கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசிகள் !

Fakrudeen Ali Ahamed
நோய் தொற்றி லிருந்து காப்பா ற்றுவது தடுப் பூசிகள். சரியான நேரத்தில் அவற்றைப் போடத் தவறுவது எவ்வளவு முக்கிய மானதோ, அதை விட முக்கிய மானது தவறான நேரத்தில் போடுவதும்.

குறிப்பாக கர்ப்பம் தரிப் பதற்கு முன்பும், கர்ப்பம் தரித்த பிறகும் போடக் கூடிய தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு பெண் ணுக்கும் மிக அவசிய மாகும்.

குழந்தை பிறந்ததும் 10 முதல் 12 மாதங்க ளுக்குள் எம்.எம்.ஆர் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, புட்டா லம்மை உள்ளிட்ட பல அம்மைத் தொற்று களுக்கு எதிராகப் போராடக் கூடியது இந்தத் தடுப்பூசி.

ஒரு வேளை 10 முதல் 12 மாதங் களில் இந்த ஊசி போடா விட்டால், 13 வயதுக்குள் போடப் பட வேண்டும்.

பெண் குழந்தை களுக்கு இது மிகவும் முக்கியம். அதைத் தவிர்த்து, திருமண வயதில் போட நினைக்கக் கூடாது.

தவிர்க்க முடியா மல் அப்படிப் போட நேர்ந்தால், அந்த ஊசியைப் போட்டதை அடுத்து,

4 மாதங்கள் முதல் 1 வருடம் வரை கருத்த ரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அந்தக் காலக் கட்டம் வரைக்கும் அந்தத் தடுப்பூ சியின் தாக்கம் உடலுக்குள் இருக்கும் என்பதே காரணம்.

இந்த ஊசி போடாத பட்சத்தில் அந்தப் பெண்ணு க்குக் பிறக்கும் குழந்தை க்கு கண் பார்வை பாதிப்பு,

காது கேளாமை, மூளைக் காய்ச்சல், மூளை பாதிப்பு, வலிப்பு நோய் போன்றவை வரலாம்.

நரம்பில் உருவாகும் செல்கள் பாதிக்கப் பட்டு, அதன் விளை வாக பல நோய்களும் வரலாம்.

கர்ப்பிணி கள் தவிர்க்கக் கூடாத இன்னொரு ஊசி டெட்டனஸ் டாக்சைட். பிரசவ காலத்தில் ஏற்படுகிற டெட்டனஸ் தொற்றானது,

நஞ்சுக் கொடியைத் தாக்கி, குழந்தை இறந்து போகும் அளவுக்கு ஆபத்தை ஏற்படு த்தலாம். தாயின் உயிருக்கும் ஆபத்து உண்டு.

கர்ப்ப காலத்தில் 2 டோஸ் போடக் கூடிய இந்த தடுப்பூசி யானது பாதுகாப் பானது.

 டைஃபாய்டு, நிமோனியா காய்ச்சல், ஹெபடை ட்டிஸ் பி போன்ற வற்றுக்கான தடுப் பூசிகளை கர்ப்ப காலத்தில் போடவே கூடாது.

கணவருக்கு ஹெபடை ட்டிஸ் பி தொற்று இருப்பது தெரிந்தால், அதன் மூலம் மனைவி க்கும் பாதிப்பு வரலாம்.

எனவே அதற்கெ திரான தடுப் பூசியை அந்தப் பெண் போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த ஊசியையும் போட்டுக் கொண்டு 2 மாதங்க ளுக்கு கர்ப்பம் தரிக்கா மலிருப்பது பாதுகாப் பானது.

கர்ப்ப மாக இருக்கும் பெண்ணின் வீட்டில், வேறு யாருக் காவது பறவைக் காய்ச்சல், அம்மை போன்ற தொற்று வந்தால், கர்ப்பிணிப் பெண்ணு க்கு தடுப்பூசி போட முடியாது.

தொற்று ஏற்பட் டவர்களிட மிருந்து, கர்ப்பிணிப் பெண்ணைப் பிரித்து வைப்பது தான் தீர்வு.

கர்ப்பி ணிப் பெண்ணை நாய் கடித்தால், அதன் பாதிப்பி லிருந்து காப்பாற்ற, ரேபிஸ் ஊசி போடப் பட வேண்டும்.

அந்த நேரத்தில் கர்ப்பி ணியின் உயிர்தான் பெரிதாகப் பார்க்கப் பட வேண்டுமே தவிர,

கருவைக் காப்பாற்றும் எண்ண த்தில் ஊசியைத் தவிர்க்க நினைப்பது ஆபத் தானது...
Tags: