ஆண்களை விட பெண்களுக்கு தூக்கம் அவசியம் !

Fakrudeen Ali Ahamed
பெண்களு க்கு ஆண்களை விட அதிகத் தூக்கம் தேவை. ஆனால், உண்மை யில் அவசிய மான அளவு தூக்கம் கூட அவர் களுக்குச் சாத்தியப் படுவதில்லை என்றும், 
தொடர் தூக்க மின்மை யால் பாதிக்கப் படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் 

போன்ற பிரச்ச னைகள் தாக்கும் வாய்ப் புகள் அதிகம் என்று எச்சரிக் கிறார்கள் மருத் துவர்கள்.

வேலை க்குச் செல்லும் பெண் களுக்கும் தூக்கம் என்பது கனவுதான். இன்றைய பரபர ப்பான வாழ்க்கைச் சூழலில், 

பெண் களுக்கு ஏற்படும் தூக்க மின்மை குறித்தும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் 

மற்றும் அவற்றைத் தவிர்ப்ப தற்கான வழி முறைகள் பற்றியும் பார்க்க லாம்.

இப்போது மட்டு மல்ல… பல நூறு ஆண்டு களுக்கு முன் பிருந்தே பெண்கள் தூங்கும் நேரம் என்பது மிகவும் குறை வாகவே உள்ளது.

கணவன் வரும் வரை சாப்பி டாமலும், தூங் காமலும் இருப்பது போன்ற வழக்கங் களால், 

பெண்கள் தாங்க ளாகவே தூங்கும் நேரத்தைக் குறைத்து விட்டா ர்கள். 

70 சதவிகித பெண்கள் தங்களு க்குத் தூக்க மின்மை பிரச்சனை இருப்பதையே அறியாமல் இருப்பது தான் வேதனை.
இன்றைய கால கட்டத்திலோ, பெண்கள் நினைத்தால் கூட தூங்கு வதற்குப் போதிய நேரம் கிடைப்ப தில்லை. 

கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் சூழலில், காலை முதல் இரவு வரை பெண்களு க்கு வேலை ஓய்வ தில்லை. 

என்னதான் கணவர் வீட்டு வேலை களைப் பகிர்ந்து கொண்டாலும், பெண் களுக்குத் தான் கூடுதல் வேலைகள் இருக்கும் என்பது மறுக்க முடியாத நிஜம். 

வேலைகளை முடித்து விட்டுத் தாமதமாகச் சாப்பிடு வதும், உடனே படுத்து விடுவதும் கூட உடலுக்கு நாம் இழைக்கும் தீங்கு தான்.

இரவு நேரப் பணி என்பதும் நம் உடலுக்கு ஒவ்வாத விஷயமே. பகலில் உழைப் பதும், இரவில் உறங்கு வதுமே இயற்கை யின் நியதி. 

இந்தச் சக்கரத்தை மாற்றி, பகலில் உறங்கி, இரவில் வேலை செய்வதை நம் மனமும் உடலும் ஏற்றுக் கொள்ளாது. 

மேலும், நம்மைத் தூங்க வைக்கும் ’மெலட்டோனின்’ என்கிற ஹார்மோன் இரவில் அதிகம் சுரக்கும். 

பகலில் நாம் சுறு சுறுப்பாக வேலை செய்வதற் கான காரணம், இது குறைவாக சுரப்பது தான்!

இந்தச் செயல் பாட்டைத் தலை கீழாக மாற்றும் போது, உடல் நலமும் பாதிப்படை யும். 

குறிப்பாக பெண்களு க்குத் தூக்கம் குறையும் போது, அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப் படுவார்கள். 

சரியான தூக்கம் கிடைக் காத பெண்கள் காரண மில்லாமல் எரிச்சல் அடை வார்கள். 
அதன் தொடர்ச்சி யாக கோபம், மனச்சோர்வு, நாள் முழுவதும் மந்தமாக உணர்வது, 

சிறிய பிரச்சனையைக் கூட பெரியதாக நினைத்து கவலைப் படுவது என மன ரீதியான சிக்கலுக்கு ஆளா வார்கள்.
தூக்க மின்மை காரண மாக ஆரம்ப கால கட்டத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி போன்ற பிரச்சனை களால் அவதிப் படுவார்கள்.

இவை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் மாத விடாய் குழப்பங்கள் உண்டாகும்.

குழந்தை யின்மை போன்ற பெரிய பிரச்சனை களுக்கு ஆரம்பமாக அமைந்து விடும்.

கண்டு கொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டு களிலேயே ரத்த அழுத்தம், இதய நோய், பக்க வாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும்.

ஆண்க ளுக்கு தூக்கம் வர வில்லை என்றால் உடனே மருத்து வரை அணுகு கிறார்கள்.
பெண்களோ, ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ என்று சர்வ சாதாரண மாகக் கடந்து விடுகி றார்கள்.

‘நான் ஆறு மாசமா தலை வலியால அவதிப் படுறேன். அதுக்கு டேப்லெட் எடுத்து கிறேன் டாக்டர்’

என்பவர் களை ஆராய்ந்தால், தூக்கம் தான் பெரும் பிரச்சனை யாக இருக்கும்.

தூக்க மின்மை என்பது, நம் உடல் நலனில் பெரிய பாதிப்பு களை ஏற்படுத்தும் என்பதால் உடனடி யாக மருத்துவரை அணுகுவதே சிறந்த வழி.
Tags: