சர்க்கரைக்கும், புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு என்ன?

Fakrudeen Ali Ahamed
0
ஆரோக்கியமான செல், உடல் இயக்கத்துக்கான செம்மையான பணியை முடித்து, பின் இறந்து, அடுத்த செல் வளர வேண்டும். இது தான் செல்களின் இயல்பான வேலை. 
சர்க்கரைக்கும், புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு
அப்படி அல்லாமல், புதிது புதிதாக அதீத வளர்ச்சியில் கட்டுப்பாடற்று செல்கள் உருவாகி பிறகு கட்டிகளாகும். 
 
இப்படியாக கட்டுப்பாடில்லாமல் பிரிந்து பிரிந்து வளர்ச்சியடையும் செல்கள் திசுக்கட்டிகளாக ( Lumbs or Masses) மாறுகின்றன. 
 
ஒன்று தீமை விளைவிக்காத கட்டி (Benign Tumor) மற்றொன்று புற்றாக மாறக்கூடிய கட்டி (Malignant tumor) உடலில் தோன்றும் எல்லாக் கட்டிகளையும் புற்றுநோயாக கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.
ஆனால், பினைன் கட்டிகள், மெலிங்னென்ட்டாக மாற வாய்ப்பிருக்கிறது. புற்றுநோய்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. 
 
உடல் உறுப்புகளில் எந்தெந்த இடங்களில் இவை தோன்றுகிறதோ அதற்குத் தகுந்தாற் போல வகைப் படுத்தப்பட்டுள்ளன.

கேன்சர் செல்களானது, ஜீரண மண்டலம், ரத்த ஓட்டம் மற்றும் நரம்பு மண்டலங்களில் தீமை செய்யும் ஹார்மோன்களை விடுவித்து உடல் இயக்கத்தில் மாற்றம் செய்து விடும். 
 
புற்றுநோய் செல்கள் இரண்டு வகையில் தனக்கான இடத்தை தக்க வைக்கின்றன. 
புற்றுநோய் செல்கள்
முதலில் இந்த செல்கள் தங்களை பெருக்கிக் கொண்டு ஆக்டோபஸ் போல தன் கொடிய கரங்களால் ரத்தம் மற்றும் நிணநீர் பாதைகளில் உள்ள ஆரோக்கியமான திசுக்களை அழித்துக் கொண்டே அதிவேகமாக உள்ளே பரவும்.

இதற்கு ஆங்கிலத்தில் இன்வேசன் (Invasion) என்று பெயர். அடுத்ததாக, இந்த அரக்க செல்கள் பலமடங்கு பிரிந்து, வளர்ந்து தனக்கென புதிய ரத்த நாளங்களை உருவாக்கிக் கொண்டு வளர்ச்சிக்கான சத்துகளைப் பெற்று சுயாட்சி நடத்தும்.
 இதை ஆஞ்சியோஜெனிசிஸ் (Angiogenesis) என்கிறார்கள். இந்த நிலைக்கு தன்னை நிலைப்படுத்திக் கொண்ட தீய செல்கள் ஒரு கட்டத்தில் எந்த மருந்து மாத்திரைகளுக்கும் அடங்காமல் பசை போல் ஒட்டிக் கொள்ளும். 
 
கண்ணாமூச்சி ஆட்டம் போல் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருக்கும். அதே நேரம் அதற்குச் சாதகமாக, நன்மை தரக்கூடிய செல்களை அழிக்கும்.
உடல் சார்ந்த பிரச்சனைகள்
சர்க்கரை புற்றுநோய்க்கு காரணமாக இருக்க முடியுமா? என்பது பலராலும் கேட்கப்படும் ஒரு கேள்வியாகும். 
 
அதிக இனிப்பை உட்கொள்வதால் நீரிழிவு, உடல் பருமன் என்று பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகின்றன.

இதன் காரணமாக இன்று பலரும் சர்க்கரை உட்கொள்ளும் அளவைக் குறைத்துக் கொண்டு வருகின்றனர். 
 
இந்தநிலையில், அதிக இனிப்பு உட்கொள்ளல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு புற்றுநோயை உண்டாக்க முடியும் என்று பரவலாக சில கூற்றுகள் கூறப்படுகின்றன.
இது உண்மையா? சர்க்கரை மற்றும் புற்றுநோய்க்கான தொடர்பு பற்றி ஆராய்ச்சிகள் என்ன கூறுகின்றன? 
 
உலக புற்றுநோய் தினமான இன்று சர்க்கரை மற்றும் புற்றுநோய்க்கான தொடர்பு குறித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்.

​ஆராய்ச்சிகள் என்ன கூறுகின்றன?
​ஆராய்ச்சிகள் என்ன கூறுகின்றன?
உலக அளவில் சர்க்கரை உட்கொள்ளல் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இருப்பினும் புற்றுநோய் மற்றும் சர்க்கரைக்கான தொடர்பு அறியப்படாமல் இருந்து வருகிறது. 
 
சர்க்கரை உட்கொள்ளல் மற்றும் புற்றுநோய்க்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை. 
 
இருப்பினும், அதிக சர்க்கரை உட்கொள்வதால் அதிகரிக்கும் சில ஆபத்து காரணிகள் புற்றுநோய்க்கான அபாயத்தை ஊக்குவிக்கலாம் என்று பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகின்றன.
சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் கார்சினோஜெனிஸிஸ் மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சிக் காரணி-I (IGF – I)போன்ற பொருத்தமற்ற தொகுப்பை ஊக்குவிப்பதன் மூலம், 
 
ஆக்சிஜனேற்ற அழுத்தம் மேம்பட வழிவகுக்கலாம் மற்றும் உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

​இயற்கை உணவிலுள்ள சர்க்கரை
​இயற்கை உணவிலுள்ள சர்க்கரை
இயற்கையாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் போன்றவற்றில் இருக்கும் சர்க்கரை ஒரு பகுதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், 
 
பதப்படுத்தப்பட்ட உணவுகள், பானங்கள் தயாரிக்கும் போது அல்லது பதப்படுத்தும்போது பயன்படுத்தும் சர்க்கரை அல்லது சிரப் போன்றவை சர்க்கரையின் முக்கிய ஆதாரமாக கருதப்படுகின்றன.

2004ம் ஆண்டு. ஊட்டச்சத்து இதழில் வெளியான ஆய்வின் படி, உணவு மற்றும் ஊட்டச்சத்து, புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. 
 
பழங்களை அப்படியே உட்கொள்ளும் போது கிடைக்கும் சர்க்கரை நார்ச்சத்தோடு கூடியது. 
 
ஆனால் அதுவே பழங்களை ஜூஸாக எடுத்துக் கொள்கின்ற பொழுது, அதில் நார்ச்சத்து முழுவதுமாக நீக்கப்பட்டு வெறும் சர்க்கரை மட்டுமே எஞ்சி நிற்கும். ​நீரிழிவு
அடர்த்தியற்ற ஊட்டச்சத்துகள் அடங்கிய செறிவூட்டப்பட்ட சர்க்கரை மற்றும் சுத்தீகரிக்கப்பட்ட மாவு போன்றவற்றை உட்கொள்வதால் க்ளுகோஸ் வளர்சிதை மாற்றம் பலவீனமாகிறது. 
 
இது நீரிழிவிற்கு வழிவகுக்கிறது. மேலும் குறைந்த நார்ச்சத்து உணவுகளை உட்கொள்வது, சிவப்பு இறைச்சி உட்கொள்வது, 
 
ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்புகள் சமச்சீரின்மை போன்றவை புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கலாம்.

அதனால் தான் மருத்துவர்கள் பழங்களை அப்படியே பழங்களாகவே எடுத்துக் கொள்ளுங்கள். 
 
பழச்சாறாக எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிருங்கள் என்று சொல்வதே ​நீரிழிவின் அபாயத்தை குறைப்பதற்கான ஒரு வழிமுறை தான்.

​சர்க்கரை எவ்வாறு புற்றுநோய்க அபாயத்தை அதிகரிக்கிறது?
​சர்க்கரை எவ்வாறு புற்றுநோய்க அபாயத்தை அதிகரிக்கிறது?
ஆரோக்கியமற்ற உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது புற்றுநோய் அபாயத்திற்கான முக்கிய காரணியாகும். 
 
அமெரிக்காவில் புற்றுநோயால் இறப்பவர்களில் 14% ஆண்கள் மற்றும் 20% பெண்கள் அதிகரித்த உடல் எடை மற்றும் உடல் பருமன் போன்ற பாதிப்புகளைக் கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், உணவுக்குழாய், பெருங்குடல் மற்றும் மலக்குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம், சிறுநீரகம், வயிறு, புரோஸ்டேட், மார்பகம், கருப்பை, கருப்பை வாய் மற்றும் சினைப்பை 
 
ஆகியவற்றில் புற்றுநோய் தாக்கி இறந்தவர்களுக்கான அதிக இறப்பு விகிதத்திற்கும் உடல் பருமனுக்கும் நேரடி தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 
 
புற்றுநோய்க்கான அபாயத்திற்கும் சர்க்கரை: உட்கொள்ளலுக்கும் மறைமுக தொடர்பு இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

அவை பின்வருமாறு...

​அதிக கலோரிகள்
சர்க்கரைக்கும், புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு என்ன?
சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்வது என்பது உடலுக்கு தேவையானதை விட அதிக கலோரிகள் உட்கொள்வது என்று அர்த்தம் என்று 
 
அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் கேன்சர் ரிசர்ச் (ஏ.ஐ.சி.ஆர்) கூறுகிறது. இதனால் அதிகரித்த உடல் எடை மற்றும் உடல் பருமன் உண்டாகிறது.

இதனால் கணையப் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்ற பொதுவான புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
சாதாரணமாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவின் கலோரி அளவை சர்க்கரையை எடுத்துக் கொள்ளும் போது இரு மடங்காகி விடுகிறது. 
 
இதனால் மெட்டபாலிசம் பாதிக்கப்படுவது, உடல் பருமன் என தேவையற்ற எல்லா சிக்கல்களையும் உங்கள் உடல் சந்திக்க நேரிடும்.

​பலவீனமான க்ளுகோஸ் வளர்சிதை மாற்றம்
​பலவீனமான க்ளுகோஸ் வளர்சிதை மாற்றம்
சுத்தீகரிக்கப்பட்ட சர்க்கரை என்பது உயர் ஆற்றல் மற்றும் குறைந்த ஊட்டச்சத்து கொண்ட உணவு. செறிவூட்டப்பட்ட சர்க்கரை, சுத்தீகரிக்கப்பட்ட மாவு போன்றவற்றை 
 
உட்கொள்வதால் கார்போஹைட்ரேட் உட்கொள்ளல் அளவு அதிகரிக்கிறது, இதன் காரணமாக க்ளுகோஸ் வளர்சிதை மாற்றம் பலவீனமாகிறது.

அதனால் சர்க்கரையோடு கார்போ ஹைட்ரேட் நிறைந்த , குளூட்டன் நிறைந்த உணவுப் பொருள்களும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 
 
அதனால் அரிசி, கோதுமை என முடிந்த அளவு மாவுப் பொருள்களைத் தவிர்த்து அதற்கு பதிலாக நார்ச்சத்து நிறைவாக இருக்கும் சிறு தானியங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

​உயர் க்ளைகோமிக் குறியீடு:
​உயர் க்ளைகோமிக் குறியீடு:
உயர் க்ளைகோமிக் குறியீடு கொண்ட உணவு மற்றும் புற்றுநோய்க்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் வெளியிடப்படுகின்றன. 
 
அதிகரித்த கிளைக்கமிக் சுமை, இரைப்பை, எண்டோமெட்ரியல், சினைப்பை, பெருங்குடல் புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
 
மேலும் குடல் புற்றுநோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய், கணையப் புற்றுநோய் போன்றவற்றுடன் நீரிழிவு பாதிப்பிற்கு தொடர்பு உள்ளது .
எனவே க்ளுகோஸ் வளர்சிதை மாற்றத்தின் ஒழுங்கின்மை புற்றுநோய்க்கான அபாய காரணிகளில் ஒன்று என்பது அறியப்படுகிறது. 
 
high cylcemic புற்றுநோயுடன் நேரடித் தொடர்பு இருப்பது மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

​அபாயத்தைக் குறைப்பது எப்படி?
​அபாயத்தைக் குறைப்பது எப்படி?
1. குறைந்த கலோரி அல்லது கலோரி அல்லாத பானங்களை சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்று ஏ.ஐ.சி.ஆர் பரிந்துரைக்கிறது. 
 
புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் உணவு அட்டவணையிலிருந்து ஹைபர் இன்சுலினீமியாவுக்கு பங்களிக்கும் உணவுகளான சுத்தீகரிக்கப்பட்ட சர்க்கரை, சுத்தீகரிக்கப்பட்ட மாவு பொருட்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

உலர் பழங்கள், நட்ஸ், குக்கி போன்ற உணவுகளில் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளலாம். டீ அல்லது காபியில் சர்க்கரைக்கு மாற்றாக கொக்கோ சேர்த்துக் கொள்ளலாம்.

2 . ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ள உணவுகளான முழு தானியங்கள், காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்ளலாம். ஆனால் சர்க்கரை மூலமாக எடுத்துக் கொள்ளும் கலோரி எண்ணிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆணுக்கு தைராய்டு வருமா? அறிகுறிகள் என்ன?

3 . பூண்டு, வெங்காயம் போன்றவை சக்தி மிகுந்த உணவுப் பொருட்களாகும். வயிறு, குடல் புற்றுநோய் மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய், போன்றவற்றைத் தடுக்கும் தன்மை இவற்றிற்கு உண்டு.

4 . ப்ரோக்கோலி, காலிப்ளவர், முட்டைகோஸ், போன்றவற்றில் புற்றுநோய் எதிர்ப்புத் தன்மைக் கொண்ட சல்பரோபென் உள்ளது.

5 . செலினியம் என்பது புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் கொண்ட ஒரு மினரல் ஆகும். இது குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. 
 செலினியம் என்பது புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் கொண்ட ஒரு மினரல்
முழு தானியம், லெக்யூம், பிரேசில் நட், சூரியகாந்தி விதைகள் போன்றவை செலீனியம் நிறைந்த உணவுகளாகும்.

6. புற்றுநோயை எதிர்த்து உடலைப் பாதுகாப்பதில் உணவிற்கு முக்கிய பங்குண்டு என்பதை மறக்க வேண்டாம்.

கர்ப்பிணிப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை !

சர்க்கரை அதிகமுள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் புற்றுநோய் எதிர்ப்புத் தன்மைக் கொண்ட காய்கறி மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)