குழந்தை பொம்மைகளிடம் பேசுகிறதா ? பெற்றோர்கள் கவனத்திற்கு !

Fakrudeen Ali Ahamed
குழந்தைப் பருவம் என்பது மிகவும் அழகான, திரும்பக் கிடைக்காத விலை மதிப்பற்ற காலம். 
அந்த சமயத்தில் தான் களிமண்ணை பொம்மையாக வடிவமைப்பது போல, குழந்தையின் தூய மனது 

தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வு களை வைத்துப் பல விஷயங் களை கற்றுக் கொண்டு ஒரு முழு மனிதனாக மாறுகிறது.

பெரும்பாலான குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தில் தங்களுக்கென ஒரு கற்பனை நண்பனை, 
பொம்மை அல்லது வேறு ஏதேனும் வடிவில் உருவாக்கிக் கொள்வர்.

அவ்வாறு குழந்தைகள் சிறு பிராயத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் கற்பனை நண்பன் எனும் விஷயம் அவர்களை பின்னாளில் எப்படி பாதிக்கிறது, 

குழந்தைக ளின் வாழ்வில் எப்படிப் பட்ட பாதிப்புகளை ஏற்படுத்து கிறது என்பது போன்ற தகவல் களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

யார் இந்த கற்பனை நண்பன்?!

குழந்தைகளுக்குக் கற்பனை நண்பன் என்று ஒருவன் இருக்கிறான் என்று கூறுகிறோமே அது யாராக இருக்கும் என்றால், 

அவர்களுக்குப் பிடித்த பொம்மைகள், அல்லது செல்லப் பிராணிகள், பொருட்கள் போன்றவை தான். 

சமயங்களில் யாருமே இல்லாமல் வெற்றிடங் களைப் பார்த்துக் கூட அவர்கள் பேசத் தொடங்கலாம்.
குழந்தைகள் பொம்மை, பிராணிகள், பொருட்கள் போன்ற இந்த விஷயங் களை தங்கள் வாழ்வில் மிகப்பெரிய விஷயமாக, 

உற்ற நண்பனாகக் கருதி அவர்களுடன் தனது அனைத்து இரகசியங்கள், உணர்வுகள், செயல் பாடுகள் போன்ற வற்றைப் பகிர்ந்து கொள்வர்.

எப்படி உருவாகிறார்கள்?

குழந்தை களின் கற்பனை நண்பன் உருவாகும் விஷயத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவையாவன:

ஒன்று குழந்தை இருக்கும், வளரும் சூழல்,
மற்றோன்று குழந்தையின் உணர்வுகள். குழந்தைகள் தாங்கள் இருக்கும் இடம் மற்றும் 

அவர்கள் கொள்ளும் உணர்வுகளின் அடிப்படையில் தான் தனக்கென ஒரு நண்பனைத் தானே 

உருவாக்கிக் கொள்ளும் நிலைக்குச் செல்கிறார்கள் அது எப்படி என விரிவாக இப்பொழுது பார்க்கலாம்.

சூழ்நிலையால் ஏற்படுவது

குழந்தைகளின் இந்தக் கற்பனை நண்பன் எனும் இந்த விஷயம் எப்படி உருவாகிறது என்று பார்த்தால், 

குழந்தை களுக்கு விளையாடத் துணை இல்லாத பொழுது, பெற்றோர் குழந்தை களுடன் நேரம் செலவிடாத பொழுது, 
குழந்தைகள் தனிமையில் அதிகமாக இருக்க நேரிடும் பொழுது, குழந்தைகளுக்கு நண்பர்கள் இல்லாத நிலை போன்ற 

சூழ்நிலை களின் பொழுது அவர்கள் தங்கள் சூழலில் இருந்து விடுபடத் தேடி அமைத்துக் கொள்ளும் விஷயம் தான் இந்தக் கற்பனை நண்பன்.

உணர்வுகளால் ஏற்படுவது

குழந்தைகள் வெளி மனிதர்களோடு பேசிப் பழக தயக்கமாக உணரும் பொழுது, குழந்தை களில் தன்னம்பிக்கை குன்றிக் காணப்படும் பொழுது, 

அவர்கள் பார்த்த படங்கள் மற்றும் கேட்ட கதைகளினால் அவர்களின் மனதில் ஏற்பட்ட மாறுபாடுகள், படங்களில் 

அல்லது மற்ற குழந்தைகள் பொம்மை களைத் தங்கள் நண்பனாகக் காட்டி பேசுவதைப் பார்த்துத் தானும் 

முயற்சித்தல் போன்ற உணர்ச்சி களின் காரணமாகக் கூட குழந்தைகள் தங்களுக்கென கற்பனையாக ஒரு நண்பனை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

எப்பொழுது ஏற்படுத்திக் கொள்கிறார்கள்?

குழந்தை களுக்குச் சற்று விவரம் தெரியும் பருவமான இரண்டு வயதினில் 

இந்தக் கற்பனை நண்பன் பழக்கம் குழந்தை களில் ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டு உள்ளது. 
மேலும், குழந்தைகளின் இரண்டு அல்லது இரண்டரை வயது முதல் ஒன்பது வயது வரையிலான 

கால கட்டத்தில் எப்பொழுது வேண்டு மானாலும் அவர்கள் தங்கள் கற்பனை நண்பனை உருவாக்கிக் கொள்ள முயல்வர்.

எப்படி ஏற்படுத்துவர்?

குழந்தைகள் தங்கள் மனதிற்குப் பிடித்த மற்றும் விருப்பமான விஷயங்களின் அடிப்படையில் தனது நண்பனை உருவாக்கிக் கொள்வர். 

இந்தக் கற்பனை நண்பன் உருவாக்கம் மற்றும் தேர்ந்தெடுப்பு ஆண் மற்றும் பெண் குழந்தை களிடையே வேறுபடும். 

ஆண் குழந்தைகள் தங்கள் சக்திக்கு இணையாக அல்லது தங்களை விட சக்தி வாய்ந்தவ னாக இருக்கும் ஒருவனை நண்பனாக வைத்துக் கொள்வர், 

அவர்கள் தேர்ந்தெடு க்கும் பொம்மையை அவ்வாறு பலசாலியாக எண்ணிக் கொண்டு பழகுவர்.

பெண் குழந்தைகள் தங்களை விட அறிவு மற்றும் பலத்தில் குறைந்த பொருட்களை 

அல்லது பொம்மையை தங்களது கற்பனைத் தோழியாக எடுத்துக் கொள்வர்.

இது மனநிலை பாதிப்பின் அறிகுறியா?

இவ்வாறு குழந்தைகள் தங்களுக்கென, இல்லாத ஒரு உயிரை, உயிரற்ற பொம்மை களில் 
கண்டு நண்பனாக நினைப்பது மனநிலை பாதிப்பா என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா? 

குழந்தையின் 2 முதல் 9 வயது வரையிலான கால கட்டத்தில், குழந்தைகள் அனைத்து 

விஷயங் களிலும் சாதாரணமாக ஈடுபட்டு தனக்கெனப் பிடித்த பொம்மையைக் கொஞ்சுவது, 
அலங்கரிப்பது, அதனுடன் விளையாட்டாகப் பேசுவது போன்ற செயல்பாடுகள் காணப் பட்டால் அது சாதாரணமே

விபரீதம் ஏற்படும் சூழல்

ஆனால், அந்த வயது வரம்பை மீறித் தனது கற்பனை நண்பனுட னான நட்பை நீட்டித்து 

அந்த ஒரு நண்பனுடன் மட்டுமே எப்பொழுது பார்த்தாலும் தனது நேரத்தை செலவிட்டுக் கொண்டு, 

மற்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டாமல் தனித்து, விலகிச் சென்றால், அந்தச் சூழல் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

இந்நிலையைக் குழந்தைகள் அடைந்து விட்டால், அது அவர்களின் மன நிலையில் 

பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தி விபரீத விளைவு களை உண்டாக்க லாம்.

மருத்துவக் கலந்தாய்வு

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல் பாடுகளை நன்கு கவனித்து, குழந்தை சராசரி மனிதனை போல் வளர வழி வகை செய்ய வேண்டும். 
உங்கள் கவனிப்பையும் மீறி குழந்தை அந்த கற்பனை நண்பன் உலகில் மூழ்க நேர்ந்தால், 

பெற்றோர்கள் அதை உடனடியாக கவனித்து குழந்தைக்கு மனநிலை மருத்து வருடன் ஒரு கலந்தாய்வு ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.

பெற்றோர் கடமை

இவ்வாறு மனநிலை மருத்துவரை சந்திப்பதால் உங்கள் குழந்தை மனநிலை சரியில்லை என்று எண்ண வேண்டாம். 
குழந்தை களின் மனதை நிலைப் படுத்தத் தக்க சமயத்தில் பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியக் கடமை என்பதை உணருங்கள். 

அதே போல் குழந்தையையும் மனநிலை பாதித்தவர் போல் நடத்தாமல் இயல்பாக நடத்துங்கள். 

குழந்தை தன் கற்பனை நண்பனை உங்களிடம் காட்டி பேசும் பொழுது உங்கள் வெறுப்பைக் காட்டாமல், 

குழந்தையின் பாணியிலேயே பாசமாக பேசிக் குழந்தைக்கு உண்மை நிலையை உணர்த்த முற்படுங்கள்.
Tags: