உங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?

Fakrudeen Ali Ahamed
* குழந்தை களின் வார்த்தை களுக்குச் செவிசாய்ப் பதோடு அவர்களது உணர்வு க்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்.
* சிரித்தால் அவர்களுடன் சேர்ந்து சிரிக்க வேண்டும். அழுதால் ஏன் அழுகிறாய்?

என்று காரணம் கேட்க வேண்டும். மாறாக குழந்தைகளைத்  திட்டுவதோ, அடிப்பதோ கூடாது.
* குழந்தைகளிடம் அன்பு காட்டுவதால் அவர்களைச் சிறந்தவர் களாக உருவாக்க முடியும்.

அதைத் தவிர்த்து அவர்களை உதாசீனப் படுத்தினாலோ, மனதைக் காயப்படுத் தினாலோ அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை உருவாகக் காரணம் ஆகிவிடும்.

* குழந்தைகளைப் பகட்டாகவோ, ஆடம் பரமாகவோ வாழவிடா விட்டாலும் பரவாயில்லை. அவர்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற வேண்டும்.

* நாம் குழந்தையாக இருந்தபோது நமக்குக் கிடைக்காத சந்தோஷம் நமது குழந்தை களுக்குக் கிடைக்கும் போது அதை நாம் பகிர்ந்து கொண்டு ஆனந்தப்பட வேண்டும்.

* குழந்தைகள் தங்களைப் பாராட்டுவதைத் தான் பெரிதும் விரும்புவார்கள். அடுத்தவர் முன் தலை குனிவதை குழந்தைகள் விரும்புவ தில்லை.

அதே நேரம் அவர்களிடம் பிழைகள், தவறுகள் இருந்தால் அன்பாக எடுத்துக் கூறி அவற்றைத் திருத்த பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.

* குழந்தை களுக்குத் தோல்வி களையும் சந்திக்கப் பழக்க வேண்டும். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதோ,

சொல்வதை யெல்லாம் செய்து கொடுப்பதோ மிகவும் தவறானது.

அத்தகைய சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் சின்னச் சின்ன தோல்வி களையும், தாங்க முடியாமல் முடங்கிப் போவார்கள்.
* மற்ற குழந்தைகள் போல் நமது குழந்தைகளும் படிப்பில் முன்னேற வில்லை என்று  அடிப்பதாலோ, திட்டுவதாலோ, பயன் கிடைத்து விடாது.

அதனால் குழந்தைகளுக்கு மன உளைச்சல், பயம், விரக்தி, எரிச்சல் தான் வரும் என்பதைப் புரிந்து கொண்டு பெற்றோர்கள் சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும்.

* உங்கள் குழந்தையை அதன் போக்கில் வளர விடுவது அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று அவர்களைக் கட்டுப் படுத்தினால் அச்செயலைச் செய்வதில் எல்லாரையும் விட

குழந்தைகள் ஆர்வமாக இருப்பார்கள் என்று மன நலமருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Tags: