சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும்?

Fakrudeen Ali Ahamed
ஒரு பெண் எப்படி யிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். 
எல்லா பெண்களு க்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவ தில்லை. அமைந்தால் கொள்ளையோ… கொள்ளை தான்.

ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள் ளார்கள்.

அதுதான் சாமுத்திரிகா லட்சணம். சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணு க்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்?

1. கால், பாதம் :

ஒரு பெண்ணின் பாதம் செந்தா மரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். 

கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோ டொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். 

குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகு போல் அமைந்திருக்க வேண்டும். பாதங்களின் பெருவிரல் நீண்டிருந் தால் நல்லது. 

காலிலுள்ள நடு விரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். 

குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச் சியாக வாழ்வாள்.

மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் 

பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அது  போல் இருப்பவர்கள் 

ஆரோக்கி யமாகவும் யோகம் உள்ளவர் களாக (அதிர்ஷ்ட சாலியாக வும்) இருப்பார்கள்.

சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். 

அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு 

இருந்தாலும் கணவரை ஒன்று மில்லாமல் செய்து விடும் என்று சொல்லப் படுகிறது.

காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளை யாமலும் இருக்கும். 

அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத் துடனும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

2. தொடை:

பெண்களின் தொடை வாழைத் தண்டு போல் பளபள என்று இருக்க வேண்டும். முழங்கால் சிறிதாக இருக்க வேண்டும்.
பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.

3. இடை:

இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந் திருக்க வேண்டும்.
ஆலிலைப் போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப் போல் 

இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந் தாலும் செல்வம் பெருகும்.

4. மார்பகங்கள்:

பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோ டொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும்.
அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.

5. கைவிரல்:
பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கை விரல்கள் பயித்தங்காய் போல் அழகாக காட்சி தர வேண்டும்.

6. கழுத்து:

பெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளி மிக்கதாக விளங்க வேண்டும்.
பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. 

பெண்ணின் பல் வரிசை முத்துக் களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண் டும்.

7. கண்கள்:

பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. 

பாலில் விழுந்த வண்டு போல கண்கள் துள்ள வேண் டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். 

பெண்களுக்கு புருவம் வில்லைப் போல் வளைந்திருக்க வேண்டும். உருண்டு திரண்ட கண்கள் யோகத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். 

சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.

மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்ற வராகவும் 

எல்லா இடத்திலும் நேர் மறை சிந்தனை கொண்ட வராகவும் இருப்பார்கள். மருண்ட விழிகளில் சில அமைப்புகள் உண்டு.

உருண்ட விழி யோகம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் 

பிறரை எளிதில் கவரக் கூடிய தாகவும் பெரிய துறையில் பெரிய பதவி யில் அமரக் கூடியவ ராகவும் இருப் பார்கள்.

விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளை யாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

உருண்ட விழியின் பின்னணி வெள்ளை யாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர் களாக இருப்பார்கள். 
சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாத வர்கள் என்று சொல் வார்களே… அது போல இருப்பார்கள்.

மஞ்சள் பின்னணி யில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கர மானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங் களை சந்திப்பார்கள்.

விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப் படுகிறது. 

இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தி யாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். 

அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும். வளையக் கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காரு வார்கள். 
இசையில் ஆர்வம் இருக்கும். முண்டக் கண்ணி என்று சொல்லப் படும் கண்கள் உள்ளவர் களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். 

சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்து விடுவார்கள். உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். 

பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்து விட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள் வார்கள்.

8. கூந்தல்:

பெண்களின் கூந்தல் நீண்ட கருங் கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும்.

கோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.

அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர் களாகவும் 

சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர் களாகவும் இருப்பார்கள். அரவணை க்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை துன்பப் படுத்துபவ ர்களாகவும்
குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர் களாகவும் இருப்பார்கள். கலப்பின த்தில் திருமணம் முடிப்பார்கள்.

ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மை யாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மை யாக இருக்கும். 

ரொம்ப துன்பப் படாமல் அமைதி யாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.

கடினமான மொர மொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்க ளுக்கு கடினமான வாழ்க்கை யாக இருக்கும். 

உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்று தான் வாழ் க்கையும் அமையும்.

9. வாசம்:

பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம் பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, 

எலுமிச்சை வாசனை , தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.

10. மூக்கு:
மூக்கு உயர்ந்து காணப் படுவது நலம். மூக்கின் நுனி அமைப்பு தான் முக்கியமாக சொல்லப் படுகிறது. 

மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்ச ராதல் போன்ற யோகம் உண்டு.

எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கிய படி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என் பார்கள்.

ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்திசாலி யாக இருப்பார்கள்.
பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப் படுத்துதல் துறையில் சிறந்து விளங்கு வார்கள்.

சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர்கள் மற்றவர் களை இம்சைப் படுத்து வார்கள். 

சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர் களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப் பார்கள்.

மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப்பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப் படுகிறது. 

ஒரே சீரான மூக்கைக் கொண்டவர் களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும். கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமா னவர்கள்.

ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும் நுனிப்பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். 

இவர்களு க்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும் போதே வளைந்து நெளிந்து இருக்கும்.

வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறிக்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். 

அவர்களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. 
அது போன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர் காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர் களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

11. நெற்றி:

சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. 

உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.

நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத் தான் மிக முக்கியம்.
2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். 

அதற்கு மேல் இருப்பது நல்ல தற்கல்ல. செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். 

செவி குறுக குறுக மன நிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.
Tags: