குழந்தைகளுடன் பேச வேண்டும்? ஏன் தெரியுமா?

Fakrudeen Ali Ahamed
பிறந்த வுடன் குழந்தை, அழ ஆரம்பிக்கும் போது, தாய்ப்பால் தேவை என, தாயிடம் பால்பருக வைப்பார்கள், அதன் பின்னர், பேச்சு வரும் வரை, தேவையை, தனது அழுகையின் மூலமே, 


அது தாயிடம் கேட்கும், ஆயினும் குழந்தை எதற்கு அழுகிறது என்பதை தாய் அறியாமல், ஏதேதோ செய்ய, குழந்தை மீண்டும் அழ, பதட்டத்தில் மீண்டும் மருத்துவ மனைக்கு ஓடுவார்கள். 

இது போன்ற, பாதிப்புகள், இளம் தாய்மார் களுக்கு அடிக்கடி ஏற்படும், அதுவும், வீடுகளில் அவர்களு க்கு மூத்தவர்கள் துணை இல்லை யெனில், வேதனை இன்னும் அதிகமாகும், 

இது போன்ற பாதிப்புகள் எல்லாம் ஏன் ஏற்படுகின்றன? இன்றைய தாய்மார் களுக்கு குழந்தை வளர்ப்பைப்பற்றித் தெரிய வில்லையா? 

குழந்தை பெறுவது ஒரு தவம் என்றால், குழந்தையை வளர்ப்பது ஒரு வரம் என்று உணர வில்லையா அவர்கள்? இதற்கெல்லாம், என்ன தீர்வு? கருவில் கற்றுக் கொள்ளும் குழந்தைகள்! 

தாயின் வயிற்றில் இருக்கும் போதே, குழந்தை வெளி யுலகின் சத்தங்கள் மூலம், தன் கற்கும் செயலைத் தொடங்கி விடுகிறது, 

நமது தேசத்தில், கருவுற்ற மகளிருக்கு, வளை காப்பு எனும் வளையல் அணிவிக்கும் சடங்கு, சிறப்பாக கொண்டாடப் படும், அதற்குக் காரணம் என்ன? 

பலவித மனிதர்களின் வருகை, வாழ்த்துப் பேச்சு, சிரிப்பு போன்ற உற்சாக மன நிலையின் தன்மை களைக் குழந்தை அறிந்து கொள்ளவே!, 

குழந்தை களின் கேட்கும் திரனை மேம் படுத்தவே! சொல்லப் போனால், கருவில் இருக்கும் குழந்தைக்கு, வாழ்க்கையை கற்றுக் கொடுக்கும் நம் முன்னோர் களின் சிந்தனை வளமே, இந்தநிகழ்வு. 

தாய் கையில் அணிந்தி ருக்கும் கண்ணாடி வளையல் களின் சத்தம் குழந்தை களுக்கு, ஒலியின் தன்மைகளை அவற்றின் இனிமையை உணர்த்தும். 

இப்படி யெல்லாம், கவனித்து குழந்தை பிறப்பை, வளர்ப்பை, வாழ்வின் சிறந்த கடமை யாகக் கொண்டாடிய, காலகட்டம் இன்று இல்லை. 

நிகழ்வு களின் விளக்கத்தை சொல்லும் அளவுக்கு, இன்றைய இளம் தாய்மார்க ளின் பெற்றோரு க்கும் தெரியாமல் போவது தான், வேதனை. 

இனி வரும் காலத்தில், வளைகாப்பு, குழந்தைக்கு பெயர் வைத்தல் போன்ற சடங்குகள் கூட, மறைந்து விடுமோ என்ற வருத்தம் எல்லோரு க்கும் இருக்கும். 

இதனால், இழப்பு, பெற்றோருக்கு இல்லை, மாறாக, இனிவரும் தலைமுறை களுக்கு வேர்களாக இருக்கப் போகும் இந்த மழலை களுக்குத் தான், பெரும் பாதிப்பு. 

குழந்தை களின் முதல் பேச்சு, அழுகை! தாயின் வயிற்றி லிருந்து, அருகில் கேட்கும் பேச்சுக் களின் மூலம், தனக்கு உறவுகள் நட்புக்கள் யார் என்பதை குரலின் மூலம் குழந்தை ஓரளவு உணர்ந்தி ருந்தாலும், 

குரலோடு முகத்தையும் நோக்கும் போது, குழந்தை யின் புரிதல் என்பது, அதன் மகிழ்ச்சி யில், கைகளை ஆட்டி சிரிப்பதில் தெரியும். குழந்தைகள் வளரும் முதல் எட்டு மாதங்கள் மிகவும் உன்னத மான கால கட்டமாகும். 

உறவுகளை குழந்தைகள் அறிந்து கொள்ளும்.

குழந்தைகள் காணும் யாவற்றுக்கும் விளக்கம் பெற முயன்று அதை மனதில் இருத்தி வைக்கும், இந்த சமயங்களில், தினமும் அடிக்கடி, 

ஒவ்வொரு நிகழ்வையும், குழந்தை யிடம் அக்கறை யுடன் சொல்லி வர, குழந்தைகள் அதை மனதில் உள் வாங்கி வைத்துக் கொள்ளும். 

இந்த சமயங் களில், குழந்தைக்கு, உறவுகளை அறிமுகம் செய்து, அவர்களுடன் பேச வைக்கலாம், 

தாயின் பேச்சுக்கும், தந்தையின் வார்த்தை க்கும், தாத்தா, பாட்டி, மாமா, அத்தை போன்ற உறவுகளின் வித்தியாசங் களை, அவர்கள் உடல் மொழியின் மூலம், பேச்சின் மூலம், குழந்தைகள் அறிந்து கொள்ளும். 

குழந்தை களின் பேச்சின் வடிவமே, அவற்றின் கைகள் அசைவு! சில குழந்தைகள், நாம் பேசும் போது, அவற்றின் மறு மொழியாக, அதன் கைகளை அசைத்துக் காட்டும், 

அதே போல, உறவு அல்லது நட்பு யாரேனும் வருவது அறிந்து, கைகளை அசைக்கும், அதன் விளக்கம் தெரியாமல், நாம் விழித்தாலும், 

அது சொல்ல வருவது, மாமா வருகிறார்கள், சித்தி வருகிறார்கள் என்று தாயிடம் உரைக்கவே, இளம் குழந்தைகள், பேச முயற்சிக்கும் சமயத்தில், வார்த்தை களின்றி, 

அவற்றின் கை அசைவுகள் மூலம், தாம் பேச எண்ணி யதைக் கூற முயற்சிக்கும் என்கிறார்கள், குழந்தைகள் மனநல மருத்துவர்கள். 

தாம் கேட்கும் சப்தங்களை உள்வாங்கி, வார்த்தை களை உருவாக்கும் முயற்சியின் வெளிப்பாடு தான், குழந்தை களின் கையசைத்தல். 

பேச்சுக்களில் குழந்தைகள் பெறும் சிறந்த அனுபவங்களே, அவற்றின் பிற்கால சிந்தனை களின் அடிப்படை யாக, அமைகின்றன என்கிறார்கள், உளவியல் நிபுணர்கள். 

குழந்தை களின் எட்டு மாதம் முதல் நாம் பேச வேண்டியவை! குழந்தை களுக்கு எட்டு மாதங்களில் இருந்து, பேச்சின் தன்மை புரிந்து, பதிலைப்பேச முயற்சிக்கும் கால கட்டமாகும். 

இந்த காலங்களில், குழந்தைகள் நடக்க முயற்சித்து, பேச ஆரம்பிக்கும். நாம் குழந்தை களிடம் ஒவ்வொரு விசயத்தை யும், 


எளிமை யாக விளக்க மாக, அவை எதனால் நமக்கு அவசிய மாகிறது, அதனால் என்ன நன்மைகள் என்று பொறுமை யாக பேசி வர வேண்டும். 

குழந்தை களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்

அன்றாடம் வீடுகளில் உபயோகிக்கும் பொருட்களின் பெயர்கள், அவற்றின் பயன்கள், காய்கறிகள், பழங்கள் என்று ஒவ்வொன் றாக, 

குழந்தைகள் மனதில் பதியும் வகையில் நாம் வண்ணப் படங்க ளுடன் விளக்கிக் கூறி வர, குழந்தைகள் அவற்றை, மனதில் பதிய வைத்துக் கொள்ளும். 

இது போல, இயற்கை, மரம், செடிகள், காற்று, மழை, நீர் போன்ற வற்றை, அவை நமக்கு செய்யும் நன்மை களைப் பற்றி அடிக்கடி குழந்தை களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும், எப்படி என்றால், 

நமக்கு விருப்ப மான பள்ளி அல்லது கல்லூரி கால நட்புகள், நம் ஊருக்கு வரும் போது, அவர்களிடம் வெகு ஆர்வமாக, 

நாம் சிறு வயதில் விளையாடிய இடங்கள், திருட்டு மாங்காய் பறித்த தோப்புகள், சைக்கிளில் கீழே விழுந்த கோவில் தெரு, வாய்க்காலில் நீச்சலடித்த நிகழ்வுகள், 

அடிக்கடி சண்டை போட்டு பிரிந்து, பின்னர் சேர்ந்து கொள்ளும் ஸ்கூல் கால தோழனின் நட்பை, ஸ்கூல் வாசலில் இலந்தைப் பழம் விற்ற பாட்டி போன்ற 

இள வயது அனுபவங் களை, எவ்வளவு சுவாரஸ்ய மாக, நாம் அந்த காலத்துக்கே திரும்பியது போன்ற பரவச உணர்வுடன் சொல்லி, 

அந்த இடங்களில் புது நட்புடன் உற்சாக மாக உலா வருவோம் அல்லவா? அது போல, குழந்தை களுடன் குழந்தையாகி, அவர்களை வளர்க்க வேண்டும். 

பழைய நினைவு களில், புதிய நட்பையும் இணைத்து பார்ப்பதே, நம்முடைய அந்த பரவசத்து க்குக் காரணமாக அமைகிறது. 

அது போல, நாம் இத்தனை வயது வரை வாழ்ந்து வந்த உலகினில், இப்போது இன்னொரு சிறிய உயிரும் சேர்ந்து கொள்ளப் போகிறது என்ற 

உணர்வின் பெரு மிதத்தில், நாம், ஒவ்வொரு விசயமாக, நுணுக்க மாக, எளிமையான முறையில் குழந்தை களிடம் பகிர, குழந்தைகள் 

அந்த விசயங் களில் ஈடு பாட்டுடன் செயல் பட்டு, மனதில் உள்வாங்கிக் கொள்ளும். 

குழந்தை களின் கற்பனைத் திறனை வளர்க்கும் கதைகளை சொல்லுதல்.. 

இது போல, இரவில் தூங்கும் போது கதை சொல்லுதல், கதைகளின் விளக்கத்தை புரியும் படி சொல்லுதல், கதைகளின் இடையே குழந்தை களின் கற்பனைத் திறனை வளர்க்கும் வகையில், 

கேள்விகள் கேட்டல் போன்ற வற்றில் நாம் ஈடுபடும் போது, குழந்தை களின் ஆழ் மனதில் நல்ல சிந்தனைகள் ஆழமாகப் படிவதற்கு வாய்ப்பாகும். 

இரவில் கற்பனை களைத் தூண்டும் கதைகளைக் கேட்டு வளரும் குழந்தைகள், பிற்காலத் தில், பலபிரச்னை களுக்கு 

அழுத்தமான தீர்வு காணும் மன நிலையைப் பெற்றிருப் பார்கள், என்று உளவிய லாளர்கள் கூறு கிறார்கள். 

பொருள் உணர ஆரம்பிக்கும்

மேலும், குழந்தை களை தூங்க வைக்கும் போது, தாலாட்டு பாடும் போது, தாயின் குரலில் உள்ள இனிமையும், தாய்மையின் நெருக்கமும், குழந்தை களுக்கு பாதுகாப்பு உணர்ச்சியை அளித்து, 

அவற்றின் தன்னம் பிக்கையை அதிகரிக்கும். ஒரு குழந்தை தன்னுடைய ஒரு வயதில், சற்றேறக் குறைய ஐம்பது வார்த்தை களைத் தெரிந் திருக்கும், 

அதுவே அடுத்த வருடத்தில் நானூறுக்கும் அதிகமான வார்த்தை களைத் தெரிந்தி ருக்கும் என்கி றார்கள் குழந்தை வளர்ப்பியல் ஆலோசகர்கள். 

இந்த சமயங்களில் குழந்தை களுக்கு மூதோர் வாக்குகள், மகான்களின் போதனைகள் போன்ற வற்றை மனதில் இருத்த, சிறந்த கால கட்டமாகும். 

குழந்தைகள் அவற்றின் பொருள் உணர ஆரம்பிக்கும். இது போலவே, அறிவியல், கணிதம் போன்ற வற்றின் சிறு கோட்பாடு களை எளிமை யாக எடுத்துக் கூறலாம், 

சிறந்த இசை மேதைகளின் இசையை கேட்க வைக்க லாம், பாடக ர்களின் இன்னிசையை, குரல் வளத்தை அறிமுகப் படுத்தலாம். 

வண்ணங் களின் தன்மைகளை விளக்கலாம், இது போன்று நீங்கள் குழந்தை களை, எந்த நிலைக்கு உயர்த்த வேண்டும் 

என்று எண்ணு கிறீர்களோ அந்த நிலைக்கு ஏற்ற வகையில் கருத்துக் களை, சிந்தனைகளை அவர்களின் மனதில் பதிய வைக்கலாம். 

மேலை நாடு

மேலை நாடுகளில், நீச்சலுக்கு முக்கியத் துவம் கொடுப்பார்கள், அங்கே, சில தாய்மார்கள் தங்களின் பிரசவத்தை தண்ணீரில் நடத்த விரும்பு கிறார்கள், 

காரணம், மகவீனும் சமயத்தில் ஏற்படும் கடுமை யான உடல் வலி பாதிப்புகள் உடல் அசதி குறையும் என்ற நம்பிக்கை. மற்றொன்று, 

தங்கள் குழந்தை, தண்ணீரில் பிறப்பதால், நீச்சலில் சாதனை படைப்பார்கள் என்ற எண்ண த்தில். பிறந்த குழந்தையை தண்ணீரில் போட்டு, நீந்தப் பழக வைக்கி றார்கள். 

தமது வேலை களைத் தாமே செய்ய வேண்டும்

சிலர், தங்கள் குழந்தை களை, இள வயதிலேயே, வீட்டு வேலைகளை செய்யப் பழக்கு வார்கள். குளித்த பின் ஈரத் துணியை அதற்கான இடத்தில் போடுவது, 

சாப்பிட்ட தட்டை, பாத்திரம் கழுவும் இடத்தில் வைப்பது, சாப்பிட்ட பின் சிங்கில் சென்று கை கழுவுவது, பாட புத்தகங் களை முறையாக பராமரிப்பது, 

பள்ளி சென்று வந்த பின் யூனிபார்ம் களை கழற்றி, கைகால் கழுவுவது என்று. பலவேலைகள் செய்ய வைப்பார்கள். 

இவை யாவும், குழந்தை களுக்கு சுறு சுறுப்பையும், தமது வேலை களைத் தாமே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை, இள வயதில் இருந்தே, மனதில் பதிய வைப்பதற்கே. 
Tags: