உஷாரய்யா உஷாரு.. நீங்கள் தொலைபேசியில் செக்ஸியாக பேசுபவரா?

Fakrudeen Ali Ahamed
நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக் கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் 
உஷாரய்யா உஷாரு.. நீங்கள் தொலைபேசியில் செக்ஸியாக பேசுபவரா?
தொலை பேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக் கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங் களை பேசி விடுகிறோம்.
முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலை பேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக் கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங் களை பேசி விடுகிறோம்.

இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக் கிறோம்.

அப்படி தாறுமாறாக நிதானம் இழந்து தன்னுடைய துணையிடம் பேசியதை இண்டெர்நெட்டில் கேட்டு விட்டு அதிர்ந்து விட்டார் ஒரு நண்பர்.

அதை அவருடைய துணையிடம் சொல்லி ஒரு பிரபல பத்திரிக்கையில் புகார் கொடுக்க சொல்லி யிருக்கிறார்.

குப்புற படுத்து தூங்குவது தவறா தெரியுமா?

அது சம்பந்தமாக அந்த பிரபல பத்திரிக்கையில் வெளி வந்திருக்கும் செய்தி தொகுப்பு: "நெட்மூலம் பகிரங்கமாகிக் கிட்டு இருக்கும் என் மானத்தை நீங்க தான் சார் காப்பாத்தணும்

என்றபடி அந்த பத்திரிக்கை நிருபரிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத் தலைவி. துணைக்கு தன் அக்காவையும் அழைத்து வந்திருந்த அவரிடம் ஏகத்துக்க இல்லைங்க.

எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் தான் ஆகுது. கல்யாண மான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார்.

என் மேல் அளவு கடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார்.
உஷாரய்யா உஷாரு.. நீங்கள் தொலைபேசியில் செக்ஸியாக பேசுபவரா?
என்னையும் அவர் அளவுக்கு பேச வைப்பார்..''’சொல்லும் போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது. அவரைத் தேற்றும் விதமாக அந்த பத்திரிக்கை நிருபர்.. "சரி விடுங்க.

இது பல இடங்கள்ல நடக்குறது தானே... இதில் என்ன பிரச்சினை?'’ என்றார். அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் அந்த பத்திரிக்கை நிருபரை மட்டும் அல்லாமல் இதைப் படித்த வரையும் ஏகத்துக்கும் அதிர வைத்தது.

அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லை மீறி பேசிய கிளுகிளு பேச்சுக்கள்... இப்ப இண்டர் நெட்டில் வருதாம். 
 
யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி எங்களுக்கே தெரியாமல் எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி இப்படிப் பண்ணி யிருக்கான்.

ஷாப்பிங் மால் பற்றிய ஒரு ஷாக்கிங் ரிப்போர்ட் !

இதை என் வீட்டுக்காரர் தான் பார்த்துட்டு அதிர்ந்து போய் எனக்குத் தகவல் சொன்னார். கூடவே "அந்த பிரபல பத்திரிக்கை யாளர் கிட்டே உதவி கேள்'னும் சொன்னார்.

அதான் வந்தேன்''’என்று அந்த நிருபரை அதிர வைத்தவர் அந்த இணையதள முகவரி யையும் நம்மிடம் கொடுத்தார்.

அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த அந்த பத்திரிக்கை நிருபரை சொன்ன விவகார மான இணைய தளத்தை கவனித்தார்.

கணவன்- மனைவிகள், காதல் ஜோடிகள், கள்ள உறவு ஜோடிகள் என பலதரப்பட்ட ஆண் -பெண்களின் லச்சையற்ற அப்பட்டமான உரை யாடல்கள் அங்கே பதியப் பட்டிருந்தன.
உஷாரய்யா உஷாரு.. நீங்கள் தொலைபேசியில் செக்ஸியாக பேசுபவரா?
காதுகள் கூசும் அளவிற்கு பலரும் தங்களது அந்தரங்க உணர்வு களை யார் கவனிக்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் தங்கள் பார்ட்னர் களிடம் செல்லச் சீண்டல் சிணுங்கல் சகிதமாய்ப் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்... 
 
அங்கே தோரணம் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தன. உரையாடல் களிலேயே இப்படி ஒரு மன்மத உலகமா? என திகைத்துப் போன நாம் நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் 

பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்ய முடியுமா? என அந்த பத்திரிக்கை நிருபர் விசாரிக்க ஆரம்பித்தார். பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் ஒருவரைத் தொடர்பு கொண்டார்.

அனீமியா என்றால் என்ன?

அந்த அதிகாரியோ... ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்து விட்டு இந்த மாதி ரியான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு.

முதல் வகை... நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக் கிட்டோம்ன்னா 

நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவா யிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை.

இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர் களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு.

