இடுப்பு மடிப்பு உள்ளதா பெண்களே உஷார் !

Fakrudeen Ali Ahamed
இடுப்பில் டயர் போட்டு விட்டது' என்பார்கள். அதாவது இடுப்பில் சதை போட்டு, மடிப்பு மடிப்பாகத் தெரியும்.

இது தான் பெண்களின் உடல் ரீதியான பல பிரச்னை களுக்கு வெளிப் படையாகத் தெரியும் அறிகுறி என்றால் நம்புங்கள்.

பல பெண்கள் இடுப்பில் கொஞ்ச மாக சதை போட்டால் பார்க்க அழகாக இருப்பதாக நினைக் கிறார்கள்.

அது தான் தவறு. உங்கள் உடலின் எடை கூடப் போகிறது. தொப்பை போடப் போகிறது.

இதயம் உள்ளிட்ட பல நோய்களை நீங்கள் வலியப் போய் வர வழைத்து விட்டீர்கள் என்பதற்கு இது ஒரு அறிகுறி.

இடுப்புப் பகுதியில் தோலுக்கு அடியில் "சப்ஜடேனியஸ்' என்னும் கொழுப்பு இருக்கிறது.

 இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காத போது, இக்கொழுப் பானது கரையாமல் அங்கேயே தங்கி விடும்.

இடுப்புப் சதைப் பகுதி பெருத்துப் போய், டயர் போட்டது போல் ஆவதற்கு இதுதான் காரணம்.

சில பெண்களு க்கு, பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் மாற்றங் களாலும் இடுப்பில் சதை போட்டு விடும்.

இந்தக் காரணங்கள் எதுவுமே இல்லாமல், உடல் உழைப்பு எதுவும் இல்லாமல், வளைந்து குனிந்து பெருக்காமல், ஓடியாடி வேலை செய்யாமல்,

ஒரே இடத்தில் உட்கார்ந்த படி, பல மணி நேரம் டிவி பார்ப்ப வர்கள், நொறுக்குத் தீனி சாப்பிடு பவர்கள்,

கொஞ்சம் கூட உடற் பயிற்சியே செய்யாதவர் களுக்குக் கண்டிப் பாக இடுப்பு மடிப்பு விழும்.

அதை அப்படியே விட்டால், முதலில் உடல் பருமன் அடையும், பிறகு தொப்பை விழும். எடை அதிகரிக்கும்.

மூச்சு வாங்கும். பி.பி. மெல்ல எட்டிப் பார்க்கும். சுகர் வந்து வந்து போகும்.

கடைசியில் ஹார்ட் அட்டாக்குக்கும் கிட்னி ஃபெயிலி யருக்கும் வழிவகுத் தாலும் வகுக்கலாம் இந்த இம்சைகள் வேண்டுமா?

கொஞ்சமே கொஞ்சமாக அக்கறை எடுத்துக் கொண்டாலே, போதும் இந்தப் பிரச்னைகள் வராமலே தடுத்து விடலாம்.

உங்களு க்குத் தெரியும்?

உலகில் 100 கோடி பேர் அளவுக்கு அதிகமான இடுப்புச் சதையால் அவதிப் பட்டுக் கொண்டிருக் கிறார்கள் என்பது பலருக்குத் தெரிவ தில்லை.

இதனால் 40 கோடிப் பேர் ஒபிஸிட்டி எனும் உடற் பருமனால் பாதிக்கப் பட்டிருக்கி றார்கள்.

இன்னொரு அதிர்ச்சி யான தகவல், உலகில் மொத்த இறப்பு களில் 3ல் ஒரு பங்கு இடுப்புச் சதை அதிகம் உள்ளவர் களுக்குத் தான்

இதயநோய் சம்பந்த மான இறப்புகள் ஏற்படுகி னறனவாம். இந்த ஆபத்துக்குக் காரணம் முறையற்ற உணவுப் பழக்கம் தான் என்கிறார்கள்.

ஏன் இடுப்புச் சதை?

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் கலோரித் திறன் அதிகம் இருந்து, நம் உடல் செலவழி க்கும் கலோரித் திறன்

குறைவாக இருந்தால், அதுதான் படிப்ப டியாக இடுப்பைச் சுற்றிலும் சதை போடக் காரணமா கிறது.

சர்க்கரை, உப்பு, கொழுப்பு போன்ற வற்றை அதிகம் உணவில் சேர்ப்பதும் இடுப்புச் சதை கூட மேலும் ஒரு காரண மாகும்.

அதாவது நாம் ருசிக்காக உண்பது தான் அதிகம். சத்துக்காக உண்பது குறைவு.

இளைய தலைமுறை யினர்:

வீட்டுச் சாப்பாட்டை புறக்கணித்து விட்டு, ஃபாஸ்ட்ஃபுட் வகைகள் நொறுக்குத் தீனிகள், குளிர் பானங்கள் அதிகம் உண்பது இன்றைய இளம் தலைமுறை யினரிடடையே ஃபேஷனாகி விட்டது.

நண்பர்கள் அல்லது நண்பிகள் நான்கு பேர் ஒன்று சேர்ந்தால், இந்த வகை, உணவுகள் தான் அவர்களின் மெனுவில் இருக்கும்.


அரட்டைக் கச்சேரிக்கு நடுவே, இந்தவகை உணவுகள் எவ்வளவு உண் கிறோம் என்ற அளவே தெரியாமல் உண் கிறார்கள்.

கூடவே உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் தான் அவர்கள் விரும்பி ஈடுபடு கிறார்கள்.

கம்ப்யூட்டர், டி.வி. முன் அதிக நேரம் செலவிடு வதும் இதற்கு முக்கிய காரணமா கிறது.

ஒரே நாளில் இடுப்பில் மடிப்பு விழாது:

யாருக்கும் ஒரே நாளில் திடீரென்று இடுப்பில் சதைப் போட்டு விடாது. கொஞ்சம் கொஞ்ச மாக பல வருடங்கள் கழித்துத் தான் இந்த இடுப்பு மடிப்பு வரும்.

கொஞ்சம் கொஞ்ச மாக சதை கூடும் போது அது பற்றிய அக்கறையோ கவலையோ கொள்ளா தவர்கள், உடலுக்கு ஏதாவது பிரச்னை என்றால் மட்டுமே வருத்தப் படுகிறார்கள்.

இடுப்பில் அளவுக்கு மீறிய சதை போட்டு டயர்போல் பெருத்த பின்னர் தான் அதைக் குறைக்க பலர் படாதபாடு படுகிறார்கள்.

அதற்காக கடுமையான உணவுக் கட்டுப்பாடு, கடுமை யான உடற் பயிற்சி, பல நாள் பட்டினி, அளவுக்கு அதிகமான மாத்திரைகள் எடுத்து

உடனே இடுப்புச் சதையைக் குறைக்க பரபர என்று ஓடுவார்கள். அப்படி யெல்லாம் நினைத்த உடன் இடுப்பு மடிப்பை நீக்கி விட முடியாது.

ஒரே வழிதான் உண்டு:

அதற்கு ஒரே வழி, நீங்கள் எவ்வளவு கலோரியை உணவின் மூலம் உடலுக்குள் கொண்டு வருகிறீர்கள்.

அதில் எவ்வளவு கலோரித் திறனை செலவழிக் கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் இடுப்பு மடிப்பு குறையும்.

அதாவது, நாம் உட்கொள்ளும் உணவின் அளவு நமது உடல் செய்யும் வேலையின் அளவு

இந்த இரண்டி ற்கும் இடையே நடைபெறும் வரவு-செலவு கணக்கைப் பொறுத்துத் தான் உடல் எடை கூடும்-குறையும்.

இடுப்புச் சதையைக் குறைக்க உதவும் உணவுப் பழக்கம்:

1. எண்ணெயில் செய்த உணவுகள் எதுவும் கூடாது.

2. மட்டம், முட்டை மஞ்சள் கரு, வெண்ணெய் போன்ற கொழுப்புச் சத்துள்ள உணவு களைத் தவிர்த்து விடுங்கள்.

3. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் அதிகம் கூடாது.

4. மது, புகை கூடவே கூடாது.

5. குளிர் பானங்களை அடிக்கடி அருந்தக்கூடாது.

6. நார்ச் சத்துள்ள காய்கறிகள் பழங்கள் அதிகம் உண்ண வேண்டும்.

7. ஓட்ஸ் கஞ்சி நல்லது.

8. உடல் உழைப்பு இல்லாத வேலையில் இருப்போர், அளவான உடற் பயிற்சி, 45 நிமிட நடைப் பயிற்சி அவசியம். இதைத் தொடர்ந்து செய்தாலே இடுப்பில் மடிப்பு விழாது.

9. நடனம் ரொம்ப நல்லது. ஏதாவரு ஒரு நடனத்தை தொடர்ந்து ஆடுங்கள். கண்டிப்பாக இடுப்பில் சதை இருக்காது.

திருமண மான பெண்கள், விவாகரத் தான ஆண்களின் உடல் பருமன் விரைவில் அதிக மாகிறது.

அதிலும் இடுப்பு பகுதியில் தான் அதிகம் சதை போடுகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.

உடல் பருமனால் உலகம் முழுவதும் ஏராள மானவர்கள் அவதிப்படு கின்றனர். இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச் சிகள் நடந்து வருகின்றன.

அமெரிக்கா வின் ஒஹியோ மாநில பல்கலைக் கழக ஆராய்ச்சி யாளர்கள் டிமித்ரி ட்யுமின் தலைமையில் உடல் பருமன் குறித்து சமீபத்தில் விரிவான ஆய்வு மேற் கொண்டனர்.

1986 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை 10 ஆயிரத்து க்கும் அதிகமான ஆண், பெண்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் களின் அடிப்படை யில் இந்த ஆராய்ச்சி நடந்தது.

ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப் பட்டுள்ள தாவது:

பெண்கள் திருமணத் துக்கு பிறகும், ஆண்கள் விவாகரத்து ஆன பிறகும் உடல் எடை விறுவிறுவென அதிகமாகிறது. 

இதில் பெரும் பாலானவர்கள் 30 வயதை கடந்த வர்கள். பெரும்பாலும் இடுப்பு பகுதியில் தான் அதிகம் சதை போடுகிறது.

இந்த நிலை 50 வயது வரை நீடிக்கிறது. திருமணம் ஆன 2 ஆண்டுகள் வரை அல்லது விவாகரத் தான 2 ஆண்டுகள் வரை இத்தகைய மாற்றம் ஏற்பட்டி ருக்கிறது. 

திருமணம் ஆகாதவ ர்களை விட திருமணம் ஆனவர்கள் குண்டாகும் வாய்ப்பு அதிகம்.
Tags: