சியாட்டிகாவுக்கும் முதுகு வலிக்கும் என்ன சம்பந்தம்?

Fakrudeen Ali Ahamed
நமது உடலை இயக்குவதற்கு உள் உறுப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். 
இதில் நமது நிமிர்ந்த நடைக்கு ஊன்று கோல்போல் உள்ளது முதுகு தண்டு எலும்புகள் தான்.

முதுகு வலிக்கும் சியாட்டிகாவு க்கும் தொடர்பு என்ன? 

இதன் செயல் பாடுகள் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். எலும்பு சிகிச்சை நிபுணர் பிரபல மருத்துவர் டாக்டர் ராதகிருஷ்ணன் பால்ராஜ்.

முதுகு வலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன, இதற்கு அடிப்படை யான காரணங்கள் இரண்டு மட்டுமே உண்டு என கூறலாம். 

ஒன்று, இடைவட்டு விலகுவது (Disc prolapse). இரண்டாவது, முதுகு முள்ளெலும் புகளின் பின் புறமுள்ள அசையும் மூட்டுகளில் வீக்கம் உண்டாவது.

இதன் காரணமாக தண்டுவட நரம்பு செல்லும் வழி குறுகி விடுகிறது. இதனால் தண்டுவட நரம்புகளில் அழுத்தம் ஏற்படுகிறது.

இதன் விளைவாக அதைச் சுற்றியுள்ள ரத்தக் குழாய்கள் நெரிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்து நரம்புகள் சீராக செயல்படமுடியாமல், வலி உண்டாகிறது.

பொதுவாக, காலுக்கு வரும் சியாட்டிக் நரம்புகள் இவ்வாறு பாதிப்படையும். 

இதனால் தான் இதற்கு ‘சியாட்டிகா’(Sciatica) என்று மருத்துவத் துறையில் அழைக்கப்படுகிறது.

ஆரம்ப கட்டத்தில் இந்த வலியானது, சில நேரம் அவ்வப்போது கீழ் முதுகில் வந்து போகும். 
பலபேர் இந்த வலி ஆரம்பத்தில் வாய்வு என்றே கருதுகின்றனர்.

சுய சிகிச்சை எடுத்துக் கொண்டு அதன் தீவிரம் அதிகமாகும் போது தான் மருத்து வரை நாடுகின்றனர். 

திடீரென்று ஒரு நாள் இந்த வலி கடுமை யாகும்.

தொடைக்குப் பின் புறத்திலோ, காலுக்கோ மின்சாரம் பாய்வதைப் போல ‘சுரீர்’ என்று அதிகமாகும். 

உறங்கும் போது இந்த வலி குறைந்து, பிறகு நடக்கும் போது வலி அதிகரிக்கும்.

கால் குடைச்சல் தூங்க விடாமல் செய்யும். காலில் உணர்ச்சி அற்றுப் போகும். நாட்கள் செல்ல செல்ல மரத்துப் போன உணர்வும் உண்டாகும்.

முதுகைப் பின்புற மாகவோ, அல்லது முன் புறமாகவோ வளைப்பதில் சிரமம் ஏற்படும். 

பலமாகத் கத்தினாலோ, தும்மினாலோ, சிறுநீர் மலம் கழிக்க முக்கினாலோ வலி அதிகமாகும்.

பரிசோதனை முறைகள்; சிகிச்சைகள் முறைகளும்;

காரணங்கள் எதுவாக இருப்பினும், முதுகு எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், 

ரத்தப் பரிசோதனைகள் செய்து, முழுமையான காரணம் அரிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

முதுகு ஜவ்வு விலகுவதன் காரண மாகவும் ஆரம்பத்தில் கீழ் முதுகு வலி ஏற்படு கின்றன. 

இவ்வாறான பிரசனை களுக்கு தீர்வாக வலி நிவாரணி களும் தசைகளைத் தளர்த்தும் மாத்திரை ஊசிகளும் தீர்வு அளிகின்றன.

அத்தோடு விடாமல் குறைந்தது மூன்று வாரம் முழுமை யாக ஓய்வு எடுக்க வேண்டும். 
இடுப்பில் பெல்ட் அணிவது, பிசியோ தெரபி சிகிச்சையில் குணமாக வாய்ப்புகள் அதிகம்.

இதனால் தீர்வு இல்லாமல், தொடர்ந்து வலி பல வாரங் களுக்கு இருக்கு மானால், நடக்கவோ – நிற்கவோ முடியாத நிலை ஏற்பட்டால். 

கால் மரத்துப் போனால் அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக அமையும்.

இப்போது ‘லம்பார் எண்டோஸ்கோபிக் டிஸ்கெக்டமி’ (Lumbar Endoscopic Discectomy) எனும் 

நவீன அறுவை சிகிச்சையில் விலகி யிருக்கும் இடைவட்டை அகற்றித் தண்டுவட நரம்புப் பகுதியில் இருக்கிற 

அழுத்தத்தை நீக்கி விடும் போது, கீழ் முதுகு வலியும் கால் குடைச்சலும் குணமாகும்.

முதுகு வலியைத் தடுக்க என்ன வழி;

நீங்கள் வேலை செய்யும் போது முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும்.

நாற்காலியில் அதிக நேரம் உட்காரும் போது, கீழ் முதுகுக்குச் சிறிய தலையணை வைத்துக் கொள்ளுவ தால் அழுத்தம் குறைக்கப்படும். 

நடக்கும் போது எப்போதும் கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும்.

வேலைச் செய்யும் போது ஒரே நிலையில் உட்கார்ந்து வேலை செய்ய கூடாது அவ்வப்போது உடலை திருப்புக் கொள்ள வேண்டும். 

எந்த வேலையாக இருந்தாலும் மணிக்கணக்கில் அமர்ந்து இருக்க கூடாது.

ஓய்வு அவசியம். டிவி பார்க்கும் போது கூட கால் நிலையை மாற்றிக் கொண்டே இருங்கள்.

சிறு வயதி லிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் 

போன்ற வற்றில் ஏதாவது ஒன்றைச் செய்வது, முதுகு வலி வராமல் குறைக்கப்படும்.

கடைகளில் விற்கப்படும் குளிர் பானங்கள், பாக்கட்டில் அடைக்கப் பட்டு விற்கப்படும் உணவு களை முழுவது மாக தவிர்க்க வேண்டும். 

சிறு வயதில் இவ்வாறு உண்ணப்படும் தூரித உணவுகளால் எலும்பை வலு விழக்கச் செய்யும்.
எலும்பையும் தசையையும் வலுப் படுத்தும் கால்சியம் மற்றும் புரதம் மிகுந்த பால், முட்டை வெள்ளைக் கரு, சோயா, 

உளுந்து. கொண்டைக் கடலைப் போன்ற உணவு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தினமும் சூரிய ஒளி படும்மாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

இதன் தன்மையால் இயற்கை யாகவே வைட்டமின் டி உடலுக்கும் எலும்பு க்கும் வலுவைச் சேர்க்கும்.

மன அழுத்தத்தைத் தவிருங்கள். டாக்டர் ராதகிருஷ்ணன் பால்ராஜ்
Tags: