குழந்தைகள் ஆரோக்கியத்துக்கு சில உணவு பழக்கங்கள் !

Fakrudeen Ali Ahamed
கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப் படுவதோடு ஆரோக்கி யமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்து வர்கள் தெரிவித் துள்ளனர். 
இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப் பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக் கிறது.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப் படுகிறது. 

பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிக ளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசிய மானது.

கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சி யடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

கர்ப்ப காலத்தில் ஹீமோ குளோபின் பற்றாக் குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவ காலத்தில் சிக்கலாகி விடும்.

இதனை தடுக்க கர்பிணி களுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
உற்சாகத்தை அதிகரிக்கும்: 

இது மனதிற்கு உற்சாகம் தரும் காய்கறி. சற்றே சோம்ப லாகவோ, மன அழுத்தம் ஏற்படுவது போல உணர்ந்தாலோ பீட்ரூட் ஜூஸ் சாப்பிடலாம்.

இது மனதை உற்சாகப் படுத்தும், மகிழ்ச்சி ஏற்படும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாக்கும். 

குழந்தை களுக்கு கண்நோய் ஏற்படாமல் தடுக்கும். கர்ப்பிணி களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

எனவே கர்ப்பிணி களுக்கு சாலட், ஜூஸ், சூப் போன்றவை களை செய்தும் கொடுக்கலாம்.
Tags: