பிரசவத்திற்கு பின் உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள !

Fakrudeen Ali Ahamed
0
பெண்களின் வாழ்க்கையில் கருத்தரித்தல் மற்றும் பிரசவம் என்பது மிகவும் முக்கியமான தருணங்கள். ஏனென்றால் இத்தருணங்களில் உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருக்கும். 
உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள
அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது உடல் எடை அதிகரிக்க வேண்டும் தான். ஆனால் பிரசவத்திற்கு பின்னும் உடல் எடையானது குறையாமல் அப்படியே இருந்தால், அது அழகைக் கெடுப்பதுடன், எரிச்சலூட்டும். 
 
இதற்கு உடல் எடையை குறைப்பதற்கான சில இயற்கை வழிகளில் ஈடுபட்டால், நிச்சயம் உடல் எடையை கட்டுப் பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

பிரசவத்திற்கு பிறகு எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்

அளவான டயட் :

பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது, கடுமையான டயட்டை மேற்கொள்ளக் கூடாது. 
 
ஏனெனில் அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால், உடல் எடையை அதிகரிக்காத மற்றும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் வகையில் 
 
பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் எடையானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

தாய்ப்பால் கொடுத்தல் :
தாய்ப்பால் கொடுத்தல்
தாய்ப்பால் கொடுத்தால், பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். 
 
ஏனெனில் பாலானது உற்பத்தியாகும் போது, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் எடையானது குறையும். இது உங்களுக்கும் நல்லது, குழந்தைக்கும் நல்லது. 
 
உடற் பயிற்சியில் கவனம் தேவை :

பிரசவத்திற்கு பிறகு உடல் பயிற்சியில் ஈடுபடலாம். ஆனால் காயங்கள் குணமாவதற்கு முன்பே உடற் பயிற்சியின் ஈடுபட்டால், அது வேறு சில விளைவுகளை உடலில் ஏற்படுத்தி விடும். 
 
எனவே மருத்துவர்களை ஆலோசித்த பிறகே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

யோகா பண்ணுங்க :
யோகா பண்ணுங்க
பிரசவத்திற்கு பின்னர் உடலானது மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு சற்று தாமதமாகும். 
 
எனவே யோகாவில் ஈடுபடுவதும் மிகவும் சிறந்தது. இதனால் மனம் ரிலாக்ஸ் அடைவதுடன், உடல் எடையும் ஆரோக்கியமாக குறையும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)