இந்த கால் சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா... யார் பேச்சை வேணும் னாலும் ரெக்கார்ட் பண்ண முடியும்.
உஷாரய்யா உஷாரு.. நீங்கள் தொலைபேசியில் செக்ஸியாக பேசுபவரா?
பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலை யிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கற வங்க... நீண்ட நேரமா ஒரு கால் பேசப்ப டுதுன்னா அவுங்க என்ன பேசறாங் கன்னு ஒட்டு கேட்க முடியும்.

நைட்ல கள்ளக் காதலர்கள், கணவன்-மனைவி, காதலர்கள் உணர்ச்சி யோட கிளுகிளுப்பா பேசு வாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சது தானே.

இந்த மாதிரி பேச்சு க்களை கேட்டுக்கேட்டு 'கிக்' ஆகற சிலர் இருக்கத் தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப் பிருக்கு.

மூணாவதா சில குறிப்பிட்ட இணைய தளங்கள், "உங்களுக் காக எங்களது பெண்கள் காத்திரு க்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டு மானாலும் கேட்கலாம்,

மண்டை ஓடு குவியலால் கட்டப்பட்ட கோபுரம்... மாயன் நரபலியா?

செக்ஸ் பற்றி மற்றவர் களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்'னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க.

அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங் கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடு வாங்க.

இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்க றதுக்கு சமம்''’என்றார் விரிவாக. பெண்களுடன் செக்ஸ் உரையாடல் களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த கிளுகிளு இணைய தளங்கள் குறித்தும் விசாரித்தார் அந்த பத்திரிக்கை நிருபர்.
உஷாரய்யா உஷாரு.. நீங்கள் தொலைபேசியில் செக்ஸியாக பேசுபவரா?
அதில் கையைச் சுட்டுக் கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங் களை சங்கோஜ த்துடனே சொல்ல ஆரம்பித்தார். "பொதுவா செக்ஸ் வெப்ஸைட்டு கள்ல நான் உலவிக்கிட்டு இருந்தப்ப "எந்த நேரத்திலும் மனதில் இருக்கும்

ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்' னு ஒரு வெப்ஸைட் கூவி யழைத்தது.

அதில் உடம்பைத் திறந்து போட்டிருந்த ஒருத்தியைப் படத்தைப் பார்த்தே கிளுகிளு உரை யாடலுக்கு செலக்ட் பண்ணி அவங்க கொடுத் திருந்த ஐ.எஸ்.ஐ. 

எண்ணில் தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலே "என் பேரு நந்தினி. மும்பையில காலேஜ் படிக்கறேன்.

உலகம் அழிய இது நடந்தால் சர்வ நாசம் தான் !

என் சொந்தவூர் சென்னை தான். உங்களோட செக்ஸா பேசணும்னு ஆசையா இருக்கு' என்றவள் தன் உடல் பாகங்களை வர்ணித்து அதில் உள்ள மச்சங் களையும் சொல்லி கண்டபடி கிக் ஏத்தினாள்.

இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. அந்த மாத பில் வந்த போது மயக்கம் வந்து விட்டது. காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050 ரூபாய் சார்ஜ் ஆகி யிருந்தது.

நொந்து போய் இது பற்றி விசாரித்த போது இணைய தளத்தரப்பும் தொலை பேசித் தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள் கிட்ட பணம் புடுங்க இந்த மாதிரி பண்ணிக் கிட்டிருக்காங் கன்னு தெரிஞ்சிது.

லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித் தான் பணம் புடுங்குறாங்க. என்னை மாதிரி தினம் தினம் எத்தனைபேர் இப்படி பணத்தை அந்த ஆபாசக் கும்பலிடம் பறி கொடுத்துக் கிட்டு இருக் காங்களோ''’ என்றார் எரிச்சலாக.
உஷாரய்யா உஷாரு.. நீங்கள் தொலைபேசியில் செக்ஸியாக பேசுபவரா?
வழக்கறி ஞரான ரமேஷ்கிருஸ்ட்டி அந்த பத்திரிக்கை நிருபரிடம் "சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங் செல்லை உருவாக்கித் தர்றாங்க.

இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ அல்லது மனைவி மீது கணவ னுக்கோ சந்தேகம் இருந்தா அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக் கலாம்.

சம்பந்தப் பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனி லும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதே போல் இன்னொரு விஷேச ஆண்ட னாவையும் அங்க விக்கிறாங்க. 

அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும் அக்கம் பக்கத்தல யிருக்கற செல்போன் லைன் களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக் கேட்டு ரெக்கார்டும் பண்ண முடியும்.

இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரை யாடல்கள் கொள்ளை யடிக்கப்படுது.
உஷாரய்யா உஷாரு.. நீங்கள் தொலைபேசியில் செக்ஸியாக பேசுபவரா?
இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக் குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு.
 
இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும் என்றார் கவலையாக.

சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. சுதாகரிடம் இது பற்றி அந்த பத்திரிக்கை நிருபர் கேட்ட போது.. மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். 

ஆனா அத வச்சி மிரட்டறது, வெளியிடறது குற்றம். இதுக்கு கடுமை யான தண்டனை யுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு.

குளோனிங் சிம், மினி ஆண்டனா வெல்லாம் புது விவகார மாயிருக்கு. இதனால பெரிய பிரச்சினை கள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு.

தீக்காயங்களை கணக்கிடுவது எப்படி?

நாங்க இத தீவிரமா கண்காணிக் கிறோம் என்றார் உறுதியான குரலில். மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல் உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம். 

இது சம்பந்தமாக சைபர் க்ரைம் ஸ்பெஷலிஸ்ட்டான அட்வகேட் ராஜேந்திரனோ வெளி நாட்டிலுள்ள கணவனிடம் மனைவி தன் ஆசைகளையும், ஏக்கம் விருப்பங்களையும் வெளிப்படுத்தி சந்தோஷமாகப் பேசுவது உண்டு.

இளம் பெண்கள் அப்பா, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக் கூட தோழிகளிடம் பகிர்ந்து கொண்டு பேசுவதுண்டு. 

காதலர்கள் கொஞ்சிக் குலவுவது மட்டுமில்லாமல், கள்ளக் காதலியிடமோ, கள்ளக் காதலனிடமோ கிளுகிளுப்பாக ஃபோனில் பேசுவது உண்டு.

இதை யெல்லாம் ஒருவன் ஒட்டுக் கேட்டு அதை ரெக்கார்டும் செய்கிறான் என்றால் என்ன நடக்கும்? ஆண்களிடம் ப்ளாக்மெயில் செய்து பணமும், பெண் களிடம் கற்பையும் சில கில்லாடிகள் களவாட வாய்ப் பிருக்கிறது.

இதைவிட டேஞ்சரஸ் என்னன்னா... டெரரிஸ்ட்டுகள் நம்ம சிம்கார்டை குளோனிங் சிம்கார்டாக்கி விட்டால் அவ்வளவு தான்.

போலீஸிடம் நாம் தான் மாட்டிக் கொள்ள வேண்டிய சூழல். ஆக, ஒவ்வொரு மாதமும் பில்தொகை எவ்வளவு வருது என்பதை "செக்' பண்ணணும்.

நமக்கு அறிமுகமே இல்லாத செல் நம்பருக்கு கால் போயிருந்தாலோ, ராங்-கால் வந்து நாம் கட் பண்ணி யிருப்போம்.  ஆனாலும் தொடர்ந்து பேசியது போல பில் வந்திருந் தாலோ, நாம் எந்த நம்பரு க்கும் எஸ்.எம்.எஸ்.

அனுப்பாமலேயே டெலிவர்டு ஆனது போல ரிப்ளை வந்தாலோ அலட்சியப்படுத்த வேண்டாம்.
உஷாரய்யா உஷாரு.. நீங்கள் தொலைபேசியில் செக்ஸியாக பேசுபவரா?
உடனடியாக காவல் துறையில் புகார் கொடுத்து கண்காணிக்க வேண்டும். சிம்கார்டை யாரிடமும் கொடுக்காமல் கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும்.

ஒரு வேளை சிம்கார்டு தொலைந்து போனாலும் புகார் கொடுத்து லாக் பண்ணி விட வேண்டும். என்று உஷார் படுத்துகிறார் அவர்.
சகோதர சகோதரிகளே,

நம்மில் பலரும் இது போன்ற செயல்களை தினமும் செய்து கொண்டிருக் கிறோம். இது எங்கோ நடக்கிறது, நமக்கேன் கவலை என்று இருந்து விடாதீர்கள்.

இதை எச்சரிக்கை யாக எடுத்து உங்கள் வாழ்க்கை யில் முதலில் கடை பிடியுங்கள். தொலை பேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக் கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) எல்லை மீறி

நிதானம் இழந்து மனைவி தானே என்று நினைத்து அந்தரங்க விஷயங் களை எக்காரணம் கொண்டும் பேசாதீர்கள்,

அப்படி பேசுமாறு உங்கள் மனைவியோ /காதலியோ / நிச்சய முடிக்கப் பட்ட பெண்ணோ உங்களை வற்புறுத் தினால் விஷயத்தின் விபரீதத்தை சொல்லி புரிய வையுங்கள்.
உஷாரய்யா உஷாரு.. நீங்கள் தொலைபேசியில் செக்ஸியாக பேசுபவரா?
இதை உங்கள் நண்பர் களுக்கும், நலவிரும்பி களுக்கும் சொல்லி புரிய வையுங்கள். திருமண மான புதிதில் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை தான், 
 
ஆனால் நாம் உஷாராக இல்லாது போனால் நம்முடைய அந்தரங் கமும் இணைய தளத்தில் வெளி வந்து அதன் பின் வருத்தப்பட நேரிடும்.

இலங்கை, இந்தியா இப்படி அனைத்து நாடுகளிலும் சில விஷமிகள் இருக்கத் தான் செய்கிறார்கள். அதே சமயம் நாமும் மிகவும் ஜாக்கி ரதையாக இருக்க வேண்டும்.
Tags: