மாதவிலக்கை மாத்திரை மூலம் கட்டுபடுத்துவது உடல்நலத்தை பாதிக்குமா?

Fakrudeen Ali Ahamed
0
தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக் கிரஹப்பிரவேசம்… இப்படி முக்கியமான நாட்கள் வரும் போது எல்லாம், ‘அந்த நாளில் மாதவிலக்கு வந்து விட்டால்…’ என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப் பற்றிக்கொள்வது அந்தக் காலம்.
மாதவிலக்கை மாத்திரை மூலம் கட்டுபடுத்துவது
இதுவோ…. ”மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட்டுக் கொண்டால்… மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே!
விசேஷ நாட்களை யும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே!” என்று குஷியாகும் பெண்களின் காலம்!
 
அதற்காக மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது தவறான செயல் என்றும், அவ்வாறு செய்வதால் பெண்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். 
 
பீரியட்ஸ் மாதந் தோறும் நிகழும் இயற்கையான நிகழ்வு. அதை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஆபத்தானது. 
 Menstruation Pill Affect Your Health
இப்போது மாதவிடாயை தள்ளிப் போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறாமல் மாத்திரைகளின் பெயரை சொல்லி, மெடிக்கல் ஸ்டோரில் பெற்று பயன்படுத்துகின்றனர். இது உடலில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். 
 
டாக்டரின் அறிவுரை இல்லாமல் அது போன்ற மாத்திரைகளை கட்டாயம் சாப்பிடக்கூடாது. மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுப்பவர்கள் முதலில் கர்ப்பபையை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஏன் கோடைக் காலத்தில் லெகிங்ஸ், ஜீன்ஸ் தவிர்க்க வேண்டும்?
யூட்ரசின் நிலை, அதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் தாக்கி இருக்கலாம். 
 மாதவிலக்கு மாத்திரை உடல்நலத்தை பாதிக்குமா?
அது குறித்து தெரியாமல் மாத்திரை சாப்பிட்டால் அந்த பாதிப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டாக்டரின் அறிவுரை இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடும்.
 
வயிற்று புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி வர வாய்ப்புள்ளது. 
அடிக்கடி தூக்கம் வந்தால்? எச்சரிக்கை !
அடிக்கடி மாத்திரை சாப்பிட்டு மாதவிலக்கை தள்ளி போடும் போது, அதன் மாதந்திர சுழற்சியும் மாறுபடுகிறது. ஒரு முறை தள்ளிப் போனால் அடுத்த முறை சரியாகி விடும் என நினைக்க கூடாது. 
 
இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும் போது… மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். அடுத்த மாத சுழற்சியை உடம்பு டேக் ஓவர் பண்ணாது. 100 மீட்டர் ரிலே ரேஸ் போகும் போது, குறிப்பிட்ட இடத்தில் அந்த ஸ்டிக்கை இன்னொருவர் வாங்க வேண்டும். 
 மாதவிடாய் சுழற்சி
இல்லை என்றால், ஓடியவர் நின்று கொண்டே தான் இருக்க வேண்டும். அதே போல் தான் அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும் போது… ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்!
 
பொதுவாக வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட வைக்கும் மாத்திரைகளை சேர்த்தே தயாரிக்கும் வழக்கம் உள்ளது. அதனால் இஷ்டப்படி மாத்திரைகளை பயன்படுத்துவது உடலை பாதிக்கும். 
காலையில் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடாதீர்கள் !
பொதுவாக மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு பெரிய பாதிப்பை விளைவிக்க கூடியது இல்லை என்றாலும் சிறு பாதிப்பு கூட ஏற்படாத அளவுக்கு பெண்கள் உடலை பாதுகாப்பது அவசியம் என்கின்றனர் பெண் மருத்துவர்கள். 
 
மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்ககூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம். 
 
பெண்ணின் உடல் பூவுக்குச் சமமானது. மாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற்றைப் பயன்படுத்தும் போது அந்தப் பூ எத்தகைய அவதிக்கு உள்ளாகும் என்பதை உணர வேண்டும்.
முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். இக்கட்டான சூழலில் மாத்திரைகளைப் பயன்படுத்தும் போது மருத்துவரின் உரிய அறிவுரையைப் பெற்றே பயன்படுத்த வேண்டும்!”
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)