கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் குறைய காரணம் !

Fakrudeen Ali Ahamed
0
குறிப்பு 1 கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் அன்பும், நெருக்கமும் எப்போதும் குறையாமல் இருக்க வேண்டு மென்று விரும்பினால் இறந்த உங்கள் முன்னோர்களின் படங்களையோ 
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் குறைய காரணம் !
அல்லது கடவுள்களின் படங்களையோ உங்கள் படுக்கை யறையில் மாட்டி வைப்பதை தவிர்க்கவும். இவை உங்களுக்குள் எழும் காதல் அதிர்வுகளை விரட்ட கூடியவை ஆகும். 
 
குறிப்பு 2

தம்பதியினர் எப்பொழுதும் அவர்களின் படுக்கையை அறையின் மத்தியில் போடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். 
 
இந்த தவறான பழக்கம் பெரும்பாலான குடும்பங்களில் உள்ளது. எப்போதும் படுக்கையை இரண்டு சுவர்களின் மீது படும்படி மட்டுமே போட வேண்டும்
குறிப்பு 3

படுக்கையின் தலை பகுதியானது எப்பொழுதும் அறையின் தெற்கு புறம் பார்த்து தான் இருக்க வேண்டும். இது உங்கள் துணையின் மீதான நாட்டத்தை அதிகரிப்பதுடன் நல்ல தூக்கத்தையும் வழங்குகிறது. 
 
வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக தலை வைத்து தூங்குவது தம்பதிகளுக்கு ஒருவர் மீது ஒருவருக்கு எரிச்சலை ஏற்படுத்து வத்துவதுடன் தேவை யில்லாத பிரச்சினை களையும் உருவாக்கும்.

குறிப்பு 4
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் குறைய காரணம் !
இது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவ தாக இருக்கலாம். ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தின் படி டிரஸ்ஸிங் டேபிள் எப்பொழுதும் உங்கள் படுக்கை யறைக்குள் இருக்க கூடாது. 
 
ஏனெனில் இது உங்கள் அறைக்குள் தொடர்ந்து எதிர்மறை சக்திகளை பரவ செய்யும

குறிப்பு 5

தம்பதியினர் ஒன்றாக படுக்கும் அறையை எப்பொழுதும் வெளிர் நிறங்களில் பெயிண்ட் அடிக்க கூடாது. குறிப்பாக வெள்ளை நிறத்தில் அடிக்க கூடாது. 
 
பிரகாசமான சிவப்பு, ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் பெயிண்ட் அடிப்பது கணவன், மனைவிக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும்.
குறிப்பு 6
படுக்கை யறைக்குள் கண்ணாடி வைப்பதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. அப்படியே வைத்தாலும் அவர்களின் உருவம் தூங்கும் போது கண்ணாடியில் பிரதிபலிக்காத வண்ணம் பார்த்து சரியான திசையில் வைக்க வேண்டும்.

குறிப்பு 7
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் குறைய காரணம் !
தேவை யில்லாத சாமான்களிடம் இருந்து தள்ளியே இருங்கள் உங்கள் அறையை அலங்கரிக்க தேவை யில்லாத பொருட்களை பயன் படுத்துவதை தவிர்க்கவும். 
 
உங்கள் அறைக்குள் இருக்கும் இடைஞ்சல் உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை சிதைக்க கூடியதாகும். இதனால் உங்களுக்குள் அடிக்கடி சண்டைகள் எழும்.

குறிப்பு 8

சாஸ்திரங்களின் படி தம்பதிகள் ஒன்றாக படுக்கும் கட்டில் உலோகத்தால் செய்யப் பட்டதாக இருக்கக் கூடாது. 
 
மரக்கட்டில் தவிர மற்ற அனைத்து உலோக கட்டில்களும் தமபதிகளுக்குள் சண்டையை ஏற்படுத்தக் கூடும். இதனால் நிரந்தர பிரிவு கூட ஏற்படலாம்.
குறிப்பு 9

வீட்டில் இருக்கும் ஜன்னல்களும் சரி, கதவுகளும் சரி எப்பொழுதும் இரட்டைப் படையில் தான் இருக்க வேண்டும். 
 
மேலும் அவை உட்புறமாக திறக்க கூடியதாக இருக்க வேண்டுமே தவிர வெளிப்புறம் திறப்பதாக இருக்க கூடாது. இது உங்கள் இல்லத்திற்குள் நேர்மறை சக்திகளை அழைத்து வரும்.
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் குறைய காரணம் !
குறிப்பு 10

உங்கள் உறவில் ஏற்படும் விரிசல்களை தவிர்க்க வீட்டில் ஒரு சாமி படத்திற்கு மேல் வைக்காமல் இருப்பதில் உறுதியாக இருங்கள். 
 
அப்படியே வைத்தாலும் அவை ஒன்று கொன்று எதிராக இருக்கும்படி வைக்கவே கூடாது. அவ்வாறு வைப்பது தமபதிகளுக் கிடையே நிரந்தர பிரிவை ஏற்படுத்தும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)