செல்போனில் தொல்லைகள் தப்பிப்பது எப்படி?

Fakrudeen Ali Ahamed
0
எப்பிடி சாப்பிட்டிங்களா?’என்று கேட்பதில் தொடங்கி, ‘குட் நைட் டியர்’ என்று வழிவது வரை, செல்போன் வழியே குறுஞ் செய்திகளை (எஸ்.எம்.எஸ்) அனுப்புகிறார்கள்.
 செல்போனில் தொல்லைகள்

இதுபோலவே படங்கள், வீடி யோக்கள், ரெக்கார்டிங் தகவல்களை எம். எம்.எஸ். என்ற முறையில் அனுப்புகிறார்கள்.

அறிவியல் நவீன தொழில் நுட்பமான எம்.எம்.எஸ்., தகவல் தொடர்புக்கு அவசியமான அற்புத தொழில்நுட்பம் என்றால் அதில் மிகையில்லை.

ஆனால் அவற்றால் எல்லையற்ற பிரச்சினைகள் முளைத் திருப்பதால் குற்றம் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை.
படம்பிடிக்கவும், பிறகு பயமுறுத்தவும் பயன்படும் ‘எம்.எம்.எஸ்’கள் பல பெண்களின் வாழ்க்கையை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.

இன்னொருபுறத்தில் எம்.எம்.எஸ். ஆபாசக் காட்சிகள் இளைஞர்களை செக்ஸ் போதை அடிமைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் பாதிப்பு என்னவோ பெண்களுக்குத் தான் அதிகம். அதனால் பெண்கள் இதில் மிகுந்த விழிப்புணர்வு பெறவேண்டும். பெண்கள் இந்த தொந்தரவில் இருந்து தப்பிக்க இதோ சில ஆலோசனைகள்:
 எம்.எம்.எஸ் - SMS

* பெண்கள் ரகசிய செய்கைகளில் ஈடுபடுவது தங்கள் சுய கவுரவத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் அவர்களது குடும்ப கவுரவத்திற்கும் இழுக்கு ஏற்படக்கூடும்.

சமூக நெருக்கடி களையும் அது உருவாக்கும். ஆகவே இத்தகைய இழப்புகளை எல்லாம் நினைவில் கொண்டு, வெளிவட்டார தொடர்புகளை பெண்கள் எல்லைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
 * பெற்றோரின் கண்காணிப்பைத் தாண்டி, நகரங்களில் தங்கி படிக்கும்- வேலை பார்க்கும் பெண்கள்தான் அதிகமாக ‘எம்.எம்.எஸ்’ வலையில் விழுகிறார்கள். கட்டுப்பாடற்ற சுதந்திரம் அவர்களை கட்டவிழ்த்து விடுகிறது. தனிமையும், நகரச்சூழலும் யாருடனாவது நட்பு கொள்ளத் தூண்டுகிறது.

* பெண்களின் பலவீனத்தை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் இளைஞர்கள் தங்கள் வலையில் அவர்களை எளிதில் வீழ்த்தி விடுகிறார்கள். கண்டகண்ட புகைப்படங்கள், இரட்டை அர்த்த எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வைப்பார்கள்.

‘இதிலெல்லாம் தவறு இல்லை, இதெல்லாம் சாதாரண விஷயம்’ என்று மூளைச்சலவை செய்வார்கள்.
மூளைச்சலவை

அவர்களை நம்பியோ அல்லது பதிலுக்குப் பதிலாகவோ பெண்களும் அதே பாணியில் ஏதாவது எஸ்.எம்.எஸ். செய்து விட்டால் போதும்.

அந்த சிறு துரும்பை வைத்துக் கொண்டு ‘பிளாக்மெயில்’ செய்தே தங்கள் காரியத்தை சாதித்து விடுவார்கள்.
* பணம் தேவைப்பட்டால் பணம் பறிப்பார்கள். ஊர் சுற்ற, உல்லாசம் அனுபவிக்க என்று தாங்கள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் அந்த பெண்களை வளைத்து பயன்படுத்திக் கொள்வார்கள்.

* இந்த சிக்கலில் மாட்டிக் கொள்ளும் பெண்கள் அவமானத்திற்குப் பயந்து மீள முடியாமல் தவிப்பார்கள். தவறான முடிவுகளும் எடுத்து விடுவார்கள்.

* பெண்கள் ஒருபோதும் வலைவீசும் எஸ்.எம்.எஸ்.களுக்கு பதிலளிக்கக் கூடாது. செல்போனிலும் தேவையின்றி பேசக்கூடாது. பெண்களின் ஆபாசம் கலந்த பேச்சு பெரும்பாலும் ஆண்களால் பதிவு செய்யப் படுகிறது.

எனவே இத்தகைய பேச்சுக்களை பெண்கள் தவிர்க்க வேண்டும். இல்லை யெனில் பாதிப்பு ஆண்களுக்கு இல்லை பெண்களுக்கு தான். கவனமாக இருங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)