கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் 7 விஷயம் !

Fakrudeen Ali Ahamed
0
நீங்கள் பார்க்குக்கு போகும் போது அங்கு வரக்கூடிய முதிய தம்பதிகளைப் சிறிது நேரம் கவனித்து ள்ளீர்களா? ஒருவர் கையை மற்றவர் ஆதரவுடன் பற்றிச் செல்வார்கள். அப்படி செல்பவர்களாக இருந்தால் அவர்கள் மண வாழ்க்கையில் நிறைவாக வாழும் தம்பதியர் என்று நாம் புரிந்து கொள்ளலாம். 
கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் விஷயம்
இளமையில் ஒற்றுமையாக வாழ்ந்தவர்க ளால் தான் முதுமையிலும் அதைத் தொடர முடியும். ஒருசிலருக்கு, ஆரம்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டிருந் தாலும், ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் ஒருவரை மற்றவர் உணர்ந்தவர்க ளாக மாறியிருக்க லாம்.

அல்லது இளமைக் காலம் முழுவதும் சண்டைக் கோழிகளாக இருந்து விட்டு முதுமையிலாவது நிம்மதி தேடும் பறவைகளாக மாறியிருக்க லாம். 

எது எப்படியோ பற்றிய கரங்களை ஒரு போதும் விட்டு விடாமல் கடைசி மூச்சு வரை தொடர்வது என்பது ஒரு அழகான தாம்பத்தியம் என்பது உண்மை தானே? கணவன் மனைவிக்குள் இந்த சில விஷயங்கள் முக்கியம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

1) நேர்ப்பேச்சு

சில பெண்கள் நேரடியாக ஒரு விஷயத்தைக் கூறாமல் சுற்றி வளைத்துப் பேசுவார்கள். ஆண்களுக்கு பெரும்பாலும் அதைக் கேட்பதற்கு பொறுமை இருப்ப தில்லை. இப்ப என்ன தான் சொல்ல வர்றே? என்று கத்துவார்கள். 
ஜாடை பேசுவது, பொருட்களை நங்கென்று வைப்பது, பிள்ளைகளை அல்லது வேறு யாரையோ திட்டும் சாக்கில் கணவனை இடித்துரைப்பது போன்றவற்றை மனைவி யானவள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அந்த இல்லறத்தில் விரிசல் விழக் கூடிய சாத்தியங்கள் அதிகம் உண்டு. 

ஒரு சில வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தை பளிச்சென்று சொல்வதே சிறப்பு. மேலும் எல்லா விஷயங்களும் இருவரும் ஒளிவு மறைவின்றி விவாதிக்க வேண்டும். Transparency என்பது திருமண உறவுக்குள் மிகவும் முக்கியம்.

2) கேள்விகள்

அனேக ஆண்கள் கேள்விகள் கேட்கப் படுவதை விரும்புவ தில்லை. வீட்டிலிருந்து மனைவி செல்ஃபோனில் பேசும் போது எடுத்தவுடன் எங்க இருக்கீங்க? என்ன செய்யறீங்க போன்ற கேள்விகளைத் தவிர்க்கலாம். தேவை யிருப்பின் அவர்களே கூறுவார்கள். 
வீட்டுக்குள் நுழையும் போதும், ஏன் இவ்ளோ லேட்? எங்க ஊர் சுத்திட்டு வர்றீங்க? அல்லது நீங்க எங்க போயிருப்பீங் கன்னு தெரியும் போன்ற கேள்விகள் கணவர்களை எரிச்சலுக் குள்ளாக்கும். ஒருவருக் கொருவர் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை யுடன் வாழ்தல் வேண்டும். 
செல்ஃபோனில் பேசும் மனைவி
கணவரும் தமது நிகழ்ச்சி நிரல்கள் மொத்தத்தையும் ஒப்பிக்க முடியா விட்டாலும், இந்த நேரத்தில் இங்கிருப்பேன், இந்த நேரத்துக்கு வீடு திரும்புவேன் என்பதை மனைவிக்கு தெரிவித்து விட்டால் அவர்கள் ஏன் நச்சரிக்கப் போகிறார்கள்?

3) தேவையில்லாத சச்சரவு

யார் போன்ல உங்க தங்கச்சியா என்று ஃபோன் பேசி முடியும் வரை அருகிலேயே இருப்பது, கணவரின் பெற்றோர்களை மதிக்காமல் இருப்பது போன்ற விஷயங்கள் குடும்ப ஒற்றுமைக்கு நல்லதல்ல. கணவன் மனைவி இருவரும் ஒருவர் பெற்றோர்களை மற்றவர்கள் மதித்து நடக்க வேண்டும். 

சீரியலில் பார்க்கும் சண்டைகளை குடும்பத்துக்குள் இழுத்து வரக் கூடாது. கணவன் எடுக்கும் முயற்சிகளுக்கு மனைவி உறுதுணை யாக இல்லா விட்டாலும் கூட பரவா யில்லை, அது சரிப்பட்டு வராது, உங்களால் முடியாது என்று முட்டு க்கட்டை போடும் மனைவிகள் மீது கணவருக்குத் தீராத எரிச்சல் ஏற்படும். 
மாறாக கணவர் அகலக்கால் எடுத்து வைக்கிறார் என்று மனைவி நினைத்தால், அதனைக் காரண காரியத்துடன் பொறுமையாக விளக்கி அவருக்குப் புரிய வைக்க வேண்டும். சிலருக்கு பட்டால் தான் புத்தி வரும் என்று தோன்றினால் பட்டுத் தெளிய விட்டுவிட வேண்டும். 

அதன் பின் நான் தான் அப்பவே சொன்னேனே நீங்க கேட்டா தானே என்று தோல்வியுற்ற சமயத்தில் மீண்டும் இடித்துரைக்கக் கூடாது. பரவாயில்லை எவ்வளவோ கஷ்டப் பட்டுட்டோம், இதையும் கடந்துட முடியும் என்று நம்பிக்கை யுடன் ஒரு மனைவி தோள் கொடுக்க வேண்டும்.

4) நினைவுத் திறன்

பெண்களுக்குப் பொதுவாக நினைவுத் திறன் அதிகம். அதற்காக அன்னிக்கு அப்படி சொன்னீங்களே, மூணு வருஷத்துக்கு முன்னாடி அப்படி இப்படி நடந்தவரு நீங்க தானே என்பது போன்ற குத்திக் காட்டல்களை ஆண்கள் விரும்புவ தில்லை. 

நல்ல விஷயங்களை எதுவும் சொல்லிக் காட்டாமல் கணவர் சறுக்கிய விஷயங்களை அலசி ஆராய்ந்து அவ்வப்போது சுறுக்கென்று குத்தும் இயல்பு இருந்தால் உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள். மன்னிப்பதும் மறப்பதும் இனிய தாம்பத்தியத்தின் அத்தியாவசிய குணங்கள்.

5) புரிந்துணர்வு

நீங்க எப்ப தான் என்னை புரிஞ்சுக்கப் போறீங்களோ என்று அடிக்கடி சொல்லும் மனைவியைப் பார்த்தால் கணவனுக்கு கோபம் தான் வரும். காரணம் அவர்களும் அதே நிலையில் தான் இருப்பார்கள். 
நீ தான் என்னை புரிஞ்சி நடத்துக்கணும் என்று இருவருமே ஏட்டிக்குப் போட்டியாக நின்றால் நாளாவட்டத்தில் குடும்ப நீதிமன்ற வாசலில் தான் நிற்க வேண்டி வரும். எனவே நான் நீ என்ற பேதமைகளை மறந்து நாம் என்ற ஒற்றுமையான புரிந்துணர்வு இருவருக்கும் தேவை.

6) பாராட்டுதல்

சில பெண்கள் குற்றம் குறைகளை பூதக் கண்ணாடி போட்டுப் பார்பார்கள். ஆனால் தன் கணவர் செய்யும் சில நல்ல விஷயங்களை ஒரு போதும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஒருவரு க்கொருவர் தட்டிக் கொடுப்பதும், பாராட்டிக் கொள்வதும் உற்சாகத்துடன் வாழ்க்கையை நடத்திச் செல்ல வைக்கும். 

ஒருவருக்கு ஒருவர் நன்றி சொல்லிக் கொள்வதும் ஒரு நல்லியல்பு தான். வார்த்தைகளில் சொல்ல வில்லை என்றாலும் உணர்வுகளில் அது கூடி இருக்கலாம். 
கணவன் மனைவி புரிந்துணர்வு

நம் கணவர் குடும்பத்துக் காக இப்படி ஓடியோடி உழைக்கிறார் என்றும், மனைவி தனக்காக வேலைக்குச் சென்று தன் சுமையைக் குறைக்கிறாள், வீட்டையும் திறமையாக நிர்வகிக்கி றாள் என்று கணவரும் நினைக்க வேண்டும்.

7) அன்பு

ஒரு குடும்பத்தில் அதிகாரம் ஆட்சி செலுத்தினால் அங்கு சந்தோஷம் தங்காது. அன்பின் பகிர்தல்களே ஆனந்தத்தின் அடிப்படை. இனிய தாம்பத்திய த்தில் உடல் மொழிகளை விட மனத்தின் ஒத்திசைவுகளே அழகைக் கூட்டும்.

ஈகோ, பொறாமை, கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகளை ஒரு போதும் கணவன் மனைவி இருவருக் கிடையில் அனுமதிக்கக் கூடாது.

கணவன் மனைவிக்கு இடையே எவ்வித பிரச்னை ஏற்பட்டாலும் அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். வார்த்தைகள் தடிக்க விடாமல், நிதானமாக யார் மீது தவறு உள்ளது என்பதை உணர்ந்து அதைத் தவிர்த்து விட்டால் இல்லறம் என்ற நல்லறம் என்றென்றும் தொடர்ந்திருக்கும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)