பல்லாண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு !

Fakrudeen Ali Ahamed
அந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டி ருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டி ருந்தாள்.
பல்லாண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு !
இன்று அவளுக்கு 'புனித சடங்கு'. இந்த சடங்கு அங்கு வாழும் 98% பெண்களு க்கு செய்யப் பட்டுள்ளது. இது ஒரு கொடூரமான சடங்கு.

கேட்கவே மனம் பதை பதைக்கும் கொடூரம்! உலகம் எப்படி மூடநம்பி க்கையில் திளைத் திருக்கிறது என்பதற் கான நிகழ்கால உதாரணம்!

இந்த வன்கொடுமை மூவாயிரம் வருடங்களாக நடந்து கொண்டி ருக்கிறது என்பது தான் கொடுமை யிலும் கொடுமை. பிரமிடுகளில் புதைந்திருந்த மம்மிகளில் கூட இந்த அடையாளம் காணப் படுகிறது.
அது தான் இந்த சடங்கு 3,000 ஆண்டுகள் பழமை மிக்கது என்று உலகுக்கு காட்டுகிறது. தற்போதும் கூட 28 ஆப்பிரிக்கா நாடுகளில் இந்த பழக்கம் தலைமுறை தலை முறையாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் 98% பெண்களுக்கு இந்த சடங்கு பெருமை யோடு நடத்தப் பட்டிருக்கிறது. இங்கு பெண்ணாகப் பிறந்த எல்லோரு க்குமே கட்டாயமாக இதை செய்கி றார்கள்.

அப்படி செய்யாத பெண்கள் தீட்டு கழியாத புனிதமற்ற பெண்களாக கருதி வெறுத்து ஒதுக்கு கிறார்கள். அந்த சடங்கின் பெயர் 'பெண் சுன்னத்'. உலக சுகாதார மையம் இதை 'பெண்ணுறுப்பு சிதைவு' என்கிறது.

அந்த நாடுகளில் எல்லாம் இந்தக் கொடுமை போற்றுதலுக் குரிய புனிதமாக கொண்டாடப் படுகிறது. 
 
இந்த நாடுகளில் வாழும் 13 கோடி பெண்களின் பெண்ணுறுப்பு சிதைக்கப் பட்டுள்ளது. தினந்தோறும் 6,000 பெண்களுக்கு இது நடத்தப் படுகிறது.

எதனால் இப்படி..?
பல்லாண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு !
அவர்கள் புனிதமாக கருதும் கலாச்சார விதி, 'பெண்கள் சைத்தானின் வடிவங்கள். அவர்களைப் பார்த்தால் பாலுணர்வு மட்டுமே தோன்றும். அவர்கள் பாலுணர்வு மிக்கவர்கள்.

ஆகவே அவர்களின் பாலுணர்வை சிதைப்பதன் மூலம் அவர்கள் ஒழுக்கத் தோடு வாழ்ந்து கணவனுக்கு யோக்கிய மாய் இருப்பார்கள்.' என்கிறது.

மேலும் யோனி வெட்டும் முறையும் அதில் கூறப் படுகிறது. இதனாலே இது பெண்களின் மறுக்க முடியாதா சம்பிரதாய மாக முக்கி யத்துவம் பெறுகிறது. பெண்களின் 4 வயது முதல் 10 வயதுக்குள் இதை செய்து விடுகிறார்கள்.

இதை செய்த பின் பெண்ணின் செக்ஸ் ஆர்வம் முற்றிலு மாக அழிந்து விடும். மிக சொற்பமாக மனதளவில் மட்டுமே பாலியல் எண்ணம் தோன்றும். இயல்பாக பெண்களு க்கு பெண்ணு றுப்பில் ஏற்படக் கூடிய கிளர்ச்சியும்,
பீச்சில் பிறந்தநாள் - ஹாட் போட்டோ வெளியிட்ட நாகினி
எழுச்சியும் இந்த சடங்குக்குப் பிறகு ஏற்படுவ தில்லை. இதனால் இந்தப் பெண்கள் தவறான வழியில் போக மாட்டார்கள். வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். 
 
செக்ஸ் உணர்வு இல்லாத தால் காலம் முழுக்க கற்போடு இருப்பார்கள். என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆணாதிக்கம் திணித்த பெண் அடிமைத் தனமும் இதன் பின்னே இருக்கிறது.

சரி, அப்படி என்ன தான் நடக்கிறது இந்த சடங்கில்...???

பல்லாண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு !
இதை ஆங்கிலத்தில் 'பீமேல் ஜெனிடல் மியுட்டிலேஷன்' என்பார்கள். தமிழில் பெண்ணு றுப்பு சிதைவு. பெண்ணுறுப்பில் 'க்ளிட்டோரியஸ்' என்ற பகுதி தான் உணர்ச்சி மிகுந்தது.

ஆணுக்கு உடலில் எந்த இடத்தில் ஆணுறுப்பு இருக்குமோ, அதே இடத்தில் பெண்ணுக்கு இருக்கும் ஆணுறுப்பின் எச்சம் தான் 'க்ளிட்டோரியஸ்'.

ஆணுறுப்பில் எந்தளவுக்கு உணர்ச்சி இருக்குமோ அதே அளவு உணர்ச்சி சிறியதாக மொட்டுப் போல் இருக்கும் க்ளிட்டோரிய சிலும் அப்படியே இருக்கும். 
 
உணர்வு ததும்பும் இந்த பாகத்தை வெட்டி எடுப்பது தான், பெண்ணுறுப்பு சிதைவின் முதல் பகுதி. இந்த வெட்டும் வேலையை செய்வது டாக்டர்களோ அறுவை சிகிச்சை நிபுணர் களோ இல்லை.
சுடுகாட்டில் நிர்வாண பூஜை.. காதலிக்காக கணவன் கொலை !
வயது முதிர்ந்த கிழவியோ அல்லது பெண்ணின் தாயோ தான். எந்த மயக்க மருந்தும் கொடுக்காமல் கதற கதற ரண வேதனையோடு அறுத்தெரிவது தான் முதல் நிலை. மருத்துவத் தில் இதற்கு 'க்ளிட்டோரிடேக்டமி' என்று பெயர்.
 
சடங்கின் இரண்டாம் நிலை, யோனியின் பக்க வாட்டில் இருக்கும் உதடு களை வெட்டி எடுப்பது. இந்தப் பகுதி தான் உறவின் போது பெண்ணுக்கு இன்பத்தை அதிகப் படுத்துவது.

அதையும் பிளேடால் அறுத்து எடுத்து விடுவார்கள். இதனை 'லேபியா பிளாஸ்டி' என்று மருத்துவம் சொல்கிறது. அதன் பின் மூன்றாம் நிலை, பெண்ணு றுப்பின் நுழைவு வாசலை ஊசி நூல் கொண்டு தைத்து மூடி விடுவது.

சிறுநீர், மாத விலக்கு திரவம் வெளியேற சின்னதாக இரண்டு துளை மட்டும் ஏற்படுத்தி விடுவார்கள். இதற்கு 'வெஜைனா பிளாஸ்டி' என்ற மருத்துவப் பெயரும் உண்டு.

இதை செய்வதற்கு வீட்டில் உள்ள கத்தி, பிளேடு, கண்ணாடி துண்டு, கத்திரி, சாதாரண ஊசி நூலையே பயன்படுத்து கிறார்கள்.
பல்லாண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு !
மூன்று நிலையும் முடிந்த பின்னே பெண்ணின் தாய் உறவினர் களிடம் வந்து 'என் மகள் பெண்ணாக மலர்ந்து விட்டாள்' என்று மகிழ்ச்சியோடு சொல்வார். உடனே மதுவோடு விருந்து டாம்பீகமாக நடக்கும்.

உள்ளே வீட்டின் பின் புறத்தில் ஒரு மூலையில் இரண்டு காலையும் சேர்த்துக் கட்டிய நிலையில் தாங்க முடியாத வேதனையோடு பெண்ணாக மலர்ந்த சிறுமி கதறி அழுது கொண்டி ருப்பாள். இனி அந்தப் பெண் உணர்ச்சி யற்ற ஜடம்.

காயங்கள் ஆறுவதற்காக 40 நாட்கள் கால்களை சேர்த்தே கட்டிப் போட்டு விடுவார்கள். 
 
கொடுமைகள் நிறைந்த இந்த சடங்கு உருவாக்கும் வலி, வேதனை, அதிர்ச்சி, பலவிதமான உடல் சார்ந்த நோய்களை பெண்ணுக்கு கொண்டு வருகிறது.

லட்சக்கணக் கான பெண்கள் இதற்கு பின் கடுமையான மன அழுத்தத் திற்கு ஆளாகி இருக்கி றார்கள்.
பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி !
இவ்வளவு பாதிப்புகள் இருந்தும் இதை பெண்கள் தொடர்ந்து செய்து கொள்வ தற்கு காரணம் அசைக்க முடியாத மத மற்றும் மூடநம்பிக்கை தான். இந்த சடங்கு பெண்ணுக்குரிய தீட்டை மறைத்து விடும்.

உடலில் உள்ள துர்நாற்ற த்தை நீக்கி விடும். முகம் அழகு பெறும், பெண்மை அதிகரிக்கும் என்று ஏகப்பட்ட நம்பிக்கைகள் போதிக்கப் படுகின்றன.

பெண்ணுக்கு திருமண மானவுடன் கணவன் தான் பெண்ணுறு ப்பின் தையலைப் பிரிப்பான். அவள் இன்னும் கன்னி தான் என்பதற் கான சாட்சி அந்த தையல் தான்.
 
பெண்ணு றுப்பின் வாசலை குறுக்கி தையல் போடுவது உடலுற வின் போதும் குழந்தை பிறப்பின் போதும் தாங்க முடியாத வலியையும் சிக்கலை யும் உருவாக்கு கிறது.
பல்லாண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு !
இதனால் பிரசவத்தின் போது குழந்தை இறப்பதோ தாய் இறந்து போவதோ அதிகமாக நடக்கிறது. எல்லா வற்றுக்கும் காரணம் முட்டாள் தனமான சடங்கு தான் என்று உலக சுகாதார மையம் கூறுகிறது.

எகிப்து நாட்டில் ஒரு 12 வயது சிறுமிக்கு இந்த சடங்கு செய்யும் போது வலி தாங்க முடியா மலும் அதிக உதிரம் வெளியேறியதாலும் இறந்து விட்டாள். அது அங்கு பெரிய போராட் டமாக வெடித்தது.

அதை தொடர்ந்து 2007-ம் ஆண்டு இந்த சடங்கை எகிப்து அரசு தடை செய்தது. ஆனாலும் மற்ற நாடுகளில் இந்த கொடூரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
பல் துலக்குவதற்கும் மறதி நோய்க்கும் தொடர்பு
சிறு வயதில் இந்த சடங்கை செய்து கொண்டு பின்னாளில் மிகப் பெரும் மாடலாக வலம் வந்த வாரிஸ் டேரி என்ற சோமாலியப் பெண் இதை 'தொடை களுக்கு நடுவே ஒளிந்தி ருக்கும் நரகம்' என்கிறார்.

சிறுவயதில் அவருக்கு நடந்த சடங்கை இப்படி சொல்கிறார், "நான் கீழ குனிந்து என் கால்களு க்கு நடுவில் பார்த்தேன்.

பழைய கைப்பை ஒன்றை வைத்துக் கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டி ருந்தாள். அவள் கண்ணில் அப்படி யொரு பேய்த்தனம்.
 
பைக்குள், தன் விரல்களை விட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதி யாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது மட்டும் புரிந்தது.

பிளேடின் ஓரங்கள் காய்ந்து போய், ரத்தக்கறை படிந்தி ருந்தன.
 
‘த்துப்..’

பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத் தாள். அவள் துடைத்துக் கொண்டி ருக்கும் போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.

வாரிஸ் டேரி

நான், உலகமே இருண்டது போல் உணர்ந்தேன்.

அடுத்த நொடி…

‘பர்ர்க்’ என்று ஒரு சத்தம்.

படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்க வேண்டும். நரநர வென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.
பல்லாண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு !
‘அய்யோ…!’ - நரக வேதனை.

அசையக் கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக் கொண்டு படுத்துக் கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.

கடவுளே! இந்த நரகத்தி லிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா? ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்து க்கு பழகியதும் பார்க்கிறேன்.

அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவிய லாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத் தான் ஒவ்வொன் றாக என் பிறப்புறுப் பில் குத்தியிருக் கிறாள்.
 
பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக் கிறாள். வாரிஸ் டேரி சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்து விட்டு மீதி உறுப்பு மூடப்பட்டு விட்டது.
பூனைக்கு உடலை உணவாக்கிய அரசு மருத்துவமனை !
என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப் பட்டு விட்டது. இதற்கு, நான் செத்துப் போய் இருக்கலாம். தையல் முடிந்ததும் கிழவி போய் விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். 
 
என்னால் அசையக் கூட முடிய வில்லை. என் இரண்டு கால்களும் துணிப் பட்டையால சுற்றப் பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தி யதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.

ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப் பின் உணர்ச்சி மிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்து கொண்டி ருந்தன.
 
என்ன கொடூரம்..! அதோடு நிறுத்த வில்லை வாரிஸ், இந்த சடங்கால் தனது செக்ஸ் உணர்வு முற்றிலும் காணமல் போனதை இப்படி சொல்கிறார்.

செக்ஸ் என்றால் என்ன?
பல்லாண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு !
இன்றுவரை எனக்குத் தெரியாது. என் வாழ் நாளில் ஒருபோதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவித்த தில்லை.

அனுபவிக்க வும் முடியாது. நாங்கள் ஆண்களுக் காக, அவர்களின் தேவைக் காக மட்டுமே படைக்கப் பட்டவர்கள்.

அவர்களு க்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற் காக ஐந்து வயதுக் குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்து விடுகி றார்கள்.

மீண்டும் எப்போது அவர்களு க்குத் தேவையோ, அதாவது முதலிரவு க்கு முன்பு வெட்டித் திறந்து விடுகிறார்கள்.

வாரிஸ் டேரி 3,000 ஆண்டு களாக வெட்ட வெளியில், எந்தவித மருத்தவ உபகரணங் களும் இன்றி, மயக்க மருந்து கூட இல்லாமல் இந்த அறுவை நடக்கிறது.
நிலவில் குடியேறும் மனிதன் கடைசி வரை பாருங்கள் !
சிலருக்கு கத்தி, கத்தரிக்கோல் கூட கிடைக்காது. கூர்மையான பாறைக் கற்கள் தான். நான் பிழைத்து விட்டேன்.

ஆனால், லட்சக்கணக்கான என் சகோதரிகள்? அறுவையின் போது சிலர், அறுவை க்குப் பின் நோய்த் தொற்று ஏற்பட்டு சிலர்,

அப்படியே உயிர் பிழைத் தாலும் குழந்தைப் பேற்றின் போது சிலர் என அடுக்கடுக்காய் செத்துப் போகிறார்களே! அவர்களை யார் காப்பாற்றுவது?

பெண்ணுறுப்பு சிதைவுக்கு எதிரான இயக்கத்து க்கு இவரைத் தான் தூதுவராக உலக சுகாதார அமைப்பு நியமித் துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 6-ம் நாளை உலக பெண்ணுறுப்பு சிதைவு எதிர்ப்பு நாளாக கடை பிடிக்கப் பட்டு வருகிறது. மனிதன் காட்டு மிராண்டியாக வாழ்ந்த காலம் வரை எந்த பிரச்சனையும் இல்லை.
பல்லாண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு !
அவனே ஓரிடத்தில் நிலையாக தங்கி சொத்து சுகங்களை சேர்த்தப் பின் தனது வாரிசில் கலப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற் காக அவன் பெண்ணை படுத்திய பாடு இருக்கிறதே..

உலகம் உள்ள வரை ஆணிண த்துக்கு பெண்ணிடம் இருந்து மன்னிப்பு கிடைக்காது. இத்தனை பாவம் செய்த ஆண் என்ன பரிகாரம் செய்து அந்த பாவங்களை கழுவப் போகிறானோ தெரிய வில்லை.
சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் பாம்பு !
இதை எதிர்க்கும் அளவுக்கு அங்குள்ள பெண்களு க்கு கல்வியறிவோ பொரு ளாதார சுதந்திரமோ இல்லை. அதனால் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்னமும் இந்த சடங்கு செய்த பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று சொல்லும் அந்த நாட்டு ஆண்களை என்ன செய்வது..? ஐ.நா. சபை இதை மனித உரிமை மீறல் என்று சொல்லியும் குறைந்த பாடில்லை
Tags: