பட்டுப் புடவையும்.. நகை பராமரிப்பும் !

Fakrudeen Ali Ahamed
0
அதிக விலை கொடுத்து வாங்கப்படும் பொருட் களுக்கு கொஞ்சம் கவனமும் அதிகம் தேவைப் படுகிறது. பட்டுச் சேலைகளை வாங்குவதில் காட்டும் அக்கறையை காட்டிலும் அதை பராமரிப் பதில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது! 
பட்டுச் சேலை

அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்­ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபள வென்று இருக்கும்.
வெள்ளி ஆபரணங் களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரண ங்கள் கறுப்பா வதைத் தவிர்க்கலாம். குத்து விளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங் களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப் போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும். கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்துத் துடைத்தால் அவை பளபளப்பாகி விடும்.

கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுக்கக் கூடாது. வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதுமானது.

விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேஷங் களுக்குச் சென்று வந்தவுடன் பட்டுச் சேலையை களைந்து உடனே மடித்து வைக்கக் கூடாது.
நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும். எக்காரணம் கொண்டும் பட்டுச் சேலையை சூரிய ஒளியில் வைக்கக் கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது.

வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது. ஏதாவது கறை பட்டு விட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும்.

அயர்ன் செய்து வைக்க

எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் தடவி 5, 10 நிமிடங்கள் வைத் திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டும்.

பட்டுப் புடவைகளை வருடக் கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக் கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறை யாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.
அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும்.

நேரடியாக அயர்ன் செய்ய கூடாது. பட்டுச் சேலையை கடையி லிருந்து வாங்கி வந்தபடி அட்டைப் பையில் வைக்காமல் துணிப் பையில் வைக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)