மரணத்தை காட்டும் எபிடியூரல் பிரசவ மயக்க மருந்து !

Fakrudeen Ali Ahamed
0
பிரசவத்தின் போது, வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுக்கும் பொழுது வேதனை தெரியாமல் இருப்பதற்காக பெண்களுக்கு எபிடியூரல் எனும் மயக்க மருந்து அளிக்கப்படுகிறது. 
மரணத்தை காட்டும் எபிடியூரல் பிரசவ மயக்க மருந்து
இதனைப் பற்றிய ஒரு சரியான விழிப்புணர்வு, போதுமான தகவல்கள் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படுவதில்லை. 

எதுவும் அறியாது, பிரசவத்தினை தொடங்கும் முன் திடீரென இந்த மயக்க மருந்து அளிப்படுகையில் பெண்கள் மரண வலியை உணர்வது நிதர்சனமான உண்மை.

குழந்தையை பிரசவித்து எடுப்பது மறுபிறவி எடுப்பது போன்றது என்கின்றனர்; அது முற்றிலும் உண்மையே! 
ஏனெனில் பிரசவம் தொடங்கும் முன்னரே எபிடியூரல் ஊசியின் மூலம் கர்ப்பிணிகளை மரண வாசலுக்கு அனுப்பி விட்டு, பின்னர் தான் பிரசவம் பார்க்கப்படுகிறது. 

எபிடியூரல் என்பதை சாதாரண மயக்க ஊசி என்று மட்டும் நினைத்தால், அது தவறு; இது மிகவும் சக்தி வாய்ந்த மயக்க ஊசி ஆகும். 

இதன் குணநலன், நன்மை, தீமை மற்றும் இதைப்பற்றிய பெண்களின் கருத்து போன்றவற்றை இப்பதிப்பில் அலசி ஆராய்வோம் வாருங்கள்!

எபிடியூரல் ஊசி
எபிடியூரல் ஊசி
இது ஒரு மயக்க மருந்து ஊசி; இதனை பிரசவத்தின் போது ஏற்படும் வலியை மறைக்க முதுகெலும்பின் கீழ் வரிசை எலும்புகளில் போடுவர். 

இதன் வாயிலாக வயிறு மற்றும் கீழ்ப்புற உறுப்புகளில் ஏற்படும் வலியை நீங்கள் உணராதவாறு இந்த ஊசி பார்த்துக் கொள்ளும். 

இந்த ஊசி bupivacaine, chloroprocaine, or lidocaine போன்ற மருந்து மூலக்கூறுகளை கொண்டது. சில நேரங்களில் epinephrine, fentanyl, morphine, or clonidine போன்ற மருந்துகளுடன் சேர்த்தும் கூட இந்த ஊசியை போடலாம்.
பிரசவ சமயத்தில், இந்த ஊசியை உடல் ஏற்றுக் கொள்வதற்காக 1-2 லிட்டர் Intravenous (IV) fluids எனும் திரவத்தை அளிப்பர்; இந்த ஊசியை உட்கார வைத்து அல்லது இடது புறமாக சாய்த்து படுத்த வண்ணம் போடுவர். 
ஊசி போடும் பொழுது ஒரு சிறு நூலை சிறிய குழாய் அல்லது கேதேட்டர் உடன் இணைத்து உட்செலுத்தி, மயக்க மருந்து அளிப்பர்; பின்னர் அதனை கவனமாக நீக்கி விடுவர். 

இந்த கேதேட்டர் பெண்கள் நழுவாமல், துள்ளாமல் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளும்.

மாற்றுவழி!
மாற்றுவழி!
பிரசவத்தில் இரண்டு வகை உண்டு; அவையாவன: சிசேரியன் மற்றும் சுகப்பிரசவம். இதில் சிசேரியன் பிரசவத்தின் போது தான் கண்டிப்பாக இந்த எபிடியூரல் எனும் மயக்க மருந்து அளிக்கப்படுகிறது; 

ஏனெனில் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுக்கும் சிசேரியனில் வலி பெண்களுக்கு தெரியாமல் இருக்க இது கொடுக்கப்படுகிறது. சுகப்பிரசவம் எந்தவித மயக்கமருந்து இல்லாது, இயற்கையாக நடந்து முடிகிறது.

நூறில் 50 சதவிகித பெண்கள் இந்த எபிடியூரல் போடுவதை நிறுத்தி அதற்கு மாற்று கண்டுபிடியுங்கள் என்று மருத்துவர்களை வேண்டியுள்ளனர்; 
சிசேரியனின் போது போடப்படும் இந்த ஊசியின் வலி வாழ்நாள் முழுதும் நீடிப்பதாக பல பெண்கள் கருது தெரிவிக்கின்றனர்; 

பலருக்கு இந்த மயக்க மருந்தால், முதுகு தொடர்பான நோய்களும், பிரச்சனைகளும் அதிகம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். பிரசவ வலியை விட, பலமடங்கு கொடுமையானதாக இந்த மயக்க மருந்தின் வலி திகழ்கிறது; 

அதுவும் இந்த ஊசி முதுகெலும்பு தொடரில் போடப்படுவதால், உள்ளுறுப்புகள் எங்கும் இந்த வலி எதிரொலித்து மரண வேதனையை அளிக்கிறது என பெண்கள் கூறியுள்ளனர்.

எபிடியூரல் அளிக்கும் நன்மைகள்
எபிடியூரல் அளிக்கும் நன்மைகள்
இப்பொழுது எபிட்டியூரல் ஊசி அளிக்கும் நன்மைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்:

பிரசவ வலியை எளிதாக்கி, ஓய்வான மனநிலையை தருகிறது. குழந்தை பிறப்பை எளிதாக்குகிறது, பிரசவ அசௌகரியங்களை குறைக்க உதவுகிறது. 
மயக்க ஊசி என அழைக்கப்பட்டாலும், இது பெண்களில் மரத்துப் போகும் உணர்வையே தருகிறது; ஆகையால், சுயநினைவுடன் பிரசவத்தை பெண்களால் காண முடியும். 

பிரசவத்தின் போது, மயங்கி குழந்தையை வெளியேற்றுவதில் சிக்கல் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. 

இது பெண்களின் பிரசவ வலியை மரத்துப்போக வைக்க கண்டுபிடிக்கப்பட்ட நல்ல ஒரு விஷயம்; இதனால், பெண்கள் தங்கள் பிரசவத்தை தாங்களே கண்ணால் காண முடிகிறது.

எபிடியூரல் அளிக்கும் அபாயங்கள்:
எபிடியூரல் அளிக்கும் அபாயங்கள்:
எபிடியூரல் என்ன தான் சில நன்மைகளை பிரசவ தருணத்தில் வழங்கினாலும், வாழ்நாள் முழுக்க வருத்தும் துன்பத்தையும் சிறப்புப் பரிசாக வழங்கி விடுகிறது. 
அந்த வகையில் எபிடியூரல் தரும் சில அபாயமான ஆபத்துகளை பற்றி இங்கு படித்தறியலாம். இந்த மயக்க மருந்தால், உடலின் இரத்த அழுத்தம் திடீரென குறையலாம்; 

எனவே, சரியாக சோதித்த பின்னர் இந்த ஊசி அளிக்கப்பட வேண்டும். அதிலும் முக்கியமாக குழந்தையின் உடலில் போதுமான அளவு இரத்தம் இருக்கிறதா என்று சோதித்து அறிதல் அவசியம். 

தாயை இப்பிரச்சனையில் இருந்து காக்கவே அந்த IV திரவம் போன்ற மருந்துகள் அளிக்கப்படுகிறன. இந்த மருந்தால், வாழ்நாள் முழுதும் வறுத்தெடுக்கும் தீவிர தலைவலி உருவாகலாம்; 

இது முதுகெலும்பு தொடரின் திரவம் ஊசி போடுகையில் வெளிப்படுவதால் ஏற்படுகிறது. இது 1 சதவிகித பெண்களுக்கே ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த மயக்க மருந்து ஊசி காரணமாக நீங்கள் நேரான நிலையிலேயே பல மாதங்கள் படுத்திருந்து ஓய்வு எடுக்கக்கூடும்; அசையாமல் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். 

இந்நேரங்களில் பெண்களுக்கு தட்டையான தலை ஏற்படல் போன்ற பாதிப்புகள் உருவாகலாம். 

இந்த ஊசியால், இரவு நேரங்களில், நடுக்கம், காதில் கேட்டுக்கொண்டே இருக்கும் இரைச்சல், முதுகு வலி, ஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் அரிப்பு, மயக்கம், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, வாந்தியெடுத்தல் போன்ற பக்க விளைவுகள் உண்டாகலாம்.
இந்த ஊசி போட்டுக் கொண்டதனால், உண்டான பக்க விளைவுகளை சரிசெய்ய நீங்கள் அதிக மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் நிலை உண்டாகலாம்; இது உடல் நலத்தை விரைவில் சீரழிப்பதாக மாறிவிடும்.
எலும்புகளில் பலவீனம் மற்றும் நரம்பு நண்டலங்களில் பாதிப்பு
இந்த ஊசி முதுகெலும்பு தொடரில் போடப்படுவதால், எலும்புகளில் பலவீனம் மற்றும் நரம்பு நண்டலங்களில் பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உண்டு.

மேலும் இந்த மருந்து பெண்களின் உடலில் கலந்திருப்பதால், அது தாய்ப்பால் மூலமாக குழந்தையை அடைந்து குழந்தைக்கு மூச்சு, இதய மற்றும் குழந்தையின் பிற உள் உடலுறுப்புகளில் பிரச்சனையை ஏற்படுத்தலாம்; 

மேலும் இது பிரவத்தின் தன்மையை வாக்கும் டெலிவரி, தீவிர சிசேரியன் என்று கூட மாற்றலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆகையால், எபிடியூரல் பயன்பாடை உடலில் தடுத்து, குழந்தை மற்றும் தாயின் நலத்தை காக்க இந்த பதிப்பை பரவி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் தோழர் - தோழிகளே! சுகப்பிரசவத்தை முக்கியத்துவத்தை பற்றி அனைவரையும் உணரச் செய்ய உதவுங்கள்!

இனியாவது பெண்களை பெண்ணாக மதிப்போம்.....
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)