தன் மகன் தப்பானவன் என்று அம்மாவுக்குத் தான் முதலில் தெரியும் - சைக்காட்ரிஸ்ட் !

Fakrudeen Ali Ahamed
0
நல்ல ஆண்கள் உருவாக வேண்டு மென்றால், அம்மாக்கள் அன்பாகவும் கண்டிப்பாகவும் இருக்க வேண்டும். அப்பாக்கள் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். ஒழுக்கத்தைப் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் சொல்லித் தந்தால் போதாது; ஆண் பிள்ளைகளு க்கும் அதை கற்பித்தால் தான் வீடும் நாடும் நிம்மதியாக இருக்கும் என்கிற உண்மையை, பொள்ளாச்சி சம்பவம் பொட்டில் அறைந்ததுபோல உணர்த்தி யிருக்கிறது. 
ஆண் பிள்ளைகளை எப்படி வளர்த்தால், இனி வரும் காலங்களி லாவது பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் இருப்பார்கள்? சைக்காட்ரிஸ்ட் கண்ணன் அவர்களிடம் கேட்டோம். ``பாலுணர்ச்சி என்பது சமுதாயம் பெருகுவதற் கான ஒரு பயாலஜிகல் உந்துதல். ஆண்களுக்கு உடல் ரீதியான கவர்ச்சியும் பெண்களைப் பற்றிய கற்பனை களுமே பாலுணர்ச்சியைத் தூண்டி விட போது மானவை. ஆனால், சக மனுஷியான பெண்களிடம் இப்படி நடந்து கொள்வது சரி, 

இப்படி நடந்து கொள்வது தவறு என்று புரிந்து கொள்வதற்கு நமக்கென்று ஓர் அறிவு இருக்கிற தல்லவா?’’ என்று காட்டமாகக் கேள்வி யெழுப்பியபடி பேச ஆரம்பித்தார். சைக்காட்ரிஸ்ட் கண்ணன்``10 - 14 வயதுக்குள் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்க ளால் ஒரு சிறுவன் ஆணாக மாற ஆரம்பிப்பான். பாலுணர்ச்சி என்பது அவனுடைய 12 - 16 வயதுக்குள் ஆரம்பமாகும். 

சிறு வயதிலேயே பாலுணர்ச்சியைத் தூண்டுகிற மாதிரியான சம்பவங்களை, அசாதாரணமான பாலுணர்ச்சி செய்கைகளைப் பார்த்து வளர்ந்த சிறுவர்களு க்கு, பாலுணர்ச்சி வர வேண்டிய வயதுக்கு முன்னாடியே வந்து விடலாம். இப்படிப்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போனில் அதிகம் நேரம் செலவழிப்பது; தனிமையில் இருப்பது; படிப்பில் ஆர்வம் காட்ட மறுப்பது; தன்னை விட வயதில் மூத்த சிறுவர்களுடன் நேரம் செலவழிப்பது என்று இருப்பார்கள். 

வீடியோ கேம்ஸில் நிறைய வன்முறைக் காட்சிகளைத் தொடர்ந்து பார்த்து வருகிற சிறுவர்கள் `வன் முறைங்கிறது நார்மல் தான் போல’ என்று தான் வளர்வார்கள். இயற்கைக்கு அப்பாற்பட்ட பாலுணர்ச்சி செய்கைகள் உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு அறிமுகமா காதபடிக்கு பார்த்துக் கொள்ளுங்கள். 
பெண்களைத் துன்புறுத்தி பாலியல் உறவு கொள்வது, குழந்தை களுடன் உறவு கொள்வது மாதிரியான வக்கிரங்களைப் பார்த்து வளருகிற சிறுவர்களுக்குப் பின்னாளில் இப்படிப்பட்ட வக்கிரங்களைச் செய்தால் தான் பாலுணர்ச்சியே வரும்’’ என்றவர், இப்படிப்பட்ட சிறுவர்களின் இயல்புகள் சிலவற்றையும் சொன்னார். ``பிற உயிர்களின் உணர்ச்சி களுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் இவர்கள். 

கோழியைத் துன்புறுத்துவது, நாயைத் துன்புறுத்துவது, மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காண்பது, அடுத்தவ ர்களின் பொருளைத் திருடுவது என்று இருப்பார்கள். ஒரு வரியில் சொல்வ தென்றால், தான், தன்னுடைய இன்பம் என்று மட்டுமே இருப்பார்கள். இந்த வகை சிறுவர்கள் பின்னாளில் பொல்லாத வர்களாக வளர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. சில சிறுவர்களுக்குப் பெண்களிடம் இயல்பாகப் பழகுவதற் கான வாய்ப்பு கிடைத்திருக்காது. 

பின்னாளில், அவர்களிடம் கூட பெண்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாத தடுமாற்றம் இருக்கலாம். சில சிறுவர்கள் எடுப்பார் கைப்பிள்ளை களாக இருப்பார்கள். அதாவது, சில மோசமான வயதில் மூத்த சிறுவர்களுடன் சேரும் போது, அவர்கள் செய்கிற எல்லா வக்கிரமான செய்கை களையும் செய்வார்கள். கெட்ட வார்த்தைகள் பேசுவார்கள். 

சில சிறுவர்கள், 'நாம என்ன தப்பு பண்ணாலும் அம்மா சப்போர்ட் பண்ணுவாங்க’, `அப்பா காப்பாத்திடுவாரு’ என்கிற தைரியத்தில் தவறான பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்வார்கள். அதனால், பெற்றோர்களு க்குத் தங்களுடைய பிள்ளைகளின் நண்பர்கள் யார் யார், அதில் யாருடன் நம் பிள்ளை அதிக நேரம் செலவழிக்கிறான், அவர்களுடைய குடும்பம், அதன் பின்னணி என்று தெரிந்திருக்க வேண்டும். 

அதே போல, உங்கள் பையன் யாருடன் சாட்டிங் செய்கிறான் என்பதையும் ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருப்பது தான் உங்கள் வீட்டுக்கே நல்லது’’ என்றவர், பெண்களை, சக மனுஷியாக மதிக்கும்படி ஒரு சிறுவனை, அவனுடைய பெற்றோர் எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி சொல்ல ஆரம்பித்தார். ``ஆணோ, பெண்ணோ, குழந்தைகளின் சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் அன்பும் அரவணைப்பும் தந்திருந்தால் தான், அவர்கள் வழி தவறிப் போகும் போது அதட்டி வழிக்குக் கொண்டு வர முடியும். 

இப்படி அன்பும் அரவணைப்பும் கிடைக்கப் பெற்ற சிறுவர்கள், மன அழுத்தம், எரிச்சல் இல்லாமல் வளர்கிறார்கள். இவர்களை வக்கிர உணர்வுகள் ஈர்ப்பதில்லை என்கிறது ஓர் ஆராய்ச்சி. வீட்டில் சண்டை, பிரச்னை என்று பார்த்து வளருகிற சிறுவர்கள் தங்களுக்கான வடிகாலை வெளியில் தேடுகிறார்கள். விளைவு, தானும் கெட்டு, அடுத்த வீட்டுப் பெண் குழந்தைகளின் வாழ்க்கையும் கேள்விக் குறியாக்கி விடுகிறார்கள். 
 ஒரு சிறுவன் தப்பாக வளர்கிறான், வழி தவறுகிறான் என்பது உலகத்திலேயே அவனுடைய அம்மாவுக்குத் தான் முதலில் தெரியும். ஆனால், அது அப்பாவுக்குத் தெரிந்தால் பிள்ளையை அடி நொறுக்கி விடுவார் என்று பயந்து கொண்டு, அதை மறைத்து விடுகிறார்கள். பாதிக்கப்பட்ட அடுத்த வீட்டுப் பெண் குழந்தையை விட, பாதிப்பு ஏற்படுத்திய தன் வீட்டுப் பையன் மேல்தான் அம்மாக்களு க்கு அக்கறை அதிகமாக இருக்கிறது. 

ஒரு சிறுவன், ஆணாக வளர்ந்த பிறகு, பெண்களை மதித்து நடப்பது அவனுடைய அப்பாவின் கையில் தான் இருக்கிறது. அவர்கள், தங்களுடைய ஆண் பிள்ளைகளின் முன்னால், வீட்டில் இருக்கிற அம்மா, மனைவி, உடன் பிறந்தவர்கள், மகள் ஆகிய பெண் உறவுகளை மரியாதை யாக நடத்தினால், இந்தச் சிறுவனும் வளர்ந்த பிறகு, தன் அப்பாவைப் போலவே நடந்து கொள்வான். 

பெற்றோர் சொல்வதைக் கேட்காத குழந்தைகள், அவர்கள் செய்வதை அப்படியே செய்வார்கள். நல்ல ஆண்கள் உருவாக வேண்டு மென்றால், அம்மாக்கள் அன்பாகவும் கண்டிப்பாகவும் இருக்க வேண்டும். அப்பாக்கள் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்’’ என்று அழுத்தமாகச் சொல்லி முடித்தார் சைக்காட்ரிஸ்ட் கண்ணன்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)