மூக்கின் மேல் இருக்கும் சொரசொரப்பை நீக்க !

Fakrudeen Ali Ahamed
ஆண்கள், பெண்கள் என அனைவ ருக்குமே பட்டுப் போன்ற மென்மை யான சருமம் வேண்டு மென்ற ஆசை இருக்கும்.

ஆனால் அதற்கு இடையூறை விளை விக்கும் வண்ணம் பருக்கள், கரும் புள்ளிகள் போன்றவை முகத்தில் ஏற்பட்டு விடும்.

ஒரு வேளை பருக்கள் முகத்தில் இல்லாமல் இருந்தாலும், மூக்கின் மேல் மற்றும் அதனைச் சுற்றிய இடங்கள்

மட்டும் சொர சொர வென்று லேசாக கருப்பா கவும், வெள்ளை யாகவும் இருக்கும்.

கரும்புள்ளி பிரச்சனை யானது எண்ணெய் பசை சருமத்தி னருக்கு தான் அதிகம் இருக்கும்.

அதிலும் சருமத்துளை களில் இருந்து வெளிவரும் எண்ணெ யானது வெளியே றாமல் அடைக்கப் படும் போது ஏற்படும்.

சருமத் தின் மென்மையைத் தடுக்கும் கரும்புள்ளி பிரச்சனையை தடுக்க சமைய லறையிலேயே நிறைய பொருட்கள் உள்ளன. இங்கு கரும் புள்ளியை நீக்க உதவும்

சமைய லறைப் பொருட்கள் என்ன வென்று கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து 

அதனை அன்றாடம் செய்து உங்கள் முகத்தை பட்டுப் போன்று மென்மை யாக வைத்துக் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு

உருளைக் கிழங்கை வட்டமாக நறுக்கி, அதனைக் கொண்டு சொர சொர வென்று உள்ள கரும் புள்ளிகள் இருக்கும்

இடத்தில் சிறிது நேரம் நன்கு தேய்த்து, பின் நீரில் கழுவி, துணியால் அழுத்தி துடைத் தால், கரும் புள்ளிகள் நீங்கி, சருமம் மென்மை யாக இருக்கும்.

தேன்

தேன் கூட கரும்புள்ளி களைப் போக்க உதவும். அதற்கு தேனை லேசாக சூடேற்றி, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து,
பின் அதனை மூக்கின் மேல் தடவி லேசாக மசாஜ் செய்து, முகத்தை கழுவினால், கரும் புள்ளிகள் நீங்கும்.

பட்டையுடன் தேன்

பட்டையை பொடி செய்து அதனை தேனில் கலந்து, முகத்தில் தடவி தேய்த்து கழுவினால், கரும் புள்ளி களானது விரைவில் மறையும்.

தக்காளி

தக்காளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவி துணியால் துடைத்தால்,

முகத்தில் உள்ள அதிகப் படியான எண்ணெய் பசை நீங்குவ தோடு, கரும்புள்ளி களும் போய் விடும்.

கார்ன் ஸ்டார்ச்

கார்ன் ஸ்டார்ச்சில் தண்ணீர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, பின் தேய்த்து கழுவினால், முகத்தில் உள்ள சொரசொரப்பு நீங்கும்.
ஆவிப்பிடிப்பது

அனைத்தை யும் விட ஆவிப் பிடிப்பது தான் மிகவும் சிறப்பான வழி. அதிலும் சுடுநீரில்

மூலிகை களான லாவெண்டர், எலுமிச்சை தோல் மற்றும் புதினா இலைகள் ஆகிய வற்றை சேர்த்து,

ஆவிப் பிடித்து சுத்தமான துணியால் முகத்தை துடைத்தால், முகம் புத்துணர்ச்சி யாக இருப்பதுடன், கரும்புள்ளி களும் விரைவில் மறையும்.


பால்

தினமும் 2-3 முறை பாலை பஞ்சில் நனைத்து, முகத்தை துடைத்து எடுத்தால், முகத்தில் உள்ள அழுக்குகள்

மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலி வோடும் மென்மை யாகவும் இருக்கும்.

கற்றாழை
கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கற்றாழை துண்டு கொண்டு மேல்புறம் நோக்கி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட் கூட கரும்புள்ளிகளை நீக்க உதவும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன்,

டூத் பேஸ்ட்டை மூக்கின் மேல் தடவி நன்கு உலர்ந்ததும், அதனை மேல்புறம் நோக்கி உரித்து எடுத்தால், கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

சர்க்கரை

கரும்புள்ளிகளை நீக்க சர்க்கரை கூட பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஈரமான முகத்தில் சர்க்கரைக் கொண்டு

மென்மை யாக தேய்த்தால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் போய் விடும்.
Tags: