காது குத்துவது கண்களுக்கு பாதுகாப்பா?

Fakrudeen Ali Ahamed
0
குழந்தைகள் பிறந்த பின், தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்படும் ஒரு பழக்கம். குழந்தைகளுக்கு காது குத்துவது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
காது குத்துவது கண்களுக்கு பாதுகாப்பா?
இந்து மதத்தை பொறுத்தவரை குழந்தை பிறந்த பதினோராவது மாதத்திலோ அல்லது அதற்கு பிறகோ காது குத்துவது வழக்கம்.என்ன... எங்களுக்கே காது குத்துகிறீர்களா?’’ என்று கேட்காதீர்கள். 
நீங்கள் ஆரோக்கியசாலியாக இருக்க உணவில் நல்லெண்ணெய் !
எந்நேரமும் புகை மண்டிக் கிடக்கும் சமையல் அறையிலேயே இருந்தாலும், நம் நாட்டுப் பெண்களுக்கு பார்வைக் கோளாறு வராமல் இருப்பதற்கு, காது குத்துவதே காரணம் என்று சீன மருத்துவர்கள் கண்டறிந் துள்ளனர்.
போதிய வெளிச்சம் இல்லாத சமையல் அறைகளில் கண் எரிச்சலுடன் வேலை செய்வதால் கண்கள் விரைவில் பாதிப்படையும். ஆனால், அப்படி வேலை செய்யும் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே கண்ணாடி அணிகின்றனர்.
 
இதைப் பற்றி ஆய்வு செய்த சீன அக்குபங்சர் மருத்துவர் சூலின், ‘‘காது குத்துதல் அக்குபங்சர் முறையில் கண்களைப் பாதுகாக்கும் முறை. 
 
அது தான் பெண்களின் கண்களைக் காக்கிறது. மேலும் காதுகளுக்கும் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு.
ஊட்டச்சத்து அளிக்கும் உணவுப் பொருட்கள் !
அதனால் தான் கருப்பையில் முழு வளர்ச்சி யடைந்த ஒரு குழந்தையின் வடிவம் எப்படி இருக்குமோ, அதே வடிவத்தில் காதுகள் அமைந்திருக் கின்றன’’ என்கிறார். தைவான் மருத்துவக் குழுவும் இந்த முடிவை உறுதி செய்துள்ளது. 
காது குத்திய பெண்களில் 72 சதவீதத்தி னருக்கு நிறக்குருடு, கிட்டப் பார்வை ஆகிய கண் நோய்கள் இல்லையாம். 
 
மேலும், அவர்கள் மங்கலான வெளிச்சத்தில் கூட பல்வேறு வண்ணங்களை எளிதில் அடையாளம் காண்கிறார் களாம். ஆகவே, காது குத்துங்க!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)