உஷாரய்யா உஷாரு.. பாத்ரூம் போறப்ப கூட என்னை துரத்துறம் கண்கள் !

Fakrudeen Ali Ahamed
பெண்களு க்கு மட்டுமே பாலியல் சீண்டல்கள் நடப்ப தில்லை. அவர்களை விட அதிகமாக எங்களு க்கு நடக்குது. ஆனால், எங்களைப் பாதுகாக்க சட்டத்தில் இடமில்லை" எனத் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தர வுகளை வலியோடு பகிர்கிறார், 
உஷாரய்யா உஷாரு.. பாத்ரூம் போறப்ப கூட என்னை துரத்துறம் கண்கள்
திருநங்கை கிரேஸ் பானு. ''திருநங்கைகள் பெருசா பாதிக்கப் படுவது வார்த்தை களாலும் உடல் ரீதியாகவும் தான். நான் கிராமத்தில் பிறந்தேன்.

அங்கே தான் ஸ்கூல் படிச்சேன். பெற்றோர், உடன் பிறந்தோர் என இருந்தும் குடும்பச் சூழ்நிலை யாலும் சமூக சூழ்நிலை யாலும் வீட்டை விட்டு வெளியே றிட்டேன்.

இப்போ எனக்கு 29 வயசு. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து பல்வேறு பாலியல் துன்புறுத் தல்களை அனுபவிச் சிருக்கேன். ஸ்கூல் படிச்சுட் டிருக்கும் போது என்னைச் சரியாக உணர்ந்தேன்.

என் பெற்றோரோ, எனக்கு மனநிலை சரியில்லனு மனநல மருத்து மனையில் சேர்த்தாங்க. அங்கிருந்து தப்பிக்க, 'நான் நல்லா தான் இருக்கேன். எனக்கு எந்த மாற்றமும் ஏற்படலை'னு பொய் சொல்லி வீட்டுக்கு வந்தேன்.

பன்னிரண்டாம் வகுப்பு படிச்சப்போ நான் திருநங்கை ங்குனு சொல்லி பள்ளியில் ஏத்துக்க மறுத்தாங்க. என் அம்மாவும் அப்பாவும் தலைமை ஆசிரியர் கால்ல விழுந்து கெஞ்சினாங்க.

அப்போ தலைமை ஆசிரியர் ரெண்டு கண்டிஷன் போட்டார். ஒண்ணு, வகுப்புக் குள்ளே அனுமதி க்காம, அவர் ரூம் வாசலில் செருப்பு வைக்கும் இடத்துல உட்கார்ந்து தான் படிக்கணும்.
ரெண்டாவது, ஸ்கூலில் யாரும் என்கூட பேசக் கூடாது. நானும் அவங்களோடு பேசக் கூடாது. வீட்டுல உள்ளவங் களுடைய வற்புறுத்த லால் அதுக்கு ஒத்துகிட்டேன்.

அப்போ, ஸ்கூலில் என்னோடு படிக்கிற பசங்க ளெல்லாம்... அலி போன்ற இழிவு படுத்தும் வார்த்தைகளில் என்னை கூப்பிடுவாங்க. பாத்ரூம் கூட போக முடியாது.

ஏன்னா, பசங்க பாத்ரூமு க்குள் போனால், நான் எப்படி பாத்ரூம் போறேனு கூடிநின்னு பார்ப்பாங்க.

அதுக்கு பயந்தே போக மாட்டேன். அடக்கி வெச்சுட்டு, ஸ்கூல் முடிஞ்சதும் அவசர அவசரமா வீட்டுக்கு ஓடுவேன். சில பசங்க என்னை சுவத்துல சாய்ச்சு முத்தம் கொடுத்துட்டு ஓடுவாங்க.

எனக்கு அருவருப்பா இருக்கும். ஒரு பொண்ணு க்கு இப்படி யாச்சுன்னா கம்ப்ளைன்ட் பண்ணலாம். ஒரு திருநங்கை யார்கிட்ட சொல்றது?

எங்களுக்கு நடந்தா இந்தச் சமூகம் வேடிக்கை தான் பார்க்குமா? தொடர்ந்து அந்த ஸ்கூல்ல நிறைய பாலியல் துன்புறு த்தல்கள்.

அதே மாதிரி வீட்டைச் சுற்றி உள்ளவங்க கொடுத்த டார்ச்சரால், என் வீட்டுல உள்ளவங் களும் என்னை காயப்படுத் தினாங்க. இதை எல்லாம் பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே றிட்டேன்.

திருநங்கை கிரேஸ் பானு வீட்டை விட்டு வெளியேறிய திருநங்கையை இந்தச் சமூகம் எப்படி நடத்தும்னு சொல்லணுமா? வெறுத்து ஒதுக்கி பல தொல்லை களைக் கொடுத்துச்சு.
என்னை மாதிரி ஒரு திருநங்கை அரவணைப்பில் வளர்ந்தேன். அப்போ தான் பாலிடெக்னிக் படிக்கப் போனேன். அந்தக் கல்லூரி யில் ஒரு சில பசங்க என்னை ஏத்துக் கிட்டாங்க.

ஒரு சிலர் திருநங்கைனு ஒதுக்கி னாங்க. நான் போகும் போதும் வரும் போதும், 'ஊரோரம் புளியமரம்' பாட்டு பாடுவாங்க. அதை எல்லாம் சகிச்சுக் கிட்டு தான் கல்லூரி படிப்பை முடிச்சேன்.

அப்புறம், இன்ஜீனியரிங் காலேஜ் சேர்ந்தேன். கொஞ்சம் ஆறுதல் கிடைச்சது. அங்கே படிச்ச பசங்க, என்னை அக்காவா பார்த்தாங்க; நடத்தினாங்க.

ஆனால், சமூக தீண்டாமை, குடும்பத் தீண்டாமை யோடு அரசும் தீண்டாமை க்கு உட்படுத்தி யதை யார்கிட்ட சொல்ல முடியும்?

நான் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நேரம், ஒரு வீட்டில் நானும் பிரித்திகாவும் (இன்றைய, முதல் திருநங்கை சப் இன்ஸ்பெக்டர்) மட்டும் தான் இருந்தோம். நைட் ஒரு மணி இருக்கும்...

யாரோ வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டு, ஜன்னல் வழியா பார்த்தோம். ஒரு பையன், 'கதவைத் திற... நான் உள்ளே வரே'னு சொன்னான். நாங்க அவனை 'போ, போ'னு விரட்டறோம்.

ஆனாலும், அவன் கதவை தொடர்ந்து தட்டிப் பார்த்துட்டு, கல்லைத் தூக்கி எறிஞ்சான். ரொம்ப நேரம் கழிச்சுதான் போனான். நைட் ஒரு மணிக்கு எங்க வீட்டுக் கதவை தட்டி கூப்பிடும் உரிமையை,
தைரியத்தை அவனுக்கு யார் கொடுத்தாங்க? அதை நினைச்சு கோபமும் வேதனையும் உண்டாச்சு.

திருநங்கை கிரேஸ் பானு நான் சமூகப் போராட்ட களில் ஈடுபடும் போதெல்லாம் கைது செய்து கூட்டிட்டுப் போகும் போது,

போலீஸ் கண்ட கண்ட இடத்தில் கை வைப்பாங்க. அரியலூர் அனிதாவுக் காகப் போராடும் போது என் ஆடைகளைக் கழற்றி, நிர்வாணமா நிக்க வெச்சதை ஏத்துக்கவே முடியாது.

ஒரு பெண் போலீஸ், நான் அறுவை சிகிச்சை பண்ண இடத்தைப் பார்த்துட்டு, 'என்ன இது இப்படி இருக்கு?'னு சக போலீஸ் கிட்ட சொல்லி சிரிச்சாங்க. என் மார்பு களையும் தொட்டுப் பார்த்தாங்க.

அவங்ககிட்ட என்ன இருக்கோ, அதுதான் என்கிட்டயும் இருக்கு. ஆண்கள் மட்டு மில்லாமல், பொண்ணு ங்களும் எங்களை பாலியல் வன்கொடுமை பண்றாங்க.

ஒரு பெண்ணோ, ஆணோ பாலியல் ரீதியா பாதிக்கப் படும் போது, குற்றவாளி மீது வழக்குத் தொடர இருக்கிற சட்டத் திட்டங்கள், எங்களை ஏத்துக்க மறுக்குது.

எங்களுக் காகப் புதுசா ஒரு சட்டம் இயற்ற சொல்லலை. இருக்கும் சட்டத்தில் எங்களையும் இணைக்கச் சொல்றோம். அதுகூட நடக்கலை.

நாங்களும் மனிதர்கள் தான் என்பதைச் சட்டமும், சமூகமும் எப்போ உணரப் போகுது?'' எனக் கொதிப்புடன் கேட்கிறார் கிரேஸ் பானு.
Tags: