கோடைக் காலத்தில் கூந்தலை பாராமரிக்க டிப்ஸ் !

Fakrudeen Ali Ahamed
அதிகப் படியான வியர்வை, உடல் சூடு, தலையில் படியும் அழுக்குகள் எனக் கோடைக் காலத்தில் நாம் சந்திக்கும் கூந்தல் பராமரிப்பு பிரச்னைகள் ஏராளம்.

அவற்றுக் கெல்லாம் தீர்வுகள் உண்டா என்பது பற்றி பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக் கலை நிபுணர் வசந்தரா .

`கோடை நேரத்தில் அதிகப் படியான வெயில் காரண மாக நம் சருமம் பாதிக்கப் படுவது மட்டு மல்லாமல், கேசமும் பாதிக்கப் படும்.

சரியான கவனிப்புடன் செயல் பட்டால் இதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

. கூந்தல் பராமரிப்பு

* கற்றாழை யில் இருக்கும் நுங்கு போன்ற சதைப் பகுதி நான்கு டீஸ்பூன், பெரிய நெல்லிக் காய் சாறு நான்கு டீஸ்பூன் எடுத்து தலையில் தடவி,

15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் சூட்டினால் ஏற்படும் முடிகொட்டு தல் பிரச்னை நீங்கி, தலைமுடி பளபளப்பாக இருக்கும்.

* வறட்சியால் முடி உதிர்கிறது எனில், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு,

ஒரு டீஸ்பூன் தயிர், முட்டை யின் வெள்ளைக்கரு ஆகிய வற்றைக் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து

குழித்தால் முடி உறுதி யோடு இருக்கும், உதிர்வதும் நிற்கும். வாரம் இருமுறை இப்படிச் செய்து வர வேண்டும்.

* தலைக்குக் குளிக்கும் நீரில் புதினா ஜூஸ் 10 டீஸ்பூன் கலந்து குளிக்க லாம் அல்லது

தண்ணீரை லேசாகக் கொதிக்க வைத்து சிறிது வேப்பிலையை அதில் சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விடவும்.

அரை மணி நேரம் கழித்து சாறு இறங்கிய தண்ணீரை நீங்கள் குளிக்கும் டப்பில் ஊற்றி கூடுதலாக

தண்ணீர் சேர்த்து குளித்தால் பொடுகு, பேன் தொல்லை யிலிருந்து விடுபட லாம்.

* முடிக் கொட்டுதல் பிரச்னைக்கு ஷாம்பு தேர்வும் ஓர் அடிப்படை காரணம். ஷாம்புவின் ph 4.5 தான் இருக்க வேண்டும்.

இதற்கு மேல் ph மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க முடி வறட்சித் தன்மை அடைந்து உடைந்து போகும் .

எனவே ஷாம்பு தேர்வின் போது ph அளவினை பார்த்து வாங்குங்கள். அடிக்கடி ஷாம்பு மாற்றும் வழக்கமும் முடுக்கொட்டுதல் பிரச்னைக்குக் காரணமாக அமையலாம்.
* அவகாடோ, வாழைப்பழம் இரண்டையும் சம அளவில் எடுத்துக் குழைத்து தலையில் மாஸ்க் போன்று போட்டு

அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப் பான நீரில் குளித்தால் கூந்தல் பட்டு போல மிருது வாக இருக்கும். கூந்தலின் உறுதித் தன்மையும் அதிகரிக்கும்.

* வெள்ளரிக் காய் ஜூஸை தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்தால் வெயிலி னால் தலையில் உருவாகும் சிறு கட்டிகள் மறையும்.

* கடலை எண்ணெய் , தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணய் மூன்றையும் சம அளவில் எடுத்து சுத்தமான பாட்டிலில் ஊற்றி 10 நாள்கள் அதை வெயில் படும் இடத்தில் வைக்கவும்.

பிறகு வாரம் ஒருமுறை தலை மற்றும் உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும்.

எண்ணெய் தேய்த்த அன்று ஷாம்பு, சீயக்காய் போட்டு குளிப்பதை விட, மறுநாள் உபயோகித் தால் முடி உறுதியுடன் இருக்கும்.

* தினமும் ஷாம்பு பயன்படுத்துவ தால் இளவயதிலேயே நரை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, ஷாம்புக்குப் பதிலாக நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பூந்திக் கொட்டையை வாங்கி

சுடுநீரில் ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து அந்தத் தண்ணீரை வடிகட்டி தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும்.
Tags: