அழகைப் பேண பாலூட்டுவதை நிறுத்தலாமா?

Fakrudeen Ali Ahamed
0
மருந்துக் கடைக்கு வந்த ஒருவர் “குழந்தை பிறந்து மூன்று மணி நேரம் தான். அதற்குப் பால் கொடுக்க ஏதாவது மாப்பால் இருக்குதா?” என்று கேட்டார். இதைக் கேட்டதும் அருகில் இருந்த எனக்குத் தலை சுற்றியது.
குழந்தைக்குத் தாய்ப் பால்

பின்னர் “குழந்தை பிறந்த உடனே, பிள்ளை இல்லாத வர்கள் வேண்டி வளர்க் கலாம். அவ்வாறா னவர்கள் புட்டிப் பாலையே நாடுவர்” என்று நானும் என்னைச் சமாளித்தேன். 

“குழந்தை பிறந்து ஆறு மாதம் வரைக்கும், தாய் பிள்ளைக்குப் பால் கொடுத்து ஆகவேணுமே” என்று அருகில் நின்ற ஆச்சி சொன்னாள். அந்தாளோ, “பிள்ளை க்குப் பால் கொடுத்தால் தாயின் அழகு கெட்டுப் போயிடும்” என்றார். “ஆண்டவா! இதென்னடா கொடுமை இது? 
பாலூட்ட விரும்பாத பெண்களைப் படைத்தது உன் குற்றமே!” என்று நான் கேட்டிரு ந்தால் “அவர் களுக்கு நோயைக் கொடுத்து வாட்டுவதை அறியாயோ?” என்று எனக்குப் பதிலளித் திருப்பார். நாடு எப்படிப் போகுது என்று சொல்ல இதைவிட வேறு சான்று முண்டோ? 

தாய், சேய் நலன் பற்றிய அறிவு போதாமையே இதற்குக் காரணம். இதற் காகவே நேரில் நான் கண்ட காட்சியை இங்கு வெளிப்படுத் துகிறேன். இக்காட்சியே இப்பதிவை எழுதத் தூண்டியது.

பிறந்த குழந்தைக்குத் தாய்ப் பால் தான் முழுமை யான உணவு. குறைந்தது ஆறு மாதம் ஆயினும் பதினெட்டு மாதம் வரை தாய் தன் குழந்தை க்குப் பாலூட்ட லாம். 

புட்டிப் பாலை விடத் தாய்ப் பாலே சிறந்தது என எத்தனையோ விளம் பரங்கள் இட்டும் எங்கட தாய் மாருக்கு எப்பனும் விளங்குதி ல்லையே! தன் குழந்தை க்குத் தாய் பாலூட்டுவ தால் அழகு கெட்டுப் போகும் என்ற பேச்சை ஏற்க முடியாது. 
பாலூட்டுவதை நிறுத்தலாமா?

இடையிலே வந்த அழகு இடை யிலேயே போய்விடும். ஆயினும், அழகைப் பேணுகின்ற காலம் வரை அழகு இருக்கும். தாய் பாலூட்டுவ தால் அழகைப் பேண இயலாது என்பது முட்டாள் கதை. கணவன் மாருக்கு உதைக்கிற உதையில மனைவிமார் திருந்து வினம். 

மனைவிமார் இளமை யாய் இருக்க வேணு மென்பதற்காக தாய்ப் பாலூட்டுவதை நிறுத்த கணவன்மார் உடன் படுவது தவறு. தாய்ப் பாலூட்டு வதை நிறுத்தி இளமையைப் பேண விரும்பும் பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருந்திரு க்கலாம்.
ஆய்வு களின் படி புட்டிப் பாலூட்டி வளர்த்த குழந்தையை விடத் தாய்ப் பாலூட்டி வளர்த்த குழந்தை நல்ல உள, உடல் நலத்தோடு இருப்ப தாகத் தெரிவிக்கப் படுகிறது. குழந்தை உள, உடல் நலத்தோடு வளரத் தாய்ப் பாலூட்டு வதையே எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைய இளைய பெண்களே! அழகைப் பேணலாமென எண்ணிக் குழந்தை பெற்றுத் தாய்ப் பாலூட்டாத பெண்களுக்கு மார்பக நோய்கள் வர வாய்ப்புண்டு. இது பற்றிய மேலதிகத் தகவலறியக் குடும்பநல மருத்துவரை நாடவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)