புதுப்பெண்ணும், புது உறவும், அதனால் ஏற்படும் தடுமாற்றமும் !

Fakrudeen Ali Ahamed
திருமணமான ஆரம்ப காலத்தில் கணவருடைய குடும்பத்தி னருடன் உறவை பேணுவதில்

புதுப்பெண் களுக்கு ஒருவித தயக்கமும், தடுமாற்ற மும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

புதிதாக திருமண மான தம்பதியர் களுக்குள் ஆரம்ப காலத்தில் புரிதல் என்பது குறைவாகவே இருக்கும். 

காதல் திருமணமாகவோ, நிச்சயித்த திருமண மாகவோ இருந்தாலும் இல்லற வாழ்க்கை யில் ஒன்றிணைந்து செயல்படும் போது ஒருவித தடுமாற்றம் ஏற்படும்.

ஒருவருக்கொருவர் சரிவர புரிந்து கொள்வதற்கு சில காலம் பிடிக்கும். அப்படியி ருக்கையில் 

கணவருடைய குடும்பத் தினருடன் உறவை பேணுவதில் புதுப்பெண் களுக்கு ஒருவித தயக்கமும், தடுமாற் றமும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. 

புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங் களை பார்ப்போம்.

* கணவர் குடும்பத்தி னருக்குள் பிரச்சினை ஏற்படும் விதத்தில் புதுப்பெண்ணின் தலையீடு இருக்கக் கூடாது. 

தேவை யில்லாமல் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால் புதுப் பெண்ணின் குணாதி சயங்களை கணவரின் குடும்பத் தினர் சரியாக புரிந்து கொள்ளாத பட்சத்தில் அது அவளுக்கு பாதக மாகவே அமையும்.

கணவரை அவருடைய குடும்பத்தினர் வசை பாடுவதாகவே இருந்தாலும் பிரச்சினையின் வீரியத்தை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். 

அதிலும் அவருடைய பெற்றோர் மகனின் தவறுகளை கண்டிக்கும் போது அமைதி காப்பதே நல்லது.

* கணவர் வீட்டினர் தன்னை ‘என்ன நினைப் பார்களோ’ என்று நினைத்து புதுப்பெண் தன்னுடைய இயல்பான சுபாவத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசிய மில்லை.

அப் படியே மாற்ற முயற்சித் தாலும் அது நீண்ட நாட்களுக்கு கைக் கொடுக்காது.


அவள் அவளாகவே இருப்பது தான் அவளை பற்றி கணவர் குடும்பத் தினர் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.

தனக்கு தெரியாத விஷயங் களை தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவும் முயற்சிக்கக் கூடாது. 

அவள் வெளிப் படையாக பேசுவது அவர்கள் எளிதில் புரிந்து கொள்ள உதவும்.

* திருமண மான புதிதில் தம்பதியர் ஒருவருக் கொருவர் புரிந்து கொள்வ தற்கும், நேசத்தை அதிகப் படுத்திக் கொள்வதற்கும் ஆர்வம் காண்பிக்க வேண்டும். 

வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொரு வரை பற்றியும், அவர்களுடைய சுபாவங்கள் குறித்தும் கணவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

கணவரே தனது குடும்பத் தில் உள்ள சிலரை பற்றி குறை கூறினாலும், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 

அனைவரிடமும் அன்புடன் பழக முயற்சிக்க வேண்டும்.
ஆரம்பத் திலேயே ஒதுங்கி இருக்க முயற்சிப்பது புதுப் பெண்ணை பற்றி தவறான அபிப்பிரா யத்தை விதைத்து விடும்.

* கணவரின் உடன் பிறந்தவர் களிடம் சகஜமாக பழகுவது என்பது சிக்கலான விஷயம் தான். 

அவர்களும் புதுப்பெண் ணிடம் பழக தயங்கத் தான் செய் வார்கள்.

அதிலும் நாத்தனாரிடம் நல்ல நட்புறவை ஆரம்பத் திலேயே வளர்த்து கொள்ளா விட்டால் இருவருக்கு மிடையே தவறான புரிதல் உருவாகி விடும். 

தோழியிடம் பழகுவது போல சகஜமாக சிரித்து பேசி உறவை வலுப் படுத்தி கொண்டால் அது கடைசி வரை சுமுகமாக நீடிக்கும்.

* கணவர் வீட்டில் இருக்கும் மற்ற பெண்க ளிடம் குழந்தைகள் மூலமாகவே உறவை வளர்த்து கொள்ளலாம். 

வீட்டில் இருக்கும் குழந்தை களுடன் அதிக நேரத்தை செல விடும் போது அது வீட்டில் உள்ளவர் களுடனும் நெருக்கத்தை அதிகப் படுத்தும்.

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைக்கு உணவு ஊட்டி விடுவது, பாடம் சொல்லிக் கொடுப்பது, அவர்க ளுடன் சேர்ந்து விளை யாடுவது என 

நெருக்க த்தை அதிகப் படுத்திக் கொள்ளலாம். சமையல் வேலை களை பகிர்ந்து கொள்வதும் உறவை மேம்படுத்த உதவும்.

* புகுந்த வீட்டு உறவையும், பிறந்த வீட்டு உறவையும் சரிசம மாக பேண வேண்டும்.

ஒரேடியாக பிறந்த வீட்டு உறவை பற்றி பெருமை பேசுவதும், புகுந்த வீட்டினரின் செயல் பாடுகளை தனது வீட்டினருடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுவதும் கூடாது.

புகுந்த வீட்டினருடன் நெரு க்கத்தை அதிகப் படுத்த வேண்டும் என்பதற்காக பிறந்த வீட்டு உறவை உதாசீனப் படுத்துவதும் கூடாது. 

இரு குடும்பத் தினரும் உறவை வளர்த்துக் கொள்வதற்கு இணைப்பு பாலமாக புதுப்பெண் செயல்பட வேண்டும்.

* புகுந்த வீட்டினருடன் சுமுக உறவை பேணுவதில் மாமியார் - மருமகள் இடையே யான பந்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. 

மாமியாரை அன்னிய நபராக அணுகுவது அல்லது அவரிடம் இருந்து ஒதுங்கி இருக்க முயற்சிப்பது தான் பிரச்சினை யின் தொடக்கமாக அமையும்.

ஆரம்பத்தி லேயே அவரையும் தன்னுடைய குடும்ப உறவுகளில் ஒருவராக பாவிப்பது இடைவெளி தோன்று வதற்கு இடம் கொடுக்காது. 

அவரையும் தாயார் ஸ்தானத்தில் வைத்து தக்க மரியாதை யுடன் பழக ஆரம்பித்தாலே போதும். உறவு வலுப்பட்டு விடும்.

* புதுப்பெண் கணவருட னான பந்தத்தையும் சுமுகமாக தொடர வேண்டும். அவருடைய அன்றாட நடவடி க்கைகள், பழக்க வழக்கங்கள், 

அவருடைய குடும்ப உள் விவகாரங்கள் போன்ற வற்றில் தேவையி ல்லாமல் தலை யிடுவதை தவிர்க்க வேண்டும்.

அது கணவன் - மனைவி இடையே யான உறவில் பங்கத்தை ஏற்படுத்தி விடும். 

தன்னுடைய சுதந்திரம் பறிபோய்க் கொண்டி ருப்பதாக உணரும் நிலையை கணவருக்கு ஏற்படுத்தி விடக் கூடாது.

அதற்காக கணவரின் நடவடி க்கைகளை கண்டும், காணாமல் இருந்து விடவும் கூடாது. 

அவருடைய போக்கிலேயே சென்று நிறை, குறைகளை மனம் நோகாமல் எடுத்துக் கூறலாம்.
* குடும்ப பட்ஜெட்டை நிர்வகித்து அனாவசிய செலவு களை கட்டுப் படுத்த முயற் சிப்பதில் தவறில்லை. 

ஆனால் அது கணவரின் குடும்ப உறவுகளு க்குள் புகைச் சலையோ, மனக் கசப்பையோ ஏற்படுத்தி விடக் கூடாது.

அவர்க ளுடைய வழக்கமான பழக்க வழக்கங்கள், செலவு களில் தலையிட முயற்சிப்பது வீண் சச்சரவு களையே ஏற்படுத்தும். 

குடும்ப வரவு - செலவு களில் கணவரிடம் எடுத்துக் கொள்ளும் உரிமையை மற்றவர் களிடமும் காண்பிக்க நினைப்பது உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தும்.

* கடந்த கால வாழ்க்கையைப் பற்றி கூறும் ஆர்வத்தில் மனதில் தோன்று வதை யெல்லாம் அப்படியே கொட்டி விடக் கூடாது. 

அது பிரச்சினை யில் தானாகவே மாட்டிக் கொள்வதற்கு வழி வகுத்து விடும்.

வாழ்க்கைப் பயணத்தில் கூடவே வரும் துணை யுடன் மனம் விட்டு பேசுவதற்கு காலங்கள் காத்திருக் கின்றன. 

பிரச்சினையை உண்டாக் குபவை எவை, அவசியம் பேசிய ஆக வேண்டிய விஷய ங்கள் எவை, 

பேசக் கூடாத விஷயங்கள் எவை என மனத் திரையில் அசை போட்டு அதன் பிறகு தேவைப் பட்டால் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம். 

அனுசரித்து போவதும், அநாவசிய பேச்சை தவிர்ப்பதும் இல்லறம் என்றும் நல்லற மாக அமைய வித்திடும்.
Tags: