பெற்றோர் ரேங்க் கார்டில் கையெழுத்து போடும் போது !

Fakrudeen Ali Ahamed
0
வகுப்பு ஆசிரியர் ரேங்க் கார்டைக் கொடுத்துப் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வர வேண்டும் எனச் சொன்னதும் வகுப்பின் பெரும்பான்மையான மாணவர்களுக்குப் பயம் தொற்றிக் கொள்ளும். 
பெற்றோர் ரேங்க் கார்டில் கையெழுத்து போடும் போது
ஒவ்வொரு பாடத்திலும் குறைந்து விட்ட மதிப்பெண் களுக்கு அப்பா/அம்மாவிடம் என்ன பதில் சொல்வது எனப் பதற்றமாகி விடுவர்.
 
அந்தப் பதற்றமே சிலரை அப்பாவின் / அம்மாவின் கையெழுத்தைத் தானே போட வைத்து விடுகிறது. 
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் ரேங்க் கார்ட்டில் கையெழுத்து கேட்கும் போது நீங்கள் தவறாமல் கவனிக்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

முதலில், ரேங்க் கார்ட்டை உங்களிடம் காட்டுவதற்குப் பிள்ளைகளிட மிருக்கும் அச்சத்தை உதறச் செய்ய வேண்டும். 
 
துணிவோடு வந்து, ரேங்க் கார்டில் உள்ள மதிப்பெண்கள் குறித்துப் பேசுமளவுக் கான உறவை நீங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஒப்பீடு என்பது உங்கள் பிள்ளை இதற்கு முந்தைய தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண்களுக்கும் இப்போதைய தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண்களுக்கும் தான் தவிர, 
 
மற்ற பிள்ளைகளின் மதிப்பெண்களோடு அல்ல. இதைப் பெற்றோர் தெளிவாகப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஐந்து பாடங்களில் எந்தப் பாடத்தில் மதிப்பெண்கள் குறைந்திருந் திருப்பது எது எனப் பாருங்கள். அதற்கான காரணங்களைப் பிள்ளையுடன் உரையாடுங்கள். 
 
பிரச்னை என்ன வென்று தெரிந்து கொள்வதுடன் அதைச் சரி செய்வது குறித்துத் திட்டமிடுங்கள். மதிப்பெண்கள் பெறுவதில் வகுப்பில் முதல் இடம் என்பது ஒருவருக்குத் தான் கிடைக்கும். 
அதனால், உங்கள் பிள்ளை ஒரு முறை முதல் இடம் பெற்றால், தொடர்ந்து அதே போல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பில் இருக்காதீர்கள். 
எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாரோ அதைப் பாராட்டி, அடுத்து இன்னும் அதிக மதிப்பெண்கள் எடுக்க ஊக்கு வியுங்கள்.

மதிப்பெண்கள் குறைவாக இருக்கின்றன' என்பதைக் கூறி கையெழுத்து போடுவதற்கு மறுக்காதீர்கள். இப்படிச் சொல்வதே பிள்ளையிடம் அச்சத்தை விதைப்பதாகும். 
 
அடிப்பது, திட்டுவது போன்ற வற்றைச் செய்யும் போது அடுத்த முறை ரேங்க் கார்டு தந்தால் பிள்ளைகளே பெற்றோரின் கையெழுத்தைப் போட்டு விடுவர். அதற்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள்.

உங்களிடம் தரப்படும் ரேங்க் கார்டு கிழிந்தோ, மடிந்தோ, கறைபட்டோ இருந்தால் அதைப் பிள்ளைகள் தான் செய்திருப்பார்கள் எனும் முடிவுக்கு வந்து விடாதீர்கள். 
 
பள்ளியில் தரும் போதோ, வாகனத்தில் வரும் போதோ அவ்வாறு ஆகியிருக்க லாம். ஒரு வேளை பிள்ளைகளே அப்படிச் செய்திருந்தால் பேசி, அடுத்த முறை கவனமாக இருக்கச் சொல்லுங்கள். ரேங்க் கார்டில் Feedback பகுதியில் ஆசிரியர் குறிப்பிட்டுப வற்றை மறக்காமல் படித்து, அந்தக் குறைகளைச் சரி செய்ய முயலுங்கள்.
பெற்றோர் ரேங்க் கார்டில் கையெழுத்து போடும் போது !
ரேங்க் கார்டில் மதிப்பெண்களத் தவிர, பிள்ளைகளின் வருகை நாள்களைக் குறிப்பிட்டிருப் பார்கள். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாத நாள்களின் எண்ணிக்கை எத்தனை என உங்களுக்குத் தெரியும். 
 
அதுவும் ரேங்க் கார்ட்டில் உள்ள விடுப்பு நாள்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கிறதா என்று சரி பாருங்கள். வித்தியாசம் இருந்தால், பிள்ளைகள் மற்றும் ஆசிரியரிடம் பேசி, அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ரேங்க் கார்டைத் திருப்பித் தரும் போது ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் சொல்லும் விதத்தில் உங்கள் பிள்ளையைத் தயார் செய்யுங்கள். 
தயங்கியோ, பயந்தோ வகுப்பில் நிற்கும் சூழலிலிருந்து காப்பாற்றுங்கள்.முடிந்த வரை ரேங்க் கார்டை நீங்களே பள்ளிக்குக் கொண்டு சென்று கொடுத்து, ஆசிரியரிடம் பேசுங்கள். 
மதிப்பெண்கள் குறைவதற்கு, உங்கள் பிள்ளை சரியாகப் படிக்காதது மட்டுமே காரணம் என்று நினைக்காதீர்கள். 
 
கண் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருந்து அவரை வகுப்பின் இறுதியில் அமரச் செய்திருந்தாலோ, காது கேட்பதில் குறைபாடு இருந்தாலோ பாடங்களை உள்வாங்குவதில் பிள்ளைகள் சிரமப்படுவர். 
 
அதனால், அதுபோல ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து சரி செய்யுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)