பெண்களின் கர்ப்ப கால காசநோய் பிரச்சனை !

Fakrudeen Ali Ahamed
0
தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும் போது காசநோய் ஏற்பட்டால் அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது. மேலும், காசநோய் இருக்கும் பெண் கர்ப்பம் தரிப்பது சகஜமாக நிகழக் கூடியதே. இனப்பெருக்க உறுப்புகளில் காசநோயிருந்தால் தான் கர்ப்பம் தரிப்பது என்பது இயலாத காரியமாகும். மருத்துவம் முன்னேறாத காலத்தில் காசநோய் ஒரு பெண்ணுக்கு வந்து விட்டால் அதைக் குறிக்க ஒரு சொல்வழக்கு இருந்திருக்கிறது. 
காசநோய் பிரச்சனை
அது என்ன வென்றால், ‘கன்னி கழியாத கன்னிக்குக் காசமெனில் கல்யாண மில்லை. கல்யாணமான வளுக்கு கர்ப்பமில்லை, கர்ப்பமான வளுக்கு அடுத்த கர்ப்பமில்லை, தாயனவளுக்குத் தாய்ப்பாலூட்ட வழியில்லை’ என்பதாம். இப்போது கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சை யினைச் செய்து விட்டால் அந்த தாய்க்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது உறுதி.

கர்ப்பப்பையின் காசநோயர்ல் காசநோய்க் கிருமிகள் ‘பனிக்குட நீர்’ எனும் ஆம்னியாடிக் திரவத்தில் கலந்து விடும். அவற்றை கருப்பையில் இருக்கும் குழந்தை விழுங்கி விடும். அக்கிருமிகள் பச்சளம் குழந்தைக்கு காசநோயினை ஏற்படுத்தி விடும்.

பிறவிக் காசநோயின் அல்லது பச்சிளம் குழந்தை காசநோயின் அறிகுறிகள் என்ன?

பிறவிக் காச நோயால் மஞ்சள் காமாலை, இரத்த சோகை, குழந்தையின் வளர்ச்சி குறைவு, நீலம் பூத்து இருத்தல், பெருத்த மண்ணீரல், நுரையீரலில் காசத் தொற்று நோய் போன்றவை இருக்கும்.

பிறவிக் காச நோயின் நிர்ணயம்

இக்காச நோயினினி நிர்ணயிக்க இரைப்பை கழுவலில் காச நோய்க் கிருமியைத் தேடல், நுரையீரல் அல்லது கல்லீரல் பயாப்சி போன்ற சோதனைகள் தேவைப்படும். பச்சிளம் குழந்தையின் வாய் வழியாகவோ அல்லது மூக்கு வாயாகவோ மெல்லிய ரப்பர் அல்லது பிளாஸ்டிக் குழாயினைச் செலுத்தி பின்னர் வயிற்றி லிருந்து வரக்கூடிய நீரினை எடுத்து, அதில் காச நோய்க் கிருமிகள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துப் பார்ப்பதையே ‘இரைப்பை கழுவலில் காசநோய்க் கிருமியைத் தேடல்’ என்போம். 
பிறவிக் காச நோயின் நிர்ணயம்
இவ்வளவு சித்திரவதை யான சோதனை தான் பச்சிளம் குழந்தைக்கான காசநோயினை நிர்ணயிக்க உதவுமா? மற்ற பரிசோதனை களான தோல் ஊசி பரிசோதனை போன்றவற்றால் நிர்ணயிக்க முடியாதா?

தோல் ஊசி பரிசோதனை பச்சிளம் குழந்தைகளு க்கும், வயது முதிர்ந்தோரு க்கும் பயன்படாது. பச்சிளம் குழந்தைக்குள்ள காச நோயினை உரியவாறு நிர்ணயம் செய்து சரியான மருத்துவம் செய்து விட்டால் குழந்தையின் வாழ்வும் மலரும், குழந்தையும் பிழைத்துக் கொள்ளும். தாய்க்கும் காசநோய்க் கான கிசிச்சையினை முறையாக அளிப்பது மிக அவசியம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)