சமூகப் பிரச்னையாக மாறி வரும் குழந்தை யின்மை?

Fakrudeen Ali Ahamed
நம் பாரம்பர்ய த்தில் பெண்ணை இந்தச் சமூகம் அணுகும் முறையில் இன்றை க்கும் பெரிய அளவில் மாற்ற மில்லை.


வயது இருபதைத் தொட்டதுமே திருமணப் பேச்சைத் தொடங் கிவிடுவார் கள்.

பெற்றோரும் உற்றார் உறவினரும் மாப்பிள்ளை, அது இது என அவளுடைய திருமணம் தொடர்பான பேச்சையே சதா பேசிக் கொண்டிருப் பார்கள்.
திருமணம் முடிந்து சரியாக மூன்று மாதங்கள் ஆனதும் அந்தக் கேள்வி எல்லாத் தரப்பி லிருந்தும் அம்பாக மாறி அவள் மேல் வந்து விழும்...

`என்ன... ஏதாவது விசேஷமா?' பின்னே... திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. குழந்தை..? இந்நேரம் அந்தப் பெண் கருவுற்றிருக்க வேண்டாமா?

கோயில், விழாக்கள் என எங்கே அந்தப் பெண் போனாலும், இந்தக் கேள்விகளிலிருந்து அவள் தப்ப முடியாது.

கருவுறுதல் தள்ளிப் போகப் போக மற்றவர்கள் பேசும் தொனியில் மாற்றங்கள் ஏற்படும்.

சில ஆண்டுகள் கடந்தும் குழந்தை பிறக்க வில்லையா? அவ்வளவு தான்.

பைசா செல வில்லாமல், எந்த வஞ்சனை யும் வைக்காமல், ஒரு `சிறப்புப் பட்ட’த்தைக் கொடுத்து விடுவார்கள்.

அந்தப் பெண் நாத்தனார், மாமியார், அக்கம் பக்கத்தார் மட்டுமன்றி தாலிகட்டிய கணவனாலும் இழிவாக விமர்சிக்கப் படுவார்.

குழந்தையின்மை

அண்மை யில் சென்னை யில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு மிகப் பெரும் உதாரணம்.

`என்னை ஆண்மை யில்லாதவன் என்று சொன்னதால் அவளைக் கொன்றேன்’’ என்று

மனைவியைக் கொலை செய்ததற் கான காரணத்தை வாக்கு மூலமாக அளித்திருக் கிறார் ஒரு கணவர்.

மருத்துவர் ரவீந்திர நாத் குழந்தை யின்மைப் பிரச்னையில் பெண்ணிடம் குறை இருந்தாலும்,

ஆணிடம் குறை இருந்தாலும் ஒட்டு மொத்தமாகப் பெண்களின் மீதே பழி விழுகின்றன.

இதற்கெல்லாம் காரணம், குழந்தை யின்மை என்பது குடும்பப் பிரச்னை என்பதைத் தாண்டி சமூகப் பிரச்னை யாக மாறி நிற்பது தான்,

அந்த அளவுக்குத் தீர்க்க முடியாததா குழந்தை யின்மை பிரச்னை... இதை எப்படிச் சரி செய்வது?

சமூக சமத்து வத்துக்கான மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திர நாத்திடம் பேசினோம்...
`பிளாஸ்டிக் கிலிருந்து வெளியேறும் நச்சுகள், உணவுப் பழக்க வழக்கங்கள், சுற்றுச் சூழல் மாசுபாடு, பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த காய், கனிகளைச் சாப்பிடுவது,

போதைப் பொருள்களை அதிகமாக உட்கொள்வது போன்றவையே குழந்தை யின்மைக்கு முக்கியக் காரணங்கள். அதே நேரத்தில் இது தீர்க்கக் கூடிய ஒரு பிரச்னை தான்.
குழந்தை யின்மைக்காகப் பெண்களைத் துன்புறுத்துவது போன்ற அவலங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே யிருக்கின்றன.

குழந்தை யின்மை என்றாலே `அது பெண் களுக்கு ஏற்படும் ஒரு குறைபாடு’ என்ற

ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக் கிறார்கள். இதற்கு அறியாமை தான் முதல் காரணம்.

செயற்கை கருத்தரிப்பு

ஆண், பெண் இருவரு க்குமே குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. முதலில், தம்பதியரில் யாருக்குக் குறைபாடு என்பதைக் கண்டறிய வேண்டும்.

இதைக் கண்டறிய மருத்துவ த்தில் இப்போது பல நவீனத் தொழில்நுட்பங்கள் வந்து விட்டன.

சினைப்பை நீர்க் கட்டி

குறை களைக் கண்டு பிடித்து விட்டால் எளிதாகச் சரி செய்து விடலாம்.

ஆனால், அதற்கு ஆகும் செலவு அதிக மென்பதால் பலரால் இந்த பரிசோதனை களுக்கும்

சிகிச்சை களுக்கும் போக முடியாமல் போய் விடுகிறது. இதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் இலவசக் கருத்தரிப்பு மையங் களை (Fertility centre) ஏற்படுத்த வேண்டும்.

மாவட்ட மருத்துவ மனைகளு க்கும் இதை விரிவுப் படுத்தலாம்.

இன்றளவில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப் படும் பிரச்னை யாகக் குழந்தை யின்மை இருக்கிறது.

அதைத் தடுப்பதற் கான பெரிய முன்னெடுப்புகள் அரசாங் கத்திடம் இல்லை.

அதே போல குழந்தை களைத் தத்தெடுப்பது தொடர்பான விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

அரசாங்கக் காப்பீட்டுத் திட்டத்தில் இதையும் சேர்க்க வேண்டும்’’ என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.
மருத்துவர் ஶ்ரீகலா``குழந்தை யின்மைப் பிரச்னை இப்போது பரவலாகக் காணப் படுகிறது என்பது உண்மை தான்.
ஆண்களு க்கு விந்தணு க்களின் எண்ணிக்கைக் குறை பாடும், பெண்களு க்கு உடல் பருமன் பிரச்னையுமே இதற்கான முக்கியக் காரணங்கள்.

உடலுழைப் பின்மை, உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக் காமல் இருப்பது தான் உடல் பருமன் ஏற்படக் காரணம்.

எனவே, சிறு வயதி லிருந்தே போதிய உடற் பயிற்சிகள், நடைப் பயிற்சி செய்து உடல் எடை அதிகரிக் காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த தாகப் பெண்களுக்கு பி.சி.ஓ.டி (Polycystic Ovarian Disease) எனப்படும் சினைப்பை நீர்க் கட்டியும் குழந்தை யின்மைக்கு ஒரு காரணம்.

வாழ்வியல் மாற்றங்கள், தவறான உணவுப் பழக்க வழக்கங் களால் சினைப்பை நீர்க்கட்டி ஏற்படுகிறது.

உடற் பருமன்

அதிக மன அழுத்தம், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் ஆகிய வற்றைத் தவிர்க்க வேண்டும். வலியுடன் கூடிய மாதவிடாய்,

தாமதமாக மாத விடாய் வருவது போன்ற வற்றுக்கு ஆரம்பத் திலேயே சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறைந் தபட்சம் 21 வயதுக்கு மேல், அதிகபட்சம் 30, 35 வயதுக்குள் திருமணம் செய்து விட வேண்டும்.

தைராய்டு பிரச்னை இருந்தாலும் உடல் பருமன் அதிகரி க்கும். எனவே தைராய்டு பிரச்னைக் கான சிகிச்சை களை உடனடி யாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கருத் தரித்தலில் பிரச்னை இருந்தால், மருத்து வரை அணுகி அதற்கான சிகிச்சை களை எடுத்துக் கொண்டால் சரி செய்து விடலாம்.

இது சரி செய்யக் கூடிய ஒரு பிரச்னை தான்’’ என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர்நல மருத்துவர் ஶ்ரீகலா.

மருத்துவர் சேகர்ஆண்களுக்கு எதனால் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது... தவிர்ப்பது எப்படி? விளக்குகிறார் சிறுநீரக மருத்துவ நிபுணர் சேகர்...

``மன அழுத்தம், புகைப் பிடித்தல், மது அருந்துதல், உடல் சூடு மற்றும் மரபணு ரீதியான பிரச்னைகள் ஆகியவையே ஆண்மைக் குறை பாட்டுக்குக் காரணங்கள்.

இவை தவிர, சிறு வயதிலிருந்தே இரண்டு விதைகளும் போதிய வளர்ச்சி யில்லாமல் இருப்பது,

விந்தணுக்கள் வரும் குழாய்களில் ஏற்படும் அடைப்பு போன்றவை யும் காரணங் களாக இருக்கின்றன.

இரண்டு விதைகளும் போதிய வளர்ச்சி யில்லாமல் இருப்பது


அதிக உடற்பயிற்சி செய்பவர் களுக்கும் இது போன்ற பாதிப்புகள் இருக்கும். உறவினர் களுக்குள் திருமணம் செய்து கொள்வதும் குழந்தை யின்மைக்கு ஒரு காரண மாக இருக்கிறது.
சில ஆண் களுக்கு விந்தணு க்களில் போதிய ஆற்ற லில்லாமல் இருக்கும். குழந்தை யின்மைப்

பிரச்னை எந்தக் காரணத்தால் ஏற்பட்டிரு க்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கான சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் சரி செய்து விட முடியும்.''
Tags: