மாதவிலக்கு வலி தீர கடுக்காய் போதும் !

Fakrudeen Ali Ahamed
0
வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம் என்றாலும் மாத விலக்கு நேரங்களில் அவர்கள் படும் அவஸ்தை சொல்ல முடியாதது. பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை இந்த நாட்களில் அவர்கள் படும் துன்பத்தை நீக்க சித்தர்கள் சொன்ன ஒரே ஒரு பொருளை பயன்படுத்தி வருவதன் மூலம் மாதவிடாய் வலிகளி லிருந்து அவர்கள் நிவாரணம் பெற முடியும். 
கடுக்காய்
மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் உதிரப்போக்கு காரணமாக சோர்வும், அயர்ச்சியும் ஏற்படுவது இயற்கையே என்றாலும் அந்த நேரங்களில் ஓய்வெடுக்க முடியாமல் வெளியில் இருக்கும் பெண்கள் இந்த முறையை பின்பற்றி வரலாம். இந்த நேரங்களில் பெரும்பாலும் காலை உணவுகளை இவர்கள் தவிர்க்கவே கூடாது. கஞ்சியோ பழமோ ஏதோ ஒன்றை இவர்கள் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

வயிற்றில் ஜீரணம் செய்ய தேவையான உணவு இல்லாத போது ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு வலிகள் ஏற்படுகின்றன. ஆகவே மாத விலக்கு நேரங்களில் காலை உணவு அவசியம். உடல் வலுவாகவும் முகம், பொலிவாகவும் இருக்க சித்தர்கள் பல காயகல்ப முறைகளை மக்களுக்கு அளித்து வந்துள்ளனர். அதனை பயன்படுத்துவதன் மூலம் முதுமை வராமல் வெகு நாட்கள் ஆரோக்கியமாக நாம் வாழ முடியும். 

இந்த காயகல்ப மூலிகைகளில் முதலாவது இடத்தில் இருப்பது கடுக்காய் ஆகும். கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் என்பது பழமொழி யாகவே பல நூறு வருடங்களாக இருந்து வருகிறது. பல விதமான நலம் பயக்கும் ஆற்றல்களை தன்னகத்தே வழங்குவதால் கடுக்காயை தாயின் இடத்தில வைத்து பார்க்கின்றனர். அமிர்தத்துக்கு ஒப்பான கடுக்காய் மனித உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 
மாதவிலக்கு வலி தீர
தன் உடல் நலத்திற்காக மருந்து சாப்பிட முயற்சிக்கும் போது, முதலில் உடல் நச்சுக்கள் நீங்கி உடல் சுத்தமாக ஆக வேண்டும். அதற்கு தினமும் இரவு உணவிற்கு பின் கடுக்காய்ப் பொடி உண்டு வந்தால் அசுத்தங்கள் நீங்கி உடல் ஆரோக்கியமாகும். சித்தர்கள் கூற்றுப்படி கடுக்காயை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி அவற்றில் உள்ள விதையை நீக்கி விடுவது அவசியம். காரணம் கடுக்காயின் தோல் தான் மருந்தாகும் தவிர அதன் விதை எதிர் மறையான பலன் தரும். 

மாதவிலக்கு வலி தீர கடுக்காயை உபயோகித்து நாம் செய்ய வேண்டிய ஒரே விஷயம் இது தான். விதை நீக்கப்பட்ட கடுக்காய்களை உள்ளங்கையில் பாதி அளவிற்கு எடுத்து கொண்டு அதனோடு இரண்டு டம்ளர் நீரை ஊற்றி கொதிக்க விடவும். அதனோடு கொஞ்சம் லவங்கப் பட்டையை சேர்த்து கொதிக்க விடவும். இரண்டு டம்ளர் நீரை ஒரு டம்ளராக வற்றும் வரையில் கொதிக்க விட்டு ஆறியதும் வடிகட்டி குடிக்கவும். இப்படி செய்து வந்தால் மாதவிடாய் வலிகள் காணாமல் போய் விடும். வலிகள் மட்டு மல்லாமல் ஒழுங்கற்ற மாத விடாயும் சரியாகும். 

இதனை செய்து வருவதன் மூலம் மாதாமாதம் வரும் மாதவிலக்கு காலங்களில் நிம்மதியாக இருக்கலாம். அதிக காரமான மசாலா மற்றும் எண்ணெய் உணவுகளால் உடலில் நச்சு தன்மை ஏற்பட்டு உடல் பாதிக்கப் படுகிறது. இதனை தவிர்க்க கடுக்காய் தேநீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நச்சு தன்மை சேராமல் இருக்கும். இந்த தேநீரை வாரம் மூன்று முறை பருகி வர முன்னோர் வாக்குப்படி நாமும் மிடுக்காய் வாழலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)