தாம்பத்திய உறவில் செல்போனை ரூமுக்குள் கொண்டு போகாதீர்கள் !

Fakrudeen Ali Ahamed
0
முன்பெல்லாம் வீடுகளில் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் நேரம் வானொலி கேட்பார்கள். பிறகு, தொலைக்காட்சி என 9 மணிக்குள் தூங்கப் போய் விடுவார்கள். 
தாம்பத்திய உறவில் செல்போனை ரூமுக்குள் கொண்டு போகாதீர்கள் !
அதன் பின் தம்பதிக்கு வேறெந்த வெளித் தொந்தரவும் இருக்காது. ஆனால், இன்று மூன்றாவது கையாக, ஆறாவது விரலாக ஆகிப்போன செல்போனை 
 
பலரும் படுக்கை அறையிலும் பிரியாமல் இருப்பதால், அது அவர்களின் செக்ஸ் வாழ்க்கையை தொந்தரவு செய்வதாக அமைகிறது. 

செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைக்கும் போது, செல்போன் கதிர்கள் விந்தணு உற்பத்தியைக் குறைப்பதால் ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது என்கின்றன ஆராய்ச்சிகள். 

இதனால் குழந்தை யின்மைக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இது உடல் ரீதியான பிரச்னை என்றால், தாம்பத்யத்தில் மனரீதியாகவும் செல்போன் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. 
விந்தணு உற்பத்தி
மேலும் இன்றைய இளைஞர்கள் லேப்டாப்பை அதிகமாக பயன்படுத்து கின்றனர்.
 
அவ்வாறு பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்தினால், அதிலிருந்து வெளிவரும் வெப்பமானது, விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
 
எனவே லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். எல்லா வற்றிற்கும் மேலாக, தாம்பத்யத் துக்கு தொந்தரவு இல்லாத சூழல் தேவை.

ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடும் போது, யாராவது கதவைத் தட்டினால் என்ன ஆகும்? 
உடலுறவில் ஈடுபடும் போது
அதே போல் தான், அந்த நிமிடங்களில் மெஸேஜ், கால் என்று மொபைல் அழைக்கும் போது, ஆணின் விரைப்புத் தன்மை குறைந்து விடும். 
 
அதோடு மொபைலில் குவியும் கவனத்தால் அவர் மனநிலையும் மாறிப்போக வாய்ப்பிருக் கிறது. மொத்தத்தில், முழுமையான தாம்பத்திய உறவு வேண்டு கிறவர்கள் செல்போனை பெட்ரூமு க்குள் கொண்டு போகாதீர்கள்!’
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)