குழந்தைகளுக்கு எந்த வயதில் என்ன உணவு கொடுக்கலாம்?

Fakrudeen Ali Ahamed
குழந்தை வளர்ப்பில், தாய் மார்கள் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டியது அதன் உணவு முறையில் தான்.
ஒரு ஆண்டு காலம், நாம் அளிக்கும் சத்தான உணவே அவர்களின் எதிர்கால ஆரோக்கிய த்திற்கு அஸ்தி வாரமாக அமையும் என்கின் றனர் மருத்து வர்கள்.

பிறந்தது முதல் ஒரு வயது நிறைவு பெறும் வரை, உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தையின் தன்மைக்கேற்ப மாதந்தோறும் உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். 

இது குறித்த மருத்துவர்களின் பரிந்துரையை காண்போம்:

0-4 மாதம் வரை:

தாய்ப் பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்து விடும். 

ஏனெனில், தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது.

மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்று வதோடு, 

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றி விடும்.

அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங் களுக்கு கொடுக்க வேண்டும். 

இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடை வதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

4-6 மாதம் வரை:

நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில், கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், 

அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக் கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்ற வற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.
அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், 

அப்போது இந்த உணவு களையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். 

அதுவும் ஒருடேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

6-8 மாதம் வரை:

இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், 

காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம்.
அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன்  செர்லாக்,  2-3 முறை தாய்ப்பால் 

மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம்.

அவ்வாறு இவற்றை யெல்லாம் கொடுக்கும் போது, குழந்தை களுக்கு அந்த உணவுகளால் 

ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.

8-10 மாதம் வரை:
இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச் சத்துள்ள தானியங்க ளான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவ ற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.

அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்ற வற்றையும்
கொடுக்க ஆரம்பிக்கலாம்.

10-12 மாதம்:

இந்த வயதில் அனைத்து உணவு களையும் கொடுக்கலாம். அளவாக இருக்க வேண்டும். 

உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும்.

அதாவது 1/3 கப் பால்பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.
Tags: