குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்ட பெண்களுக்கு !

Fakrudeen Ali Ahamed
குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட பெ‌ண்க ளு‌க்கு உட‌ல் எடை அ‌திக‌ரி‌க்க அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

 

த‌ற்போது உ‌ட‌ல் எடை உய‌ர்வு ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய ‌பிர‌ச்‌சினை யாக உருவெடு‌ த்து‌ள்ள ‌ நிலை‌யி‌ல், ‌

வீ‌ட்டு வேலைகளை செ‌ய்ய இ‌‌ய‌ந்‌திர‌ ங்க‌ள் வ‌ந்தது‌ம், உணவு‌‌ப் பழ‌க்கமு‌ம் காரண‌ங் களாக இரு‌ந்தாலு‌ம்,
குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சையு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம் எ‌ன்‌கிறது மரு‌‌த்துவ‌ம். 

குடும்பக் கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ க்கு‌ப் ‌பிறகு பெ‌‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் ப‌ல்வேறு மா‌ற்ற‌ங்க‌ள் ஏ‌ற்படு‌ கி‌ன்றன.

சினைப் பையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படு கிறது.

அடைப்பு காரண மாக இந்த ஹார்மோன் சரியாக சுரக்காது. இது தான் உடலில் அதிக கொழுப்பு சேராமல் தடுக்கின்ற ஹார்மோன்.

மருத்து வர்கள் இதை `புரொடக்டிவ் ஹார்மோன்’ என்று அழைக் கிறார்கள்.

குடும்பக் கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு தடைபட்டு,

அதிகப்படி யான கலோரிகள் தேங்கி, கொழுப்புச் சத்து சேர்ந்து உடல் குண்டாகி விடுகிறது.

குடும்பக் கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ செய்து கொண்ட பெண்கள் உணவு விஷய த்தில் மிகவும் கண்டிப்பு டன் இருக்க வேண்டும்.

கலோரிகள் அதிகமுள்ள உணவு களை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

நார்ச் சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை

அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற் பயிற்சி செய்ய வேண்டும்.


குறைந்தது ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் தூரமாவது நடக்கலாம்.

முடிந்தால் நீச்சல் பயிற்சி க்குச் செல்லலாம். தொடர்ந்து யோகா, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

சிலர் கர்ப்பத்தைத் தவிர்ப்பத ற்காகக் கருத்தடை மாத்திரை களை தொடர்ந்து சாப்பிடுவர்.

இந்த மாத்திரை களால் கர்ப்பத்திற் கான ஹார்மோன் சுரப்பில் தடை ஏற்பட்டு, கரு உருவாவது தடுக்கப் படும்.

இந்த மாத்திரை களை அனைவரும் எடுத்துக் கொள்ள முடியாது.

குறிப்பாக கால் வீக்கம், பித்தப் பையில் கல், ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவ ர்கள் கருத்தடை மாத்திரை களைப் பயன் படுத்தக் கூடாது.

அப்படிப் பயன்ப டுத்தினால் பின் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக் கின்றனர் மருத்துவர்கள்.

சில பெண்கள் பரிசோதனை செய்து கொள்ளாம லேயே காப்பர்-டி பொருத்திக் கொள்கி றார்கள். பின்னர் ரத்தப் போக்கு அதிகமாகி அவதிப் படுகின்றனர்.

எனவே, முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு, எந்தப் பிரச்சி னையும் இல்லை என்றால் மட்டுமே காப்பர்-டி பொருத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக ரத்தம் எளிதில் உறைதல், வெள்ளைப் படுதல், அதிக ரத்தப் போக்கு போன்ற பிரச்சி னைகள் உள்ள பெண்கள் கண்டிப்பாக காப்பர்-டி பொருத்திக் கொள்ளக் கூடாது.

அதே போல் அதிக பட்சமாக 5 வருடங்கள் மட்டுமே காப்பர்- டியைப் பயன் படுத்தலாம்.

அதற்குமேல் பயன் படுத்தினால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப் புண்டு. நா‌ம் சா‌ப்‌‌பிடு‌ம் கொழு‌ப்பை‌ உட‌லி‌ல் சேராம‌ல் தடு‌க்கு‌ம் ஈ‌ஸ்‌ட்ரோஜ‌‌ன்  ஹா‌ர்‌மோ‌ன்,

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌ சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌ பிறகு ச‌ரியாக சுர‌க்காம‌ல் போவதை‌க் கவன‌த்‌தி‌ல் கொ‌ண்டு,

அத‌ற்கு மு‌ன்பு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்த அ‌திக‌ப்ப டியான கொழு‌ப்பு உணவு களை த‌வி‌ர்‌ப்பது உட‌ல் எடையை பராம‌ரி‌க்க உதவு‌ம்.
Tags: