40 க்கு மேல் பெண்கள் அழகாவது எப்படி?

Fakrudeen Ali Ahamed
இன்னும் ஆறு மாதங்க ளில் என்னுடைய வயது நாற்பதை எட்டி விடுகிறது. பெண்க ளைப் பொறுத்த வரை குழந்தை பிறந்த பிறகு, 

அவர்கள் அவ்வள வாக தங்கள் உடல் கட்டுக் கோப்பிலும், அழகுத் தோற்றத்தி லும் போதிய கவனம் செலுத்துவ தில்லை. 

நாற்பதுக்கு பிறகும் பொலிவாக தெரிவது எப்படி?

- சுமதி, நாவலூர இது ஒரே ஒரு சுமதியின் பிரச்சினை மட்டு மல்ல. உலகெங்கும் வாழும் நடுத்தர வயதை எட்டிய ஒவ்வொரு பெண்ணின் அந்தரங்க மான மனக்க வலையும்கூ ட.

‘‘பொதுவா அழகா இருக்க ணும்னு க்ரீம்களை தான் பயன்ப டுத்துவோம். சித்தா, ஆயுர்வேத அழகு நிலை யங்கள் கூட க்ரீமை பரிந்து ரைக்கறாங்க. 

ஆனா, முகப்பூச்சு இல்லாமயே கூட அழகாக முடியும்...’’ என்கிறார் நாராயணன், எக்ஸ்கோட் நிறுவ னத்தின் தலைவர். 

இவர், அழகுக்கும் நம் மரபணுக்க ளுக்கும் கூட தொடர்பி ருக்கிறது என்கிறார். ‘‘இன்னைக்கு எல்லாருமே மோசமான சுற்றுப்புறச் சூழல்ல தான் வாழ்ந்து கிட்டு இருக்கோம். 
வாகனங்க லேருந்து வெளியாகிற தூசு, புகை, குடிப்ப ழக்கம், மனஅழுத்த ம்னு நம்ம சருமம் முதுமை யான தோற்ற த்தைத் தர நிறைய காரணிகள் இருக்கு.

இது எல்லாத்தை யும் விட முறையற்ற உணவுப்ப ழக்கமும், உடற்ப யிற்சியின்மை யும் தான் முதுமைக்கு வாசலை திறந்து விடுது. 

எதுவெ ல்லாம் சாப்பிடக் கூடாதோ அதை யெல்லாம் தான் விரும்பிச் சாப்பி டறோம். 

அதனால தான் முகத்துல சுருக்கம் விழுது. நம்ம முகத்துல இருக்கிற தசைகள் எல்லாமே எலாஸ்டிக் தன்மை கொண்டது தான்.

அதுல பாதிப்பு வர்றப்ப நிச்சயமா, சுருக்கம், கண்க ளுக்கு கீழ கரு வளையம் உருவாகும். அதனால தான் எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்க ணும்னு பெரியவங்க சொல்றா ங்க. 
இது மட்டும் தான் முக தசை களை ஆரோக்கி யமாவும், புத்துணர்ச்சி யோடவும் வைச்சி ருக்கும். 

இதுக்கு பதிலா மனஅழுத்தம், கோபம்னு இருந்தா முதுமையை நாமே வெத்தலை பாக்கு வைச்சு வரவேற்கிற மாதிரி ஆகும். 

இதெல்லா மே எல்லா ருக்கும் தெரிஞ்ச விஷயங்கள்தா ன். இது போக இன்னொரு விஷயம் இருக்கு. 
அது தான் மரபணுக்கள் கொண்டு நமக்கு ஏன் முதுமை ஏற்ப டுதுன்னு கண்ட றியறது. இதன் மூலம் நிச்சயம் நாற்பது வயசுக்கு மேலயும் இளமையா இருக்க முடியும். 

நம்ம எச்சில் வைத்தே மரபணு சோதனை செய்யலாம். அதன் மூலம் என்ன காரணத்து க்காக முதுமை ஏற்படு துன்னு கண்டு பிடிக்கலாம். 

பிறகு உணவுப்ப ழக்கம் மற்றும் என்ன மாதிரி யான உடற்பயிற்சி தேவைன்னு கண்டறி யலாம்.

இந்த வழி முறைகள் நபருக்கு நபர் மாறும். பெண்களை பொறுத்த வரை 25 வயசுக்கு மேல கொஞ்சம் கொஞ்சமா உள்ளு க்குள்ள முதுமை தோன்ற ஆரம்பிக்கும். 

இது 40 வயசுக்கு மேல வெளிப்ப டையா தெரியும். ஆனா, இப்ப இருக்கிற லைஃப்ஸ்டை ல்ல 30 வயசுக்கு மேலயே வெளிப்ப டையா சுருக்க ங்கள் தெரிய ஆரம்பி ச்சிடுது.

பொதுவா செல்கள் தின ந்தோறும் இறக்குது, அதுக்குப் பதிலா புதிய செல்கள் பிறக்கு துன்னு நமக்குத் தெரியும். 
இந்த புதிய செல் உருவா கிறது எப்ப தாமத மாகுதோ அப்ப வெளி ப்படையா முதுமை தெரியும். அழகு நிலைய த்துக்கு போய் வெளிப்ப டையான மாற்றத்தை ஓரளவு மறைக்க லாம்.

ஆனா, உட்புறம் ஏற்படுகிற மாற்ற த்துக்கு என்ன செய்யறது? உணவுப்ப ழக்கமும், உடற்ப யிற்சியு ம்தான் இதுக்கு தீர்வு.

ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ் - கொலாஜன். இந்த இரண்டு லயும் மாற்றம் ஏற்ப டறப்ப முதுமை தெரியும். 

நம்ம உடம்புல போது மான அளவுக்கு ஃபிரீரா டிகல்ஸ் மற்றும் ஆன்டிஆக்சி டென்ட்ஸ் 

சுரக்க லைனா ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ் ஏற்படும். ஃபிரீராடிகல்ஸ் அதிகமாக சுரந்தா அது ஆன்டி ஆக்சி டென்ட்சை பாதிக்கும்.

சருமத்துல ஏற்படற சுருக்க ங்களை கொலாஜென், பாது காக்கும். இது ஒவ்வொரு நாளும் உடையும். புதுசு புதுசா உற்ப த்தியாகும். 

இதுல மாற்றம் ஏற்பட்டா முகத்துல சுருக்கம், கண்க ளுக்கு கீழ கரு வளையம் ஏற்படும். இதை யெல்லாம் மரபணு சோதனைல தான் கண்டறிய முடியும்.
பொதுவா நம்ம சரும த்துக்கு புரதம், வைட்டமின், மினரல்கள் அவசியம். சராசரி அளவுல இதை நம்ம உணவுல சேர்த்து கிட்டா போதும். 

அதுபோக நிறைய தண்ணீர் குடிக்கணும். நம்ம உடம்புல 75% தண்ணீர் தான் இருக்கு. 

உடல்ல இருக்கிற நச்சுத்த ன்மையை போக்க வும், சருமம் பளபளப்பா மின்னவும் தண்ணீர் அவசியம். 

மத்த பொருட்களை விட பால்ல கால்சியம் குறைவு தான். ஆனாலும் தினமும் பால் குடிக்க சொல்றோம். 

குறைந்த அளவுல கால்சியம் இருந்தாலும் அதை முழுமையா உடம்புக்கு சேர்க்கிறது பால்தா ன்.
வேகாத, பாதி வெந்த, முழுமை யான வெந்த உணவு கள்னு மூணு வகையா நம் சமையலை பிரிக்கலாம். 
இதையெ ல்லாம் அப்படியே சாப்பி டலாம் அல்லது ஜூஸ் பிழிஞ்சு, தேன் கலந்து குடிக்கலாம். 

பேரீச்சம் பழத்துலயும், தேன்லயும் இரும்பு ச்சத்து இருக்கு. இதை வைட்டமின் சி கொண்ட பழங்க ளோட சாப்பிட்டா, முழுமை யான ஆரோ க்கியம் கிடைக்கும்.

கார்போ ஹைட்ரேட்டை குறைச்சு, புரதசத்து அதிக மிருக்கிற உணவு களை சாப்பிடலாம். முக்கியமா நேரம் தவறாம சாப்பி டணும். இதை யெல்லாம் செய்தாலே நாம இளமையா இருக்கலாம்...’’ 

என்று சொல்லும் நாராயணன், சருமத்தின் வெளிப்பு றங்களை பாது காப்பதும் அவசியம் என்கிறார். ‘‘அதனால தான் ஒவ்வொரு த்தரோட சருமத்து க்கு ஏற்ற க்ரீமை பரிந்துரை க்கிறோம். 

இதுக்கா கவே சென்னைல இருக்கிற எல்லா பியூட்டி பார்லரோடயும் இணைந்து செயல்ப டறோம். 

மரபணு சோத னைக்கு பிறகு, என்ன வகையான க்ரீம் தேவைனு ஆய்வு செய்வோம். 
அதே போல உடற்ப யிற்சியை யும் பரிந்து ரைக்கிறோம். தினமும் அரை மணி நேரமாவது எக்சர்சைஸ் செய்யணும். 

முகச்ச ருமத்து க்கும் சின்னச் சின்ன மசாஜ் செய்யலாம்.’’ படம் 1ல் குறிப்பிட்டி ருப்பது போல் கண் ஓரங்களில் உள்ள தசைகளை மேலே இழுத்து பின்பு மெதுவாக விட வேண்டும். 

இதை தினமும் ஐந்து முறை செய்ய லாம். இதனால் கண்க ளுக்கு கீழ் உள்ள கரு வளையமும், சுருக்க மும் நீங்கும்.

படம் 2ல் இருப்பது போல நெற்றிப்ப குதியில் உள்ள தசை களையும் சுறுக்கி விரி வாக்கும் போது அந்தப் பகுதியில் உள்ள சுருக்கம் மறையும்.
‘‘இதே மாதிரி முகத்தோட ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மசாஜ் இருக்கு. இதையும் தினமும் செய்யணும். 

அப்புறம் பாருங்க... எவ்வளவு வயசானாலும், அதை விட இருபது வயசு குறைச்ச லாத்தான் தெரிவீங்க...’’ என்றார் நாராயணன்.
Tags: