சிசுவையும் தாயையும் இணைக்கும் தொப்புள் கொடி !

Fakrudeen Ali Ahamed
0
தாயின் வயிற்றி லிருந்து பிறக்கும் சிசுவுக்கும் தாய்க்கு மான இணைப்புக் கொடியின் மிச்ச அடை யாளம் தான் தொப்புள். முட்டை யிட்டுப் பால் கொடு க்கும் மிக அரிதான பாலூட் டிகள் நீங்கலாக 

தொப்புள் கொடி


ஏனைய அனைத்துப் பாலூட்டி களுக்கும் அவற்றின் குட்டி களுக்கும் தொப்புள் இருக்கும் & மனிதன் உள்பட!

கருவுற்ற பெண்க ளின் கருப்பையில் அமைந்தி ருக்கும் முக்கியப் பகுதி, தாமரை இலை வடிவ த்தில் அமைந்த ‘ப்ளாசென்டா’.

அரை கிலோ எடையுடன் சுமார் 8 அங்குலம் வரை விட்டம் உடைய இதன் மையத் திலிருந்து ஒரு குழாய் தொடங்கி, 

அது வயிற்றிலிருக்கும் சிசுவின் தொப்புள் பகுதியில் சேர்கிறது. இதுதான் தொப்புள்கொடி. தாயின் உடலி லிருந்து குழந்தை யின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் தொப்புள் கொடி மூலம்தான் குழந்தைக்குப் போய்ச் சேருகிறது.

தொப்புள் கொடி ஓர் இருவழிப் பாதை. ரத்தத்தில் உள்ள கழிவு ப்பொருட் களும் இதே கொடியின் வழியாகச் சென்று தாயின் உடம்பில் கலக் கின்றன.

இந்தத் தொப்புள் கொடி சாதார ணமாக 20 செமீ நீளமும் 2 செமீ விட்டமும் கொண்ட குழல் போல இருக்கும். 

சில வேளை களில் இது மிக நீண்ட தாக அமைந்து விடுவதும் உண்டு. அப்போது குழந்தை யின் கழுத்தில் ஒரு மாலை போல் இது சுற்றிப் பிறக்கும்.

‘மாலை சுற்றிப் பிறந்தால் மாமனுக்கு ஆகாது’ என்ற மூட நம்பிக்கையும் உண்டு.

குழந்தை பிறந்த வுடன் தொப்புள் கொடி சரியாக அகற்றப் படா விட்டால், தொற்று ஏற்பட்டு தொப்புள் ஒரு சின்ன பலூன் போல வாழ் நாள் முழுக்க இருந்து விடும்.

விண்வெளிக் கப்பலில் இருந்து வெளிவரும் விண்வெளி ஆராய்ச்சி யாளரு க்கும் விண்வெளிக் கலத்து க்கும் இடையே உள்ள இணைப்புக் குழாயையும் தொப்புள் கொடி என்று கூறு வார்கள். 

மின் இணைப் புகளில் பலவித வயரிங்கு களிலும் தொப்புள் கொடி என்னும் வார்த்தை உபயோகப் படுத்தப் படுகிறது.
ஒரு குழந்தையைப் பெற்றோரி டமிருந்து பிரித்து ஹாஸ்டலில் விடும் போது தொப்புள் கொடி துண்டிக் கப்படு கிறது என்று உருவக மாகச் சொல்லுதல் சகஜம்.

நோய் எதிர்ப்பு சக்திக் குறை பாட்டை போக்குவது, நீரிழிவு நோய் எதிர்ப்பு என 45 வகை நோய் களைக் குண மாக்கும் தன்மை தொப்புள் கொடியில் உள்ள ரத்தத் தில் இருக்கிறது.

தொப்புள் கொடி ரத்த த்தில் ஏராள மான ஸ்டெம் செல்கள் இருக் கின்றன. ரத்தப் புற்று நோய் சிகிச்சை யின் போது எலும்பு மஜ்ஜை பாதிக்கப் படலாம். அப்படி நிகழ் ந்தால் ஸ்டெம் செல்களின் தேவை ஏற்படும். 

இப்போது தங்களின் குழந்தை யின் தொப்புள் கொடி ரத்தத்தைப் பாது காப்பாக ஆண்டுக் கணக்கில் சேமித்து வைக்க பலர் முன் வருகின்றனர்.

ரத்த வங்கி களைப் போலத் தொப்புள் கொடி ரத்த வங்கிகள் பிரபல மாகி வருகின்றன.

தொப்பு ளுக்கு நாபி என்றும் பெயர் உண்டு. ஆன்மிக வாதிகள் திருமாலின் நாபியில் மலர்ந்த தாமரை யானது லட்சுமி தேவியின் வடிவம் என்பார்கள்.

உலகப் படைப்பைப் பற்றிச் சொல்லும் போது திருமாலின் நாபியில் இருந்து எழுந்த  தாமரைப் பூவில் அமர்ந்து நான்கு முகங் களைக் கொண்ட பிரம்மன்,

படைத்தல் தொழிலை மேற் கொண்ட தாகக் கூறு வார்கள். திருமா லுக்கு பத்மநாபன் என்று பெயர் இருப் பதையும் கவனிக் கலாம்.

தொப்புளுக்கு இலக்கிய ங்களில் கொப்பூழ் என்று பெயர். பரிபாடல், ‘மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீர் ஊர்’ என்று மதுரையைச் சொல்கிறது. 

அதாவது திருமாலின் நாபித் தாமரை போல மதுரை இருக்கிற தாம்! பூவின் இதழ் களைப் போல தெருக்கள் உள்ளன என்றும், பூவின் நடுப் பகுதியைப் போல அண்ணலின் கோயில் இருப்ப தாகவும் பரிபாடல் பேசுகிறது.

பெல்லி பட்டன்

தொப்பு ளுக்கு பெல்லி பட்டன் என்றும் பெயர் உண்டு. இடுப்பை அசைத்துத் தாள லயத் துக்கு ஏற்ப ஒசிந்தாடும் நடனம் ‘பெல்லி டான்ஸ்’ எனப்படு கிறது. 

இத்தொப்புள் நடனம் ஓரியன்டல் நடனம் எனவும் அழைக்கப் படுகிறது. அநேக மாக எல்லா கேளிக்கை நடன நிகழ்ச்சி களிலும் கேபரே நடன நிகழ்ச்சி களிலும் இது இடம் பெற்றிரு க்கும்.

இது மத்தியக் கிழக்கு நாடு களின் பாரம்பரிய நடன மாகும். ஐரோப்பிய நாடுகளில் பரவிய பெல்லி டான்ஸ், இடத்துக்கு இடம் ஆடப்படும் போது

பல மாறுதல் களையும் நடன அசைவு களையும் கொண் டாலும், அடிப்படை யாய்ப் பார்வை யாளர்க ளுக்குக் காட்சி தருவது நடன மங்கை யரின் தொப்புளே!

பண்டைய எகிப்து சிற்பங் களில் பெல்லி டான்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருப் பதாகச் சொல் வாரும் உண்டு. பாலஸ் தீனத்தில் இது ‘ராக்ஸ் பலாடி’ என அழைக்கப் படுகிறது. கையில்

தீப்பந்தம், வாத்தியக் கருவிகள், பாம்பு போன்ற வற்றைப் பிடித்துக் கொண்டும் தொப்புள் நடனங்கள் நடை பெறுகின்றன.

தொப்புள் நடனங்கள் சிறந்த உடற் பயிற்சி என்றும், பெண் களின் எலும்பு களை வலு விழக்கச் செய்யும் ஆஸ்டியோ போரோசிஸ் நோய் வராமல் தடுக்கும் எனவும் சொல்கி றார்கள்.
மேலை நாடுகளில் இருந்த ஒரு கலாசாரம் மும்பை வழி யாக இப்போது சென்னை க்கும் வந்திரு க்கிறது. காதிலும் மூக்கிலும் வளை யங்கள் மாட்டியது போக 

இப்போது தொப்பு ளிலும் வளைய ங்களை மாட்டிக் கொள்வதே அது! பலவித அளவுகளில்,

வித விதமான டிசைன் களில் தொப்புள் வளை யங்கள் இருக்கி ன்றன. சில பெண்கள் தங்கள் தொப்புளைச் சுற்றிப் பச்சை குத்திக் கொள்வதும் உண்டு.

வளைய ங்களை மாட்டுதல், தொப்புளில் பச்சை குத்துதல், தொப்புள் அழுந்தும் படியாக டைட் ஜீன்ஸ் அல்லது பெல்ட் போன்ற வற்றை மணிக் கணக்கில் அணிந் திருப்பது, 

சரியாகத் தொப்புளைச் சுத்தம் செய்யாதது, அழுக்கான தண்ணீரில் குளிப்பது போன்றவை தொப்புளில் தொற்று நோய் ஏற்படக் காரணங் களாகும்.

Natural Orifice Transluminal Surgery (NOTES) என்பது, உடலில் இயற்கை யாகவே உள்ள துவார ங்களின் மூலம் கேமரா வையும் கருவி களையும் செலுத்தித் 

தழும்பு இல்லாமல் மேஜர் ஆபரேஷன் களையும் வெற்றி கரமாகச் செய்யும் ஓர் உத்தி. இப்படி தொப்புள் மூலமா கவும் கருவி களை நுழைத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை இப்போது பரவி வருகிறது.

தொப்புள் நடனங்கள்

2009 பிப்ரவரி 5 அன்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சான் டியாகோ மெடிக்கல் சென்டரைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள்

ஒரு நோயா ளியின் தொப்புள் மூலம் கருவி களைச் செலுத்தி அவரின் பழுதான சிறு நீரகத்தை வெற்றிகர மாக அகற்றி னார்கள்.
இது உபயோக மான கண்டு பிடிப்பு என்றால், பம்பரம் விடுவது, ஆம்லெட் போடுவது என பலவித த்திலும் சினிமாக் காரர்க ளுக்கு தொப்புள் பயன் பட்டிருக்கிறது. 

தொப்புள் இல்லாத பெண் என்றால் ஆதி மனுஷி யான ஏவாளைச் சொல்ல லாம். அவள் ஆதாமின் விலா எலும்பி லிருந்து உருவாக் கப்பட்ட தால் தொப்புள் இருக்க வாய்ப் பில்லை அல்லவா!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)