வீட்டிற்கு தேவையான நறுமணக் கலவையை தயாரிக்க வழி !

Fakrudeen Ali Ahamed
0
வீட்டை எப்போதும் நறுமண த்துடன் வைத்துக் கொள்வதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளன. அதில் பெரும் பாலும் அனைவரும் செய்வது ஒரு கடைகளில விற்கப் படும் ரூம் ஸ்ப்ரேவை வாங்கி பயன் படுத்துவது. ஆனால் அவ்வாறு அதிகப் படியாக செலவு செய்து, ரூம் ப்ரஷ்னர் அடிப்ப தற்கு பதிலாக, இயற்கை யான நறுமண த்தை வீட்டில் தங்க வைக்க ஒரு எளிமை யான வழி உள்ளது.
பூக்கள்

அது என்ன வென்றால், நறுமணக் கலவை (Potpourri) ஒன்றைத் தயாரிப்பது. என்ன புரிய வில்லையா? ஒரு சிறு பானையில் நறுமண மிக்க பொருட் களை உலர வைத்து, அதனை வீட்டின் அறையில் வைத்தால், வீட்டில் உள்ள துர்நாற்ற மானது எளிதில் நீக்கப் பட்டு, வீட்டில் நறுமணம் தங்கும். 

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, வீட்டில் உள்ள துர்நாற்ற த்தைப் போக்க செய்யப் படும், அந்த நறுமண கலவைக்கு என்னென்ன பொருட் களை எல்லாம் பயன் படுத்தலாம் என்று பட்டியலிட் டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பூக்கள்

பூக்களில் ரோஜாவில் நல்ல நறுமணம் இருக்கும். ஆகவே அத்தகைய ரோஜாவை சூரிய வெப்ப த்தில் நன்கு உலர வைத்து, பின் அதனை ஒரு சிறு பௌலில் போட்டு, அதன் மேல் சிறிது லாவெண்டர் எசன்ஸ் தெளித்து விட்டால், வீடானது நன்கு கமகமக்கும்.

மூலிகைகள்
மூலிகைகள்
மூலிகை களில் புதினா மற்றும் எலுமிச்சை புல்லில் நல்ல நறுமணம் வீசும். எனவே இந்த மூலிகை களை உலர வைத்து, பௌலில் போட்டு வீட்டில் வைக்கலாம்.

மசாலாப் பொருட்கள்

மசாலாப் பொருட்கள் நிறைய பொருட்கள் நல்ல நறுமண த்துடன் இருக்கும். அதிலும் பட்டை, ஏலக்காய் போன்றவற்றை ஒரு பௌலில் போட்டு, அதில் சிறிது கிராம்பு எண்ணெய் தெளித்து, வீட்டின் அறைகளில் வைத்தால், நல்ல வாசனை வீட்டில் இருக்கும்.

உலர் இலைகள்
உலர் இலைகள்

உலர் இலைக ளான ரோஸ்மேரி மற்றும் சேஜ் போன்ற வற்றில் இயற்கை யாகவே நல்ல நறுமணம் உள்ளது. எனவே இத்தகைய இலைகளை உலர வைத்து, அதனை பௌலில் போட்டு வைக்கலாம்.

இஞ்சி

இஞ்சி ஒரு அருமை யான பொருள். இந்த இஞ்சியை துருவி பௌலில் போட்டு, அதில் சிறிது வென்னிலா எசன்ஸ் சேர்த்து வைத்தால், அப்போது வரும் மணமே தனி தான்

பழங்களின் தோல்
பழங்களின் தோல்
பழங்களில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத்தின் தோலில் நல்ல வாசனை உள்ளது. எனவே அவற்றின் தோல் களை நறுக்கி, அதனை சிறு பாத்திர த்தில் போட்டு, வீட்டின் ஜன்னல் கதவுகளில் அருகே வைக்க வேண்டும்.

பஞ்சு

பஞ்சுகளை நல்ல நறுமண மிக்க எண்ணெ யில் நனைத்து, அதனை நன்கு காய வைத்து, அதனை ஒரு பௌலில் போட்டு, அதன் மேல் மீண்டும் சிறு துளி நறுமண எண்ணெய் களை தெளித்து, வீட்டினுள் வைத்தால், இதுவும் வித்தியாச மான நறுமண த்தைக் கொடுக்கும்.

பிரியாணி இலை
பிரியாணி இலை
பிரியாணி இலை உணவிற்கு மட்டுமின்றி, அறையில் நல்ல நறுமண த்தை தக்க வைக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. எனவே இந்த இலைகளை ஒரு பௌலில் போட்டும் வைக்க லாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)