முகத்தில் இருக்கும் குழிகள் மறைய... இதை ட்ரை பண்ணுங்க !

Fakrudeen Ali Ahamed
0
உங்களுடைய சருமம் எந்த வகை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ற சரும பராமரிப்பு தயாரிப்புகளை தேர்ந்தெடுங்கள். உங்கள் சருமம் எந்த வகை என்பது  தெரியவில்லையா? பரவாயில்லை. 
முகத்தில் இருக்கும் குழிகள் மறைய... இதை ட்ரை பண்ணுங்க !
ஆரோக்கியமான சருமத்திற்கு ஆழ்ந்து சுத்தம் செய்யும் கிரீம்களை பயன்படுத்துங்கள். உடலினுள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சரும பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. 
 
இதைத் தவிர்க்கவும் முடியாது. அப்படி பலர் தீர்வு எதுவும் கிடைக்காதா என்று தவிக்கும் ஓர் சரும பிரச்சனை தான் முகத்தில் குழிகள் காணப்படுவது.
 
இது திறந்த சருமத் துளைகள் மூடாமல் இருப்பதால் உண்டாவதாகும். இந்த பிரச்சனைக்கு தற்காலிக தீர்வைக் காண்பதை விட, அதை எப்படி முழுமையாக சரிசெய்யலாம் என்று யோசிக்க வேண்டும். 
பிளம்ஸ் பழங்களை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?
இந்த குழிகளை மறைக்க உதவும் சில இயற்கை வழிகளைப் பற்றி தான். வாருங்கள் பார்ப்போம். 
 
ஆப்பிள் சீடர் வினிகர்
முகத்தில் இருக்கும் குழிகள் மறைய... இதை ட்ரை பண்ணுங்க !
பொதுவான அழகு சார்ந்த பிரச்சினைகளுக்கு மிகவும் பயனுள்ள தீர்வுகளில் ஒன்றாக ஆப்பிள் சீடர் வினிகர் உள்ளது. இது உங்கள் சருமம் மற்றும் உச்சந்தலையில் அமில-கார சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. 
 
ஆப்பிள் சீடர் வினிகரை சரியான வழியில் பயன்படுத்துவதன் மூலம் சருமத் துளைகளை சுருக்க முடியும். 
 
1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டீஸ்பூன் நீரில் கலந்து, காட்டன் பயன்படுத்தி முகத்தில் தடவி உலர வைக்க வேண்டும். இப்படி தினமும் இரவு படுக்கும் முன் முகத்தில் தடவுங்கள்.
 
முட்டை வெள்ளைக்கரு
முகத்தில் இருக்கும் குழிகள் மறைய... இதை ட்ரை பண்ணுங்க !
முட்டையின் வெள்ளைக்கரு சருமத்தை இறுக்க உதவுவதோடு, சருமத்தின் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கும். 
 
அதற்கு ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 
பின் அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
 
கற்றாழை
முகத்தில் இருக்கும் குழிகள் மறைய... இதை ட்ரை பண்ணுங்க !
கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். 
 
இப்படி தினமும் செய்து வந்தால், திறந்துள்ள சருமத் துளைகள் சுருங்க ஆரம்பித்து, நாளடைவில் முகத்தில் உள்ள குழிகள் தானாக மறைந்து விடும். 
 
தோல் அரிப்புக்கு, கற்றாழை ஜெல்லை தடவிவர, அரிப்பு குணமாகும். வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப்  பயன்படுத்தி முகம், 
 
கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும். ஆன்டி ஏஜிங்காகவும் கற்றாழை செயல்படும்.
 
பப்பாளி
முகத்தில் இருக்கும் குழிகள் மறைய... இதை ட்ரை பண்ணுங்க !
நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். 
 
இச்செயலால் பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாப்பைன் என்னும் நொதி, திறந்துள்ள சருமத் துளைகளை மூட உதவி புரியும்.
வாழைப்பழம்
முகத்தில் இருக்கும் குழிகள் மறைய... இதை ட்ரை பண்ணுங்க !
நன்கு கனிந்த வாழைப்பழத் தோலின் உட்பகுதியால் முகத்தை மென்மையாக தேய்க்க வேண்டும். 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். 
 
இப்படி ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்தால், வாழைப்பழத் தோலில் உள்ள லுடீன் மற்றும் பொட்டாசியம், சருமத் துளைகளை இறுக்கமடையச் செய்வதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சியளிக்கும்.
 
முல்தானி மெட்டி
முகத்தில் இருக்கும் குழிகள் மறைய... இதை ட்ரை பண்ணுங்க !
முல்தானி மெட்டியில் மக்னீசியம், குவார்ட்ஸ், சிலிகா, இரும்பு, கால்சியம், கால்சைட் மற்றும் டாலமைட் உட்பட பல்வேறு கனிமங்கள் அடங்கி உள்ளது. 
 
இது சருமத்தில் உள்ள பருக்களையும், கசடுகளையும் நீக்கும். முல்தானி மெட்டி என்னும் ஒரு வகை களிமண், அனைத்து வகையான சருமத்திலும் மாயங்களை ஏற்படுத்தக் கூடியவை. 
குறிப்பாக எண்ணெய் பசை சருமத்தினருக்கு மிகவும் நல்லது. ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 2-3 டேபிள் ஸ்பூன் பால் அல்லது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். 
 
பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முகம் நன்கு பொலிவோடு இருப்பதுடன், முகத்தில் உள்ள குழிகளும் மறையும்.
 
வெள்ளரிக்காய்
முகத்தில் இருக்கும் குழிகள் மறைய... இதை ட்ரை பண்ணுங்க !
இளம் வயதில் நமது தோலில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் தோல் சுருக்கமில்லாமல் இருக்கிறது. 
 
மேலும் நீர்ச்சத்து உள்ள உணவுகள் போன்றவற்றை சாப்பிடுபவர்களுக்கு தோல் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக இது திறந்துள்ள சருமத் துளைகளை மூட உதவி புரியும். 
 
அதற்கு சிறிது வெள்ளரிக்காய் துண்டுகளை அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 
 
இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
 
கடலை மாவு
முகத்தில் இருக்கும் குழிகள் மறைய... இதை ட்ரை பண்ணுங்க !
கடலை மாவு பஜ்ஜி போண்டா போடுவதற்கு மட்டுமின்றி, அழகு பராமரிப்பு பொருளாகவும் பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
அதிலும் இதனைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், முகம் பொலிவு பெறும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 
 
1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2-3 துளிகள் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 25 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும். 
பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விட்டு, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
 
பேக்கிங் சோடா
முகத்தில் இருக்கும் குழிகள் மறைய... இதை ட்ரை பண்ணுங்க !
பேக்கிங் சோடா கொண்டு ஸ்கரப் செய்தால், திறந்த சருமத் துளைகள் குறையும். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெது வெதுப்பான 
 
நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நொடிகள் மென்மையாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். 
 
இப்படி மூன்று நாளைக்கு ஒருமுறை செய்தால், முகத்தில் உள்ள குழிகள் விரைவில் மறைவதைக் காணலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)