முக அழகுக்கு கற்றாழை உங்களுக்கு தெரியுமா?

Fakrudeen Ali Ahamed
ஒவ்வொரு வரும் மற்ற வர்கள் முன்பு அழகாக காட்சி யளிக்க வேண்டு மென்று நினைப் போம். அதற்காக பல முயற்சி களையும் மேற் கொள்வோம். 

குறிப்பாக சற்று கருப்பாக இருப்ப வர்கள், வெள்ளை யாவதற்கு பல முயற்சி களை எடுப்பார் கள். மேலும் வேறு வழிகள் ஏதேனும் உள்ளதா என்றும் தேடு வார்கள்.

நீங்களும் அப்படி வெள்ளை யாக வழி களைத் தேடுபவரா? அப்படி யெனில் எளிதில் கிடைக்கும் கற்றா ழையைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள். 

கற்றாழை மருத்துவ குணங் களை உள்ளட க்கிய ஓர் அற்புத மான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித் தால், சரும பிரச்சனை களும் விரை வில் நீங்கும்.

சரி,  இப்போது வெள்ளை யாவதற்கு கற்றா ழையைக் கொண்டு எப்படி யெல்லாம் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.

1 . சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் 

தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெது வெதுப் பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமைகள் அகலும்.

2 . ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, 

பின் கழுவும் முன், சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் 

மற்றும் முதுமைப் புள்ளிகள் போன் றவை மறைந்து, முகமும் பொலி வோடு காணப்படும்.

3 . இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தி னருக்கு பொருந்த மானவை.

அதற்கு கற்றாழை இலையை எடுத்து, அதன் கூர்மை யான முனை களை கத்தியால் நீக்கி விட்டு, 

நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, 

முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்ற த்தைக் காண முடியும்.

4 . உங்களு க்கு சென்சிடிவ் சருமம் என்றால் கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக் காய் சாறு, தயிர் மற்றும் ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, 

கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 

இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள அழுக்கு களை முழுமை யாக வெளியேற்றி, முகத்தின் பொலிவை அதிகரிக்கும்.

5 . இந்த ஃபேஸ் பேக் வறட்சியான சருமத் திற்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல்லு டன், காட்டேஜ் சீஸ், பேரிச்சம் பழம் 

மற்றும் வெள்ளரிக் காய் சேர்த்து அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து,

கழுத்து மற்றும் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

6 . இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை அதிகரிப் பதோடு, முகத்தை புத்துணர்ச்சி யுடனும், பிரகாச மாகவும் வெளிக் காட்டும். 

அதற்கு கற்றாழை ஜெல்லுடன் மாம்பழ கூழ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து,

முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

7 . வெள்ளரிக் காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து,

முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 

இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமை யாக வெளியேறி, முகம் பிரகாச மாக இருக்கும்.
Tags: