கருச்சிதைவுக்கு காரணமாகும் உருளைக்கிழங்கு !

Fakrudeen Ali Ahamed
உருளைக்கிழங்கில் நம் உடலுக்கு தேவையான சத்துகள் அதிகம் இருந் தாலும் முளைவிட்ட மற்றும் பச்சை நிறத்தில் உள்ள உருளைக்கிழங்கு களை கருவுற்ற பெண்கள் உண்பதால் கருச் சிதைவு ஏற்படக் கூடும்.
பிறக்கும் குழந்தைகள் பிறவிக்குறை பாடுகளுடன் பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது என மருத்து வர்கள் எச்சரிக் கிறார்கள். 

உருளைக் கிழங்கு களை நீண்ட நாள் சேமித்து வைப்பதால் அவற்றில் முளை விடுகின்றன. 
நல்ல உருளைக் கிழங்கோடு ஒப்பிடும் போது இவை ருசியாகவோ, ஆரோக்கிய மானதாகவோ இருப்ப தில்லை. 

முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் காணப்படும் சாக்கோனைன் (aconChine) மற்றும் சாலனைன் (Solanine) ஆகியவை நச்சுப் பொருட்களைக் கொண்டு ள்ளன. Solanine நச்சுப் பொருள் சிறிது இருந்தாலும் விஷமாக மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது. 

விலங்குகள், பூச்சிகள், பூஞ்சைக்கு எதிரான இயற்கை பூச்சிக் கொல்லிக ளாக செயல்படும் இவை தாவரங்களுக்கு நன்மை தரு பவை. 

பூச்சிக் கொல்லி களாக செயல்படும் இவற்றை மனிதன் உண்ணும் போது எத்தகைய விளைவுகள் ஏற்படும். சாக்கோனை னை விட, சாலனைன் அதிக நச்சுத் தன் மை உடையது. 

சிறிதளவு உடலில் கலந்தாலும் தீவிரமான பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியது. குடல் பாதையில் எரிச்சல் உண்டாக்கி பலவகை குடல் நோய் களுக்கு காரணமாகிறது. 

இதோடு, முளை விட்ட உருளைக் கிழங்கில் உள்ள மாவுப் பொருள் (Starch) சர்க்கரை யாக மாறி விடுவதால் உடல் நலத்திற்கு தீங்கானது. 

உருளைக் கிழங்கின் இலை, தண்டு, கனிப் பகுதியை பயன்ப டுத்தக் கூடாது. கிழங்குப் பகுதியை மட்டும் பயன் படுத்த வே ண்டும். 
அடுத்த தாக பச்சை நிறத்திட்டுகள் உள்ள உருளை க்கிழங்கு களையும் மேல் தோல் சுருங்கி உள்ள வற்றையும் பயன் படுத்தக் கூடாது. 

சூரிய ஒளிபடும் இடங்களில் அதிகநேரம் இருப்ப தால் பச்சை நிறத்திட்டுக ள் உண்டா கின்றன. 
கிளை கோல்கலாய்ட் (Glycoalkaloid) இருப்பதால், இதுவும் தீங்கானதே. இவற்றை உபயோகிக்கா மல் அழித்து விடுவதே சிறந்தது. 

நச்சுப் பொருட்கள் உள்ள முளை வந்த உருளைக் கிழங்குகளை சமைத்து சாப்பிடும் போது 
தலைவலி, வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும்.
Tags: