வெறும் வயிற்றில் இதை எல்லாம் ஏன் செய்ய கூடாது? மீறி செய்தால் மரணம் !

Fakrudeen Ali Ahamed
காலையில் எழுந்தவுடன் நாம் எதையும் சாப்பிடாமல் இருக்கும் பட்சத்தில் பல வித செயல்கள் நம்மை அறியாமலே செய்வோம். இவை எந்த வித பாதிப்பை நமக்கு தரும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். 
வெறும் வயிற்றில் ஒரு சில விஷயங்களை செய்தாலும், அல்லது சாப்பிட்டாலும் உறுப்புகளின் செயல்திறன் மாறுதல் அடையும்.

டீயா..? காப்பியா..?

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. 

ஆனால், வெறும் வயிற்றில் இவற்றை குடித்தால், அமில தன்மை வயிற்றில் அதிகரித்து செரிமான பிரச்சினை, மலச்சிக்கல், வாந்தி ஆகிய பின் விளைவுகளை ஏற்படும். 

எனவே, இதற்கு பதிலாக டீ அல்லது காபியுடன் ஏதேனும் சேர்த்து சாப்பிடுவது சற்று நல்லது.

உடற்பயிற்சி செய்யலாமா..?

உடற்பயிற்சியை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் செய்வதால் உடல் எடை சட்டென குறைந்து விடும் என பலர் எண்ணுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும். 
இந்த பயிற்சி கொழுப்புகளை குறைக்காமல் தசைகளையே குறைக்கும். ஆதலால், வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாமல் ஏதேனும் சிறிய அளவில் சாப்பிட்டு விட்டு பயிற்சியை தொடங்குங்கள்.

ஜிவிங் கம் வேண்டாமே..!

பலருக்கு ஜீவிங்கம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இதனை மற்ற நேரத்தில் சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்பை விட, வெறும் வயிற்றில் காலை நேரத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் தான் அதிகம். 

வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் வாயு கோளாறு, அமில தன்மை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றான வர தொடங்கும்.

குடல் பிரச்சினையா..?

வெறும் வயிற்றில் இந்த செயலை நிச்சயம் செய்ய கூடாது. அதாவது, சோடாக்கள் நிறைந்த பானங்களையோ, உணவுகளையோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 
இல்லையெனில், குடல் பகுதியில் அதிக எரிச்சல், வாந்தி ஏற்படுத்தும் தன்மை ஏற்படும். பல நாட்கள் இது தொடர்ந்தால் குடல் புண், உடல் எடை கூடுதல், பசியின்மை போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படும்.

காரசார உணவுகளா..?

காலையில் எழுந்ததும் உணவின் மீது உள்ள காதலால் காரசாரமான உணவுகளை சாப்பிடாதீர்கள். காலை உணவில் காரசாரமான உணவுகளை சாப்பிட்டால் வயிற்றில் அமில தன்மை அதிகரிக்க கூடும். 

பிறகு குடல் புண்கள் ஏற்பட்டு அதிக வலியை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஜாக்கிரதை..!

நீங்கள் வெறும் வயிற்றில் பாராசிட்டமால், ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை எடுத்து கொள்ள கூடாது. இவ்வாறு செய்வதால் இவற்றின் வீரியம் அதிகரிக்க கூடும். 
இவை மலத்தில் ரத்த போக்கை ஏற்படுத்தி பல வித பாதிப்புகளை தருமாம். ஆதலால், மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளாதீர்கள்.

கடைக்கு செல்லாதீர்கள்..!

இது என்ன புதுசா இருக்கேனு நினைக்கிறீங்களா..?! உண்மைதாங்க… நாம் வெறும் வயிற்றில் கடைக்கு சென்றால் பார்க்கின்ற அனைத்தையும் வாங்கி அடுக்கி கொள்வோம். 

குறிப்பாக இனிப்பு வகை உணவுகள், அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவுகள் போன்றவற்றை வாங்க தூண்டும். எனவே வெறும் வயிற்றில் கடைக்கு செல்லாதீர்கள்.

பசி இருந்தா, நீ நீயா இருக்க மாட்ட..!

இந்த விளம்பர வாசகம் நம் அனைவருக்கும் நன்கு மனப்பாடம் ஆன ஒன்று. இது உண்மையும் கூட. நமக்கு அதிக பசி இருக்கும் நேரத்தில் நம்மை அறியாமலே பலவற்றை செய்வோம். 
இதற்கு காரணம் பசி தான். பசி உள்ள நேரத்தில் குறிப்பாக யாருடனும் வாக்கு வாதம் வைத்து கொள்ளாதீர்கள். இது பெரிய பிரச்சினையாக மாற கூடும்.

காலையிலே இந்த பழக்கமா..?

நவீன நாகரீகம் என்கிற பெயரில் இந்த செயலை பலர் செய்து வருகின்றனர். அதாவது, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மது அருந்தும் பழக்கம் இப்போ தெல்லாம் பரவலாக எல்லோரிடமும் தொற்றி வருகின்ற ஒரு கலாச்சாரமாக உள்ளது. 

ஆனால், வெறும் வயிற்றில் மது அருந்தினால் கல்லீரல், இதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் சிதை வடையும்.

மறவாதீர்கள்..!

மேலும்
Tags: