத்தில், தாய்க்குத் தானாகவே தெரிய ஆரம்பித்து விடும். 

பால் குடித்தவுடன் சில குழந்தைகள் கை, கால்களை முறுக்கிக் கொள்ளும்; பாலுடன் குடித்த, காற்றை வெளியேற்றவே அப்படிச் செய்யும்; கவலை வேண்டாம்.

'ம்ம்மா...’ எந்தக் குழந்தையும் இயல் பாகவே பேசும் வார்த்தை இது. ஒரு குழந்தைக்குத் தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தாய்ப்பால். 
 
அதனால் தான், கரு உண்டான நான்காவது மாதத்தில் இருந்தே தாயின் மார்ப கத்தில் கொழுப்பு சேர்ந்து குழந்தைக்குத் தேவையான உணவு தயாராக ஆரம்பி க்கிறது.

''தாய்ப்பால் ஓர் தாயிடம் உள்ள அரிய செல்வம்'' என்கிறார்கள் மகப்பேறு மருத்து வரான மோகனாம்பாள் மற்றும் தாய்ப்பால் ஆலோ சகரான ஜெயஸ்ரீ. தொடர்ந்து தாய்ப்பாலின் மகத்துவங் களையும் பட்டியல் இடுகிறார்கள் இங்கே...

என்ன வெல்லாம் இருக்கின்றன தாய்ப் பாலில்?

அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது, தாயின் மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, ரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது.

ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹார்மோன் சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக தாய்ப்பால் வெளி வருகிறது. 

பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வேலை செய்யத் தொடங்காது. இந்த நேரத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வேண்டும். எப்படி அதை ஏற்படுத் துவது? 
தாய்ப் பாலில் 'இம்யூனோக் ளோபின் ஏ’ என்கிற பொருள் இந்த நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
தாய்ப் பாலில், புரதம், கார்போ ஹைட்ரேட், அத்யாவசியக் கொழுப்பு அமிலம் போன்ற ஊட்டச் சத்துக்களும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் இ, கே ஆகிய வைட்டமி ன்களும் நிறைந்து உள்ளன.

மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சி க்குத் தேவையான டி.எச்.ஏ. (Docosahexaenoic acid) மற்றும் ஏ.ஆர்.ஏ. (Arachidonic Acid) ஆகியவையும் தாய்ப்பாலில் நிறைந்து உள்ளன. 

எனவே, தாய்ப் பாலுக்கு இணையான உணவு குழந்தைக்கு வேறு எதுவும் கிடையாது.

தாய்(ப்) பால் புகட்டும் முறை:

குழந்தை வாய் திறக்கும் வரை பொறுமை யாகக் காத்திருக்க வேண்டும். குழந்தையின் வாயைத் தாயின் மார்பகத்தில் வைத்து அழுத்தக் கூடாது. குழந்தையின் வாய் திறந்த நிலையில் இருக்க வேண்டும்.

மார்பகக் காம்பில் மட்டுமே வாய் வைக்காமல், காம்புப் பகுதியைச் சுற்றி உள்ள கறுப்புப் பகுதி முழுவதும் (Aerola) குழந்தையின் வாய்க்குள் இருக்க வேண்டும். 

குழந்தை யின் கீழ் உதடு வெளிப்புறமாகத் திறந்தி ருக்க வேண்டும். குழந்தை யின் கீழ்த்தாடை மார்ப கத்தின் கீழ்ப் பகுதியைத் தொட்ட நிலையில் இருக்கு மாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 
குழந்தை பால் கேட்கும் நேரங்களில் எல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பிறந்தது முதல் ஆறு மாதங்களுக் குத் தாய்ப் பாலைத் தவிர வேறு எந்த உணவும் குழந்தைக்குத் தேவை இல்லை. 

குழந்தைக் குத் தேவையான தண்ணீரும் கூட தாய்ப் பாலிலேயே இருக்கிறது. குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது ஆறு முறை சிறுநீர் கழித்தால், தாய்ப்பாலை நன்றாக உறிஞ்சிக் குடித்தி ருக்கிறது என்று அர்த்தம்.

சிறுநீர் மஞ்சளா கவோ அல்லது நாற்றம் எடுத்தாலோ குழந்தை தனக்குத் தேவையான அளவு தாய்ப்பாலைக் குடிக்க வில்லை என்பதை அம்மா புரிந்து கொள்ள வேண்டும். 
குழந்தை பிறந்த முதல் 10 நாட்களுக்குள் ஆறு முதல் ஏழு சதவிகிதம் எடை குறையும். 10 முதல் 15 நாட்களுக்குள் பிறந்த போது இருந்த எடை மீண்டும் வந்து விடும். 

மாறாக மெலிந்தே காணப் பட்டால் தாய்ப் பாலைச் சரிவரக் குடிக்காமல் இருக்கிறது என்று அர்த்தம். தாய்ப் பாலையும் புட்டிப் பாலையும் மாற்றி மாற்றிக் கொடுப்பது தவறு. 
 
இதனால் குழந்தையின் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். ஒவ்வாமை, ஆஸ்துமா, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகள் வரலாம். மேலும், புட்டிப் பாலை ஒரே மூச்சில் குழந்தை குடித்துவிடுவதால் சுவாசப் பிரச்னைகளும் உருவாகும். 
தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும் தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் இல்லை. மார்பகத்தில் உள்ள திசு சுரப்பி களின் எண்ணிக்கை, அவை தூண்டப்படும் விதத்தைப் பொருத்தே தாய்ப்பால் சுரக்கும் அளவு அமைகிறது. 

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம்கூட ஒரு தாயின் தாய்ப்பால் சுரப்புத் திசுக்களைத் தூண்டும்.

குழந்தை புத்திசாலி ஆக வேண்டுமா?
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவுத் திறன் மற்றும் புத்திக் கூர்மை மிகுந்த வர்களாக இருக்கிறார்கள். 

தாய்ப்பால் புகட்டும் போது, குழந்தையின் மூளை செல்கள் அதிக வேகமாக வளர்ச்சி அடை கின்றன என்று யுனிசெஃப் ஆராய்ச்சி கூறுகிறது.

தாய்ப்பால் முற்றிலும் தூய்மை யானது - பாதுகாப்பானது; கால, காலத்து க்கும் குழந்தைக ளுக்கு நோய், நொடி இல்லாத வாழ்க்கை யைக் கொடுக்க வல்லது; அதனால் தான் இதனை 'நீர்மத்தங்கம்’ என்கிறார்கள்.

அம்மா அழகாயிடுவாங்க:

குழந்தைக் குத் தாய்ப்பால் புகட்டு வதன் மூலம் அழகு கெட்டுவிடும் என்று பெண்கள் மத்தியில் தவறான கருத்து உள்ளது. 

குழந்தைப் பேறுக்குப் பின்பு சரியான வழி முறைகளைப் பின் பற்றினால் உடல் கட்டமை ப்பைச் சீராகப் பராமரிக்க முடியும்.

குழந்தைப் பேறுக்குப் பின் பெண்கள் குண்டாவது உண்டு. தாய்ப்பால் கொடுக்கும் போது, உடல் பருமனானது படிப் படியாகக் குறைந்து பழைய நிலைமைக்கு வரும். 
 
தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்கும் போது ஆக்சிடோசின் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். இதனால் கருப்பை சுருங்கி, பிரசவத்துக்கு முன்பு உள்ள நிலையை அடையும். 
கருப்பைப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வரு வதற்கான வாய்ப்பு களும் குறையும். தாய்ப்பால் கொடுத்து வரும் தாய்மார் களுக்குக் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் வரை மாதவிடாய் தள்ளிப் போகும். 

இது அடுத்த குழந்தைக் கான வாய்ப்பைத் தள்ளிப் போடவும் உதவுகிறது. ஆனால், இதற்கு மாறாக சிலருக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஏற்படவும் செய்யலாம். 

அது அவர்களது உடல் அமைப்பு, ஹார்மோன் மாற்ற த்தைப் பொருத்தது. பிரசவக் காலத்தில், ஜெஸ்டேஸ்னல் டயபட்டிஸ் (Gestational Diabetes) பாதிப்பு இருந்தால் தாய்க்கு டைப்-2 சர்க்கரை வியாதி வரும்.

ஆனால், தாய்ப்பால் கொடுத்து வந்தால் இந்தச் சர்க்கரைப் பாதிப்பும் வரு வதில்லை. மேலும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்தம் குறைந்து ஒரு விதமான திருப்தியை உணர முடியும்.

பிரசவம் முடிந்த 3 முதல் 10 மாதங்களுக் குள் உடலும் மார்ப கங்களும் 60 சதவிகிதம் தன் நிலைக்கு வந்து விடும். 
தாய்ப்பால் கொடுப்பது முழுமை யாக நிறுத்தப் பட்டதும் மார்பகங்கள் முழுமையான தன்னிலை க்கு வந்து விடும். இதற்கு கர்ப்ப காலத்தில் இருந்தே சரியான அளவில் பிரேஸியர் அணிவது உதவும். 
 
பிரேசியர் அணிவதால் சரியான அளவில் பால் சுரக்காது அல்லது பால் கட்டும் என்கிற மூட நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இதில் உண்மை கிடையாது. பிரசவம் முடிந்ததும் தவறாமல் பிரேஸியர் அணிய வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்:

சிலர், ''குழந்தை பிறந்த சமயத்துல எனக்குப் பால் நிறைய சுரந்துச்சு. ஆனா இப்போ பால் சுரக்கவே மாட்டேங்குது'' என்று சொல் வார்கள். 
குழந்தை பிறந்த முதல் ஐந்து நாட்கள் அனைத்துத் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் அதிகம் சுரப்பது இயல்பு தான். 

அதன் பிறகு பால் ஊட்டும் முறையைப் பொருத்து தான் தாய்ப்பால் சுரப்பும் அமையும். மார்பகக் காம்பில் வலி, வெடிப்பு, ரத்தம் வருதல் மற்றும் காம்பு வெளிறிப் போய் காணப் படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். 
குழந்தை மார்ப கத்தில் வாய் வைக்கும் முறை தவறாக இருந்தால் ஏற்படக் கூடிய பிரச்னை கள் தான் இது. இதற்கு தாய்ப் பாலை எடுத்து பாதிப்பு உள்ள இடத்தில் தடவினாலே போது மானது. குழந்தை மார்பகக் காம்பில் மட்டுமே வாய் வைத்துப் பால் குடித்தால்,

மார்பக த்தில் உள்ள குழாயில் ஏதாவது ஒன்று அடைத்துக் கொள்ளும். இப்படிக் குழாய் அடைத்துக் கொண்டால் அந்தக் காம்புப் பகுதியில் ஒரு புள்ளி தோன்றும். கூடவே வலியும் இருக்கும்.
தாய்ப்பாலும் சரியாக வெளிவராது. இதைத் தவிர்க்க வெது வெதுப்பான தண்ணீரைக் கொண்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்து விட்டு, மார் பகத்தை மசாஜ் செய்து விட்டாலே போதும். 

அதே போல், தாய்ப்பால் கொடுத்த உடன் மார்பகத்தைச் சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

தாய்ப்பால் என்பது குழந்தைக் கான வெறும் உணவு மட்டும் அல்ல... தாய்க்கும் சேய்க்கும் இடையே நெருக்கமான பிணைப் பையும் ஏற்படுத்தக் கூடிய உணர்வும் கூட!
Tags: