ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை தேங்காய்?

Fakrudeen Ali Ahamed
0
புரதச் சத்து, மாவுச் சத்து, சுண்ணாம்புச் சத்து, எரியம் (phosphorus), இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், உயிர்ச்சத்து சி, அனைத்து வகை பி பல பாகங்களை கொண்ட (complex) சத்துக்கள்,
கொப்பரை தேங்காய்
நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? 
 
தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும்.
மரணத்திற்கு பிறகு இயற்கை இரக்கம் காட்டப் போவதில்லை... படிங்க !
கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த பலவிருத்தி (tonic). தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப் படுகிறது. 

மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ் சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக் கான மருந்துகள் தயாரிக்கப் படுகின்றன. 

தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்து கிறது.

மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்தி லிருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப் படுகிறது.
நெல் எங்கிருந்து வந்தது?
சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்ற வற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய் களுக்கு அருமருந்து. 

தைலங்கள் . . . 
தைலங்கள்
தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்து கின்றன.

நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம்,
ஆஃப்கானி சிக்கன் புலாவ் ரெசிபி !
தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிசு(ஸ்) நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம்,

தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது. 

எளிதில் சீரணமாகும் . . .
தேங்காய் எண்ணெய் எளிதில் சீரணமாகும். குழந்தைகளு க்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன.

தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்க ளுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும்.
மாட்டு இறைச்சி சமோசா செய்வது எப்படி?
தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய் யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும். 

வயிற்றுப்புண்கள். . . 

தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது.
வயிற்றுப்புண்கள்
உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்து க்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலம் (Medium Chain Fatty Acid) தேங்காயில் அதிகமாக உள்ளது.

உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் அமிலம் (Capric Acid) மற்றும் லாரிக் அமிலம் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன.
நம் உடலுக்கு தேவையான அறுவகைச் சுவைகள் !
இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன. 

வைரஸ் எதிர்ப்பு . . . 
வைரஸ் எதிர்ப்பு
தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் காப்ரிக் அமிலம் ஆகியவை வைரசு மற்றும் நோய் உண்டாக்கும் நுண் உயிரிகள் (bacteria) நுண் கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.

தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரசு கலம் சுவர்களைக் கரைக்கிறது. உயிர்க் கொல்லி நோய் (aids) நோயாளிகளு க்கு தீநுண்மங்கள் சுமையை குறைக்கிறது.

தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப் படுத்துகிறது. 

ஆண்மைப் பெருக்கி . . . 
ஆண்மைப் பெருக்கி
முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் உயிர்ச் சத்தின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப் படுத்துகிறது. 
குழந்தை சிவப்பு நிறமாக.... 
குழந்தை சிவப்பு நிறமாக
குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அது போல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை பாலாக்கி கர்ப்பிணிகளு க்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)