ஒவ்வாமை (அலர்ஜி) வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

Fakrudeen Ali Ahamed
0
ஒவ்வாமை பரவலாக காணப்படுகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் ஆகாது. 
அப்படிப்பட்ட உணவு பொருட்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றில் இருந்து ஓதுங்கி யிருந்தால் ஒவ்வாமை பிரச்சினையே இல்லை.

பொதுவாக ஒவ்வாமையை சில அறிகுறிகளை வைத்து அடையாளம் காணலாம். உணவை வாயில் வைத்தவுடன் கூசுவதும், முகச்சுளிப்பு ஏற்படுவதும் கூட ஒவ்வாமையாக இருக்கலாம்.
மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம் !
மேலும், சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம். குரல் வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம்.

வாந்தியும் ஏற்படும். அதோடு, அடிவயிற்று வலி வரலாம். மூச்சு விடுவதில் சிரமம், பெருமூச்சு விடுதல், வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

சிலருக்கு நினைவு இழப்பும் ஏற்படுவது உண்டு. சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக் கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். 
ஒவ்வாமையை அறிகுறிகளை வைத்து அடையாளம் காண
சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும். ஒவ்வாமை ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்த செல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும்.

நோய் தடுப்பு மண்டலமும் ஒவ்வாமையால் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு. பொதுவாக வேர்க்கடலை, பட்டாணிக் கடலை போன்ற பருப்பு வகைகள் தான் அதிக ஒவ்வாமையைத் ஏற்படுத்தக் கூடியவை.
திருடருக்கு கேரள ஆசிரியர்களின் உருக்கமான கடிதம் !
இவை இம்யுனோ குளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்கிறது.

இது தவிர, முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் ஒவ்வாமை ஏற்படுத்தும் பட்டியலில் உள்ளன.

இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை, கொட்டை உணவு வகைகளில் ஒவ்வாமை ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும். மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சரி… ஒவ்வாமை வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
அலர்ஜி வராமல் தடுக்க
ஒவ்வாமையை தடுக்க ஒரே வழி, அதை ஏற்படுத்தும் உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவது தான். வெளியில் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம்.

வறுக்கப்பட்ட உணவுகள், வேக வைக்காமல் மேல்புறம் மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் வடிசாறு (soup), குழம்புகள் ஆகிய வற்றைத் தவிர்க்கவும். சாப்பிட்ட உடனேயே பழவகைகளை உண்ண வேண்டாம்.
ஹாஸ்டல் வாழ்க்கையில் ஆபத்தான நட்புகள் தெரியுமா?
மேலும், பாலிதீன் காகிதம் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலத்தை கட்டிப் பயன்படுத்தக் கூடாது. அது இரசாயன மாற்றம் அடைந்து ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)