தலை முடி உதிர்வதைத் தடுக்க !

Fakrudeen Ali Ahamed
முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும். கசகசாவை பாலில் ஊர வைத்து

அரைத்து அத்துடன் பாசி பருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.

* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தி யாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சி யாகும்.

* சிறிய வெங்காயத் தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்தால் முடி உதிராது.

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமை யாகவும் மாறும்.

* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத் தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும்.

இது போல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும்

அது மட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கரு கருவென முடி வளரத் தொடங்கும்.
Tags: