குழந்தைகள் முன்பு உடை மாற்ற கூடாது ஏன்?

Fakrudeen Ali Ahamed
நமக்கு, குழந்தை களே உலகம். ஆனால், குழந்தை களின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறி விட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப் படுகிறது. 

வளர் இளம் பருவத்தை எட்டும் சிறுவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது, பாலியல் படங்களைப் பார்க்கும் நோயாளி களாக மாறுவது என, 
 
குழந்தைகள் சிறு பருவத்திலேயே பாலியல் குழப்பங் களுக்கு ஆளா கின்றனர்.

பெற்றோர் செய்வதை அப்படியே காப்பி யடிப்பதும், கொஞ்சமாகத் தெரிந்த விஷயங் களை ஆர்வத்தோடு தேடித் தெரிந்து கொள்வதும் இந்த வயதின் இயல்பு.
பெற்றோர் கவனக் குறைவாகச் செய்யும் பல தவறுகள், குழந்தை களை வேறு பாதைக்குக் கொண்டு செல்கிறது. 

அவற்றில் ஒன்று, குழந்தைகள் முன்பு உடை மாற்றுவது. குழந்தை தானே அவர்களுக்கு என்ன புரியப் போகிறது என்ற எண்ணம் ஒரு பக்கம். சிறு வயதிலேயே பெண்ணுடல் பற்றித் தெரிந்து கொண்டால், 

அவர்களின் எண்ணத்தில் வித்தியாசம் தெரியாது என்று நினைக்கிற அம்மாக்கள் இருக்கி றார்கள்.

இது குறித்து மனநல மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘‘பச்சிளம் குழந்தை யாக இருந்தாலும் ஆண், பெண் இருவருமே, அவர்கள் முன்பு டிரஸ் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைக்கு ஒரு வயது ஆகும் போதே அனைத்து விஷய ங்களும் தெரியும். ஒரு வயதில் இருந்தே குழந்தையின் முன்பு டிரஸ் செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
வெளி நாடுகளின் கலாச்சாரம் வேறு., எனவே அங்கு வளரும் குழந்தை களுக்கு உடை என்பது பெரிய விஷயமாக ஈர்ப்ப தில்லை. 

ஆனால் நம் நாட்டு குழந்தைகள் அப்படி வளர்க்கப் படவில்லை. சமூகமும் அது போன்று மாற வில்லை எனும் போது நாம் தான் குழந்தைகள் முன்பு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். 

உடை மாற்றும் போது நம்மை பார்க்கும் குழந்தை களின் மனதில் அதிர்ச்சி ஏற்படும். அவற்றை அவர்களால் காட்டத் தெரியாது. 
 
அவை அப்படியே தொடரும் போது பாலியல் குழப்பத்துக்கு ஆளா வார்கள்.
குழந்தைகள் தன்னைச் சுற்றி நடக்கும் சூழலில் இருந்தே பெரும் பாலான விஷயங் களைக் கற்றுக் கொள்கிறார்கள். 
 
குழந்தை களுக்கு நாம் கற்றுத்தரும் விஷயங் களின் ரோல்மாடலாக பெற்றோரே உள்ளனர். 

இதை ஒவ்வொரு பெற்றோரும் மனதில் கொள்ள வேண்டும். குளிப்பது, உடுத்துவது என்று பெற்றோரின் தனிமையை குழந்தை களுக்கு மிகச்சிறு வயதில் இருந்தே புரிய வைக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் போது ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோரான ஆண், பெண் இருவருமே 
 
குழந்தைகள் முன் முகம் சுழிக்கும் படியாக உடுத்தக் கூடாது. எந்த சூழலிலும் கண்ணிய மாக உடுத்த வேண்டும். 
மற்றவர்கள் மனதில் உறுத்தலை ஏற்படுத்தும் படி உடுத்துவது குழந்தை களுக்கு ஒரு தவறான முன்னு தாரணமாகவே அமையும்.
நல்ல விஷயங்களை உங்களது குழந்தை களுக்கு கற்றுக் கொடுப்ப தற்கான முன்னு தாரணமாக மாற நீங்கள் செய்ய வேண்டியது இவை தான்...

* உங்கள் குழந்தைக் கான இடங்களில் நீங்கள் அவர்களு க்கான நன்மதிப் பையும் கூட்ட கடமைப் பட்டவர்கள். குழந்தை யின் பள்ளி நிகழ்ச்சி களுக்கு செல்லும் போது கண்ணியமாக உடுத்துங்கள். 

இதுவே உங்களைப் பற்றியும், உங்களது குழந்தை பற்றிய எண்ணங் களையும், மற்ற குழந்தைகள் மனதில் பதிக்க காரணமாக அமையும்.
* எவ்வளவு கோபமான சூழலிலும் உங்கள் குழந்தைகள் முன்பு கெட்ட வார்த்தை களை பயன்படுத்த வேண்டாம். பிறகு, அவர்களு க்கும் வழக்க மாக மாறி விடும்.

* வீட்டில் கணவன், மனைவி க்குள் பிரச்னை இருந்தாலும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் குழந்தை களிடம் மோசமான வார்த்தை களை பயன் படுத்தி பேசுவதைத் தவிர்க்கவும். 

இது பெற்றோர் மீது குழந்தை களின் மதிப்பீட்டை குறைக்கும்.

* மார்டன் என்ற பெயரில் குழந்தைக்கு டைட்டா கவும், மற்றவர்கள் முகம் சுழிக்கும் படியும் உடை உடுத்தி விடும் பழக்கத்தை கை விடவும். 
 
குழந்தைகள் கம்ஃபோர்டாக பீல் பண்ணும்படி டிரஸ் செய்வதே என்றும் நல்லது.

* உங்கள் குழந்தை கண்ணாடி போன்ற பொருட்களை எடுக்கும் போது, உடனே உடைத்து விடாதே என்று சத்தம் போட வேண்டாமே. அவர்களு க்கும் அது தெரியும் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
* உங்கள் குழந்தை யிடம் எந்த சூழலிலும் ‘நீ உருப்படவே மாட்ட’ என்ற வார்த்தையை பயன் படுத்தாதீர்கள்.

அது அவர்களது ஆளுமை யையும், நம்பிக்கை யையும் சிதைக்கும் வார்த்தை. குறைகளை மிகைப் படுத்தாமல் பாசிட்டி வாகப் பேசுங்கள்.

* வீட்டில் உங்களது குழந்தைக்கு என்று தேவையான விஷயங்கள் இருக் கட்டும். அப்படி இல்லா விட்டால் அவர்களுக்கு திருடும் எண்ணம் ஏற்படும்.

* வீட்டில் உள்ள வேலைக் கார்களை நாம் மரியாதை யாக நடத்த வேண்டும். நம்மையே நம் குழந்தைகள் பின்பற்று கின்றனர். 

அவர்களிடம் அளவுக்கு அதிகமாக நெருக்கம் பாராட்டு வதையும் தவிர்க்கலாம். இது பின்வரும் ஆபத்து களைத் தடுக்க உதவும்.

* உங்கள் குழந்தை வெளியில் செல்லும் போது, உங்களிடம் அனுமதி பெற்றுச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
* வீட்டில் மூடிய அறைகளு க்குள் நுழையும் போது அனுமதி பெறும் பழக்கம் அவசியம். நீங்களும் பழகிக் கொள்ளலாம்.

* புதிய சூழலையும், புதிய மனிதர் களையும் பணிவோடு அணுகும் பக்குவத்தை உங்களது குழந்தை களிடம் ஏற்படுத் துங்கள்.

இது போல் எந்தெந்த விஷயத்தில் உங்கள் குழந்தை பெட்டராக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவீர்களோ அதிலெல்லாம் உங்களை நெறிப் படுத்துங்கள் பெற்றோரே!
Tags